Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
ஆடி அமாவாசை ஸ்பெஷலா.. அடுப்பே இல்லாம பாயாசம் செய்யலாம் தெரியுமா?- எப்படின்னு பாருங்க...
Aadi Amavasai 2024 Special Coconut Milk Payasam Without Fire: இன்று ஆடி அமாவாசை என்பதால் பலரது வீடுகளில் வடை பாயாசத்துடன் சமையல் செய்து, முன்னோர்களுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். நீங்கள் உங்கள் வீட்டில் பாயாசம் செய்வதாக இருந்தால் எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் செய்வீர்களா?
சற்று வித்தியாசமான சுவையில் பாசாயம் செய்து கொடுக்க உங்கள் வீட்டில் உள்ளோர் கேட்கிறார்களா? அப்படியானால் தேங்காய் பால் பாயாசம் செய்யுங்கள். அதுவும் அடுப்பே இல்லாமல் சூப்பரான சுவையில் பாயாசம் செய்யுங்கள். இந்த பாயாசம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, இது சத்தானதும் கூட. முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும் மற்றும் உடலுக்கு குளிர்ச்சியும் கூட.

உங்களுக்கு அடுப்பே இல்லாமல் பாயாசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அடுப்பு பயன்படுத்தாமல் எப்படி பாயாசம் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாதாம் பிசின் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 டம்ளர்
* பாதாம் - 15
* முந்திரி - 15
* தேங்காய் - 1
* சர்க்கரை - 1/2 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* பாதாம், முந்திரி, பிஸ்தா - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசினை
எடுத்து, அத்துடன் 2 டம்ளர் நீரை ஊற்றி, குறைந்தது 5 மணிநேரம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பாதாம் மற்றும் முந்திரியை சுடுநீரில் போட்டு 2 மணிநேரம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஊற வைத்த பாதாமின் தோலை நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு,
ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு முழு தேங்காயை எடுத்து, அதை அரைத்து தேங்காய் பால்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த பாதாம் பிசினை எடுத்து, அத்துடன்
தேங்காய் பாலை ஊற்றி, அரைத்து வைத்துள்ள பாதாம், முந்திரியை சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் சர்க்கரையை சேர்த்து, அத்துடன் 1/4 டீஸ்பூன்
உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பாதாம், முந்திரி,
பிஸ்தாவை சேர்த்து நன்கு கலந்தால், சுவையான பாயாசம் தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications









