Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்தியாவில் குழந்தைகளுக்கு எந்த வயதில் ஸ்மார்ட்போன் கொடுப்பது நல்லது? ஆய்வு சொல்லும் உண்மை என்ன?
Parenting Tips: குழந்தைகளை வளர்ப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதற்கு அதிகளவு பொறுமையும், பொறுப்புணர்வும் தேவை. இன்று அனைத்து பெற்றோர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய கவலை அவர்களின் குழந்தைகளுடைய செல்போன் பயன்பாடுதான்.
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளுமே மொபைல் போனிற்கு அடிமையாகும் நிலையில், தான் உள்ளனர்.நம்மைச் சுற்றியுள்ள தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வருவதால், குழந்தை வளர்ப்பில் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாட்டைச் சுற்றி ஆரோக்கியமான எல்லைகளை அமைப்பது பெற்றோரின் முக்கிய பகுதியாக மாறிவிட்டது.

அதனால்தான் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தை ஸ்மார்ட்போன் வைத்திருக்க தயாரா இல்லையா என்பதில் மிகுந்த சந்தேகம் கொண்டுள்ளனர்.ஸ்மார்ட் போன் இல்லாத உலகை தற்போது யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது, அதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல. கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளால் இந்த பழக்கம் மிகவும் அதிகரித்துவிட்டது. குழந்தைகளின் இந்த செல்போன் பயன்பாட்டில் நன்மைகள் இருந்தாலும் அதில் பல தீமைகள் உள்ளதை மறுக்க முடியாது.
உங்கள் குழந்தைகள் எப்போதும் போனை நோண்டிக்கொண்டே இருக்கிறார்களா? நீங்களும் இந்த இக்கட்டான நிலையை எதிர்த்துப் போராடியிருந்தால், நீங்கள் தனியாக இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இந்த பிரச்சினையை கோடிக்கணக்கான பெற்றோர்கள் உலகம் முழுவதும் அனுபவிக்கின்றனர். உங்கள் குழந்தைக்கு டிஜிட்டல் சாதனத்தை ஒப்படைக்கும் போது, நன்மை தீமைகளை முன்கூட்டியே எடைபோடுவது முக்கியம். ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் போனை உபயோகிக்கும்படி செய்வது உங்களின் பொறுப்பு என்பதை மறந்து விடாதீர்கள்.
சமீபத்திய ஆய்வுகளின் படி, ஒரு குழந்தையின் முதல் ஸ்மார்ட்ஃபோனைப் பெறுவதற்கான சராசரி வயது தற்போது 10.3 ஆண்டுகள் ஆகும். 12 வயதிற்குள், 50 சதவீத குழந்தைகள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளை வைத்திருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது. இது மிகவும் ஆபத்தான போக்காகும்.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், தனது குழந்தைகளுக்கு 14 வயது வரை மொபைல் போன்களைக் கொடுக்கவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் இரவு உணவு மேஜையில் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து, தனது குழந்தைகளுக்கான திரை நேரத்தையும் அமைத்துள்ளதாக கூறியுள்ளார். சில அத்தியாவசிய தேவைகளுக்காக அவர்கள் போனை உபயோகிக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஆய்வுகளின் படி, 10 முதல் 12 வரையிலான காலகட்டம் உலகம் முழுவதும் குழந்தைகள் தொலைபேசியை பெறும் வயதாக இருக்கிறது, ஏனென்றால் குழந்தைகள் அந்த வயதில் பெற்றோருடன் மிகவும் இணைந்திருக்கிறார்கள், எனவே அவர்கள் பாதுகாப்பாக போனை உபயோகிக்க வழிநடத்தப்படுகிறார்கள்.
2022-ல் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி 13 முதல் 17 வயதுக்குட்பட்ட 95% குழந்தைகள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர். இது கடந்த காலங்களை விட மிக அதிகமாகும். 13 முதல் 14 வயதுடையவர்களை விட 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் ஸ்மார்ட்போன்களை அதிகமாக உபயோகிப்பதாகவும் ஆய்வுகள் கண்டறிந்துள்ளது.
2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் போது 73% சதவீத குழந்தைகள் ஸ்மார்ட்போனை உபயோகித்து வந்தனர். ஆனால் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது என்னவெனில், உங்கள் குழந்தைக்கு தொலைபேசியைக் கொடுக்க சரியான அல்லது தவறான வயது இல்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானவர்கள் மற்றும் அவர்களின் முதிர்வு நிலையும் மாறுபடும்.
எனவே உங்கள் குழந்தை தயாராக இருப்பதாக நீங்கள் பெற்றோராக உணரும்போது சரியான வயது, அது 8 ஆம் வகுப்பு அல்லது உயர்நிலைப் பள்ளி முடிந்த பிறகுமாக கூட இருக்கலாம். ஸ்மார்ட்ஃபோன் இல்லாமல் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள் மற்றும் சமூகப் பொறுப்புகளைக் கையாளும் அளவுக்கு அவர்கள் பொறுப்பானவர்கள் என்று நீங்கள் உணர்ந்தால் அவர்களிடம் போனைக் கொடுக்கலாம்.



Click it and Unblock the Notifications













