Latest Updates
-
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
பெற்றோர்களே! உங்க குழந்தைங்க பரீட்சையில முதல் மார்க் எடுக்க... இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் திறமையானவர்களாகவும் புத்திசாலியாகவும் வளரதான் விரும்புவார்கள். அதற்கான திறன்களை வளர்க்க குழந்தைக்கு பெற்றோர்கள்தான் உதவ வேண்டும். உங்கள் குழந்தை பரீட்ச்சையில் நல்ல மதிப்பெண் பெற நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை மற்றவர்களை விட சிறப்பாக செயல்பட வைக்க முயற்சி செய்கிறார்கள். வகுப்பில் முதல் மாணவராக தங்கள் குழந்தை வர வேண்டும் என்றும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கிறார்கள். அதற்காக சில பெற்றோர்கள் குழந்தைகளை தவறான வழியில் துன்புறுத்துகிறார்கள்.

குழந்தைகளுக்கு எப்படி பாடங்களை கற்பிக்க வேண்டும் என்று பெரும்பலான பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. பாடங்களையும் போதனைகளையும் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் கற்றல் செயல்முறையின் நெறிமுறைகளை பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் பின்பற்ற மறந்து விடுகிறார்கள்.
மனப்பாடம் என்பது கல்வியின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இது பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பரீட்சைக்கு தயாராக தள்ளுவதில் மிகவும் மும்முரமாக உள்ளனர். மேலும் குழந்தைகள் வகுப்பில் முதல் ரேங்க் எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். அதனால் குழந்தைகள் படிப்பை சுமையாக கருதுகிறார்கள்.
உங்கள் குழந்தை சிறப்பானவர்களாகவும் புத்திசாலியாகவும் மாற நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அற்புதமான மனப்பாடத் தந்திரங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
அதிகாலை நேரம் அபரிமிதமான ஆற்றல் கொண்டது
கற்றுக்கொள்வதற்கும் படிப்பதற்கும் அதிகாலை எப்போதும் சிறந்தது. அதிகாலையில் எழுந்தவுடன், நீங்கள் தெளிவான மனநிலையுடன் இருப்பீர்கள். எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்கள். காலையில் முதலில் கற்றுக்கொள்வது பழங்காலத்திலிருந்து பின்பற்றப்படும் பழக்கமாகும். பண்டைக் காலத்தில் குருகுலம் இருந்தபோது சீடர்கள் அதிகாலையில் எழுந்திருப்பார்கள்.
கற்றல் செயல்முறை விடியற்காலையில் தொடங்கும். அதற்கு முன் சீடர்கள் தங்கள் காலை வேலைகளை முடித்துவிடுவார்கள். இந்த பழைய முறையை நடைமுறையில் வைப்பது நவீன குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். விஷயங்கள் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், கற்பித்தல்-கற்றல் செயல்முறை அப்படியே உள்ளது.
எல்லாவற்றையும் எழுதுங்கள்
விரல்களின் நுனிகள் மூளையின் நினைவாற்றல் கற்றலை செயல்படுத்துவதாக நம்பப்படுகிறது. இது மட்டுமின்றி, அறிவியல் படைப்புகளும் நினைவாற்றலில் எழுதும் ஆற்றலை நிரூபித்துள்ளன.
ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களின் 2021 ஆம் ஆண்டு ஆய்வில், காகிதத்தில் எழுதுவது ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தகவலை நினைவில் கொள்ளும்போது அதிக மூளையின் செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்று கண்டறிந்துள்ளது. ஃபிரான்டியர்ஸ் இன் பிஹேவியரல் நியூரோ சயின்ஸ் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
மீண்டும் மீண்டும் செய்யும் முறை
நன்றாகப் புரிந்துகொள்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் ஒரு மையத் திறவுகோல் திரும்பத் திரும்பச் சொல்வதாகும். நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை மீண்டும் மீண்டும் எழுதவும், சொல்லவும் செய்யுங்கள். எதையாவது திரும்பத் திரும்ப எழுதுவது விஷயங்களை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
குழந்தைகள் பெரும்பாலும் எழுதுவதை விரும்புவதில்லை மற்றும் ஒரு உரையைப் படிப்பதன் மூலம் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்க முடியும் என்று கருதுகிறார்கள். உங்கள் குழந்தையை மேலும் எழுத ஊக்குவிக்க வேண்டும். இது கடினமான பாடமாக இருந்தால், உங்கள் குழந்தையை மேலும் எழுதச் சொல்லுங்கள்.
உங்கள் பாடங்களை நினைவுகூருங்கள்
உங்கள் விஷயத்தை எழுதி முடித்தவுடன், அதை அப்படியே விட்டுவிடாதீர்கள். உங்கள் பிள்ளையை ஆரம்பத்திலிருந்தே கற்கத் தொடங்கச் சொல்லுங்கள், அது மறுபரிசீலனைக்கு உதவும். மீண்டும் மீண்டும் கற்றல் பாடங்களை விரைவாக மனப்பாடம் செய்ய உதவுகிறது.
குழந்தைகள் தினசரி அடிப்படையில் பல பாடங்களைப் படிக்கிறார்கள், சரியான உத்தியைப் பயன்படுத்தாவிட்டால் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் மனப்பாடம் செய்வது நடைமுறையில் சாத்தியமற்றது.
ஒரு நிலையான கால அட்டவணையைப் பின்பற்றவும்
திட்டமிடப்படாவிட்டால் எதுவும் செயல்படாது. பள்ளிகள் ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையில் இயங்குவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதை வீட்டிலும் பின்பற்றும்படி உங்கள் குழந்தையிடம் சொல்லுங்கள்.
புதிய கற்றல் மற்றும் மறுபரிசீலனை ஆகியவற்றை உள்ளடக்கிய கால அட்டவணையைத் தயாரிப்பதில் உங்கள் குழந்தைக்கு உதவுங்கள். படிப்படியான அணுகுமுறை உங்கள் குழந்தைக்கு கற்றல் செயல்முறையை எளிதாக்கும்.



Click it and Unblock the Notifications












