For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகளே... கர்ப்ப காலத்தில் இதை எல்லாம் கனவில் கூட நினைக்காதீங்க

தாய்மை பேறு எல்லாருக்கும் கிடைத்து விடாது அது ஒரு வரம். கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும்.

By Jaya Lakshmi
|

கர்ப்பிணிகள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்று தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். கண்டதை சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் வருங்கால தலைமுறையான குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கூட்டுக்குடும்பமாக இருந்தால் வீட்டில் பெரியவர்கள் சத்தான உணவுகளை சரியான நேரத்தில் கர்ப்பிணிகளுக்குச் சாப்பிடக்கொடுப்பார்கள். இன்றைக்கு தனிக்குடித்தனமாக இருப்பதால் கர்ப்பிணிகள் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே சரியான உணவுகளை சாப்பிட வேண்டும்.

சாதாரண நாட்களை விட, கர்ப்ப காலங்களில் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், மற்ற எல்லோரையும் விட, அவர்களுக்கு அதிகமான நோய்த்தொற்றுகள் எற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவேதான் உணவுகளில் ஆரோக்கியமானதை மட்டுமே சாப்பிட வேண்டும்.

pregnancy foods and diet

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், சிலர் அந்த மாற்றங்களைக் கண்டு திகைப்படைகிறார்கள். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானவையே.

கர்ப்பிணிகளுக்கு அதிகாலை மயக்கம், வாந்தி இருப்பதால் ஒருவித சோர்வு இருக்கும். முதல் மூன்று மாதங்கள் கவனமாக இருக்கவேண்டிய காலம். இதை தாண்டிவிட்டால் வெற்றிகரமாக ஆரோக்கியமான குழந்தையை கருவில் சுமக்கலாம். எனவேதான் கர்ப்பகாலத்தில் காபி, டீ போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.காபி, டீக்கு குட்பை

1.காபி, டீக்கு குட்பை

காபி, டீ குடித்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும் என்று சிலர் கூறுகின்றனர். காபி குடித்தால் என்னவாகும் என்றும் சிலர் மனதில் கேள்விகள் எழலாம். காபி அதிகம் குடிப்பதால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்ப்ப காலத்தில் காபி அதிகம் எடுத்துக்கொண்டால் எடை குறைவான குழந்தைகள் பிறக்கும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். புரோகோலி மற்றும் கீரைகளில் அதிக இரும்புச்சத்து உள்ளதால் அவற்றை சூப் போல செய்து சாப்பிடலாம். முருங்கைக் கீரை சூப் வைத்து சாப்பிட குழந்தையின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

2.பால் பொருட்கள்

2.பால் பொருட்கள்

கர்ப்ப காலங்களில் பால் பொருட்களை சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும். கர்ப்பிணி பெண்கள் நான்கு மாதங்கள் வரை ஒரு நாளைக்கு 6 டம்ளர் பால் அருந்த வேண்டும். இது குழந்தைக்கு தேவையான கால்சியம் இதில் குழந்தைக்கு கிடைத்து விடும். அதே நேரத்தில் கிருமி நீக்கம் செய்யப்படாத பாலடைக்கட்டி மற்றும் பாலில் உள்ள கிருமிகள், தொப்புள்கொடி வழியாக குழந்தையை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தும். எனவே குழந்தையின் பாதுகாப்பிற்காக நீங்கள் வாங்கும் பால் பொருட்களின் லேபிள்களை பரிசோதித்து வாங்குவது நல்லது. சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்குவது தாய், குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

3.கிரீன் டீ வேண்டாம்

3.கிரீன் டீ வேண்டாம்

கிரீன் டீ சாப்பிடுவதால் நமது உடலின் இயக்கம் அதிகரிக்கிறது, எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்குள்ளும் இந்த மாற்றங்கள் அதிகளவில் நடக்கும். கிரீன் டீயிலும் சிறிதளவு காப்ஃபைன் உள்ளதால், அளவுக்கு அதிகமாக கிரீன் டீயை குடிப்பதும் கேடு விளைவிக்கும். அளவுக்கு அதிகமாக கிரீன் டீ குடித்தால், அது உடலில் ஃபோலிக் அமிலம் சேருவதை தவிர்க்கும். இதனால் நீங்களும், உங்களுடைய குழந்தையும் ஃபோலிக் அமிலம் பற்றாக்குறையினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படலாம்.

4.ஃபோலிக் அமிலம்

4.ஃபோலிக் அமிலம்

சிசுவின் ஆரம்பக்கட்ட வளர்ச்சிக்கும் முக்கிய உறுப்புக்களின் ஆரோக்கியமான உருவாக்கத்துக்கும் ஃபோலிக் அமிலம் மிகமிக அவசியம். முதல் மூன்று மாதங்களில்தான், சிசுவின் முதுகெலும்பு, முதுகுத் தண்டுவடம் மற்றும் தண்டுவடத்தின் உள் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, மண்டை ஓட்டு எலும்பு வளர்ச்சி நடக்கின்றன. இந்த அத்தனைச் செயல்பாடுகளும் சிறப்பாக நடைபெற ஃபோலிக் அமிலம் பெரிதும் அவசியம். பச்சைக் காய்கறி, கீரை வகைகள், பருப்பு, முழு தானியங்களில் ஃபோலேட்டாக இது நமக்குக் கிடைக்கிறது. எனவே

தினம் ஒரு கீரைகளை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஃபோலிக் அமில மாத்திரைகளை சாப்பிடலாம்.

MOST READ: சாயங்காலம் வீட்ல ஊதுபத்தி ஏத்துறீங்களா? இத படிங்க அப்புறம் ஊதுபத்தி வாங்கவே மாட்டீங்க...

5.கீரைகள் அவசியம்

5.கீரைகள் அவசியம்

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் குழந்தைக்கு சேர்த்து அதிகளவு கலோரி எடுத்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் சராசரியாக சாப்பிடும் உணவோடு வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும். குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைகீரை என கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும்.

6.நாட்டுக்கோழி

6.நாட்டுக்கோழி

பெருங்காயம், பூண்டு,சோம்பு சிறிது குறைத்து பயன்படுத்தவும். நாட்டுக்கோழி, பிராய்லர் இறால், போன்றவைகளை சாப்பிட வேண்டாம். உடம்புக்கு சூட்டை அதிகரிக்கும் பொருட்களை தவிர்ப்பது நல்லது. சிக்கன் நிறைய தயிர் சேர்த்து செய்து கொஞ்சமாக சாப்பிட்டு கொள்ளலாம். குழந்தை பிறந்த பின்னர் பூண்டு குழம்பு, நாட்டுக்கோழி சமைத்து சாப்பிடலாம் அது குழந்தை பெற்ற தாயின் உடம்புக்கு நல்லது.

7.குறைப்பிரசவம்

7.குறைப்பிரசவம்

பச்சையான அல்லது உணவுகளை சாப்பிடுவதால் தாயின் உடலில் தொற்றுகள் ஏற்படும். பச்சை முட்டைகளும், கறியும் கர்ப்பிணிகளுக்கு வாதம் தொடர்பான நோய்களை வர வைக்கும். இந்த உணவுகளின் வாயிலாக நோயினாலோ அல்லது தொற்றினாலோ பாதிக்கப்பட்டு, தொப்புள் கொடி வழியாக குழந்தையையும் பாதிக்கும். இதன் காரணமாக குறை பிரசவம் நடக்க வாய்ப்பு உள்ளது. அதோடு குழந்தைக்கு மன ரீதியான பாதிப்புகளும் தோன்றலாம்.

8.பழங்கள்

8.பழங்கள்

கிஸ்மிஸ் பழம் நிறைய சாப்பிட்டால் வாந்தி கட்டு படும். தலைவலி, ஜுரம், சளி, பல் வலி போன்றவைக்கு டாக்டரிடம் கேட்காமல் எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டாம். சூடு தன்மை உள்ள பழங்கள் காய்கள், உணவுகள் அதிகம் சாப்பிடவேண்டாம். கொய்யா , பப்பாளி, அன்னாசி, கருப்பு திராட்சை ஆகியவைகளை தவிர்ப்பது நல்லது. அதே நேரத்தில் ஆப்பிள், பச்சை திராட்சை,மாதுளை, ஆரஞ்ச் பழங்களையும் வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்களையும் சாப்பிடலாம்.

9.மதுபானம் ஆபத்து

9.மதுபானம் ஆபத்து

கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக மதுபானங்களை குடித்தால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், மூளை வளர்ச்சியும் சரியில்லாமல் இருக்கும். குழந்தையிடம் முகம் மற்றும் மன ரீதியான பாதிப்புகளுக்கும் இது வழிவகுக்கும். சிகரெட் புகைப்பதன் மூலம் உங்களுடைய குழந்தையும் நிக்கோடின், கார்பன் மோனாக்சைடு மற்றும் தார் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது. குழந்தைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவை சிகரெட் குறைத்துவிடும். இதனால் குழந்தையின் எடை குறையும் அல்லது உடலில் குறைபாடுகள் ஏற்படும்.

MOST READ: விஷ்ணுவை ஏன் வியாழக்கிழமை நாளில் வழிபட வேண்டும்?... எப்படி வழிபடணும்?

10.ஆரோக்கியமான வாரிசு

10.ஆரோக்கியமான வாரிசு

பாக்கெட்டில் உள்ள உணவுகளையும், பால் பொருட்கள், சீஸ் போன்றவைகளை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். அதில் உள்ள கெடுதல் செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் குழந்தைக்கு நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக மகிழ்ச்சியான காலம். அந்த கால கட்டத்தில் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும். நல்ல இசையை கேட்பது, நல்ல புத்தகங்களைப் படிப்பது என பத்து மாதங்களையும் உற்சாகமாக செலவு செய்தால் ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை பெற்றெடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pregnancy Tips Foods And Diet

In any case, it is vital to maintain a healthy, balanced diet to ensure a healthy mother and fetus. So be sure to incorporate the following in your diet during pregnancy.
Story first published: Wednesday, December 19, 2018, 16:08 [IST]
Desktop Bottom Promotion