ஆரோக்கியமான வழியில் குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்கான சில டிப்ஸ்...

By Ashok CR

மாதவிடாய் முடிந்து 10-15 ஆம் நாள் இடைவேளையில் உடல் உறவு வைத்துக் கொண்டால் கர்ப்பமாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மாதவிடாயின் போது உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

இந்நேரத்தில் கருத்தரித்தால், பிறக்கும் குழந்தை, உடல் மற்றும் மன ரீதியான குறைகளுடன் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம். இங்கு ஆரோக்கியமான வழியில் குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்கான சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை பின்பற்றி, அழகான குழந்தைப் பெற்றெடுங்கள்.

Ways to Give Birth to a Healthy Child

* மாதவிடாய் பிரச்சனைகள் இருந்தால், மணிக்கட்டுகளை அழுத்தி அமுக்கினால் வியப்பூட்டும் பயன்களை அளிக்கும். அதிலும் உங்கள் மாதவிடாய் சீரான இடைவேளையில் நடைபெற்று, பெண் உறுப்பில் ஏற்படும் வெண்கசிவு நோயை குணமாக்கும்.

* முதல் முறை கர்ப்பமாக இருக்கும் போது, அந்த பெண்ணுக்கு அதிக கவலையும் பதற்றமும் ஏற்படும். இது பிரசவ வலியை அதிகரிக்க செய்யும். இது உடலை மட்டுமல்லாது மனதையும் பாதிக்கும். பிரசவத்தின் போது இடுக்கியை பயன்படுத்தினாலோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாக பிரசவம் நடந்தாலோ குழந்தையின் உடலும் தாயும் காயம் அடையலாம்.

* வலியில்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ள, மர உருளையை, நகத்திலிருந்து முழங்கை வரை, பின்புறமாக, நன்றாக அழுத்தி 5-10 நிமிடங்கள் வரை உருட்டவும். ஒரு வேளை, உருளை கிடைக்கவில்லை என்றால், உள்ளங்கை மற்றும் பாதங்களை இரண்டு உலோக சீப்பை கொண்டு, நகங்கள் முதல் மூட்டு வரை 5-10 நிமிடங்கள் வரை நன்றாக தேய்க்கவும். வலியில்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ள, பற்களை தாண்டி, நாக்கின் பின்புறத்தில் ஒரு நிமிடம் அவரை அழுத்தம் கொடுங்கள். 3 நிமிட இடைவேளையில் இதனை தொடர்ச்சியாக முயற்சி செய்து பாருங்கள்.

* கடினமான பிரசவத்தை தவிர்க்க, கணுக்காலின் மேல், உட்பக்கமாக, இரண்டு நிமிடங்களுக்கு நன்றாக அழுத்துங்கள். பிரசவம் ஏற்படும் வரை சற்று இடைவேளை விட்டு, இதனை தொடர்ச்சியாக செய்யுங்கள். குழந்தை பிறந்த பின் மார்பகங்களில் பால் தேங்குவதால் கூடுதல் வலி ஏற்படும். உள்ளங்கையின் பின்பக்கத்தின் நடுவில் அமுக்குங்கள். இது மார்பக வலி மற்றும் அழற்சியை நீக்கும்.

* பிரசவத்திற்கு பின், ஒரு பெண்ணின் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதற்கு காரணம் அவர்களின் இனப்பெருக்க சுரப்பிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளே. உள்ளங்கையை அழுத்தினால் நல்ல உடல் அமைப்பை பராமரிக்கலாம்.

* உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்தால், தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும். இது ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை அளிக்கவும் உதவும். காம கனவுகளால், ஆண்களுக்கும் பெண்களுக்கும், தூக்கத்தில் காம கழிவுகள் வெளியேறினால், இந்த முறையை அவர்கள் பின்பற்றலாம்.

Desktop Bottom Promotion