Latest Updates
-
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...!
கருவறையிலிருந்தே குழந்தைகளுக்கு ஞாபக சக்தி இருக்கிறதாம்! - ஆய்வில் தகவல்
கர்ப்பிணிப் பெண்களை அதிகம் அதிர வைக்கக் கூடாது, அவர்கள் முன்னிலையில் யாரும் சத்தம் போடக் கூடாது, வன்முறையில் ஈடுபடக் கூடாது ஆகியவை பொதுவாகவே நம் இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிப் போன விஷயம். கருவில் உள்ள குழந்தையை இதுபோன்ற சம்பவங்கள் கடுமையாகப் பாதிக்கும் என்பதே இதற்குக் காரணம்.
இன்னும் சொல்லப் போனால், சில சமூகங்களில் கருவில் உள்ள குழந்தைக்கு மந்திரம் கூட ஓதப்படுகிறது. இந்த மந்திரங்களை அந்தக் குழந்தை நன்றாகக் கிரகித்துக் கொள்ளும் என்று அந்த சமூகத்தினர் நம்புகின்றனர்.
அப்படியானால், கருவில் உள்ள குழந்தைகளுக்கு ஞாபக சக்தியும் இருக்குமா? கருவின் உள்ளே இருக்கும் போதே அவர்களுக்கு ஞாபக சக்தி கிடைத்து விடுகிறதா? ஆம் என்று தான் சில ஆய்வுகள் கூறுகின்றன. கருவில் உள்ள குழந்தைக்கு ஞாபக சக்தி உண்டு என்றால் ஆச்சரியம் தான்! இது முழுமையாக நிரூபிக்கப்படும் வரை ஆய்வுகள் தொடரும்.

'டாடாடா' ஆய்வு
இதற்காக ஃபின்லாந்து நாட்டில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. சில கர்ப்பிணிப் பெண்களுக்கு 'டாடாடா' என்ற ஒரு புரியப்படாத வார்த்தை தினந்தோறும் 25,000 முறை கூறப்பட்டது. கரு வளர்ச்சியின் ஒரு பகுதியான மூளை வளரத் தொடங்கும் 29வது வாரத்திலிருந்து குழந்தை பிறக்கும் வரை இவ்வாறு கூறப்பட்டது.
பின்னர் அந்தக் கர்ப்பிணிகளுக்குப் பிறந்த குழந்தைகளைப் பரிசோதித்தனர். அந்த 'டாடாடா' வார்த்தையைக் கூறிய போது, அந்தக் குழந்தைகள் அருமையாக ரெஸ்பான்ஸ் கொடுத்ததாக அவற்றின் மூளைப் பதிவுகள் தெரிவித்தன.

என் தாய்
ஞாபக சக்தி இருப்பதால் தான், பிறந்த பிறகும் கூட தம் தாயைக் குழந்தைகள் எளிதில் அடையாளம் கண்டு கொள்கின்றன, தாயின் குரலையும் அக்குழந்தைகளால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.

தாய்-சேய் உறவு
கருவில் உள்ள குழந்தைகளால் தங்கள் தாயின் குரலையும் நன்றாகக் கேட்க முடியும் என்பதால் தான் நம்மூரில் கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் உள்ள தங்கள் குழந்தைகளுடன் ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் உற்சாகப்படுத்துவார்கள். அப்போது தான் அந்தத் தாய்க்கும், சேய்க்கும் உள்ள உறவு கருவிலிருந்தே நீடிக்கும்.

தந்தை-குழந்தை பிணைப்பு
முடிந்தால், அந்தக் குழந்தையின் தந்தையும் அதனுடன் பேசினால், பிறந்த பிறகு அவர்களுக்கிடையிலான பிணைப்பும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

குழந்தையும்... இசையும்...
இவ்வளவு ஏன், தாய் ஒரு நல்ல இசையை கர்ப்ப காலத்தில் கேட்டகால் கூட, அந்த இசையை கருவில் உள்ள குழந்தையால் ரசிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications











