Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
கர்ப்பிணிகளே, நார்ச்சத்து உணவுகளை நிறைய சாப்பிடுங்க!

மலச்சிக்கல் பிரச்சினை
கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்னை மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது. எனவேதான் நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றனர்
நிறைய கீரை சாப்பிடுவதும், பழங்கள் சாப்பிடுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு. பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது.அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும்.
மேலும் பாதாம் பருப்பு, பீன்ஸ், கீரைகள், பூசணிக்காய், பேரிக்காய், ப்ளாக் பெரிஸ், பயறுவகைகள், வேகவைத்த உருளைக்கிழங்கு, வாழைப்பழம், ஆரஞ்சு, போன்றவைகள் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இவற்றை கர்ப்பிணிகள் தவறாமல் தங்கள் உணவுகளில் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் சரியான அளவு தண்ணீர் பருகவேண்டும். இது மலச்சிக்கலை நீங்கும்.
கால்சிய உணவுகள்
15 வாரங்கள் ஆனதும் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும். கால்சியம் சத்து நிறைய தேவைப்படுகிறது என்பதால், கர்ப்பிணிகள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு லிட்டர் பால் அருந்த வேண்டும். கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும், மாத்திரையைவிட பால் நல்லது. மேலும் தயிர், பால்பொருள்கள், கொண்டக்கடலை, பட்டாணி சாப்பிடலாம். அதில் புரதம், கால்சியம், தேவையான தாது உப்புகள் இருக்கின்றன.
உப்பு, காரம் வேண்டாம்
கர்ப்ப காலத்தில் காரமான, மசாலா அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது ஏனெனில் மலச்சிக்கல், ஜீரணமாகாமல் ஏற்படும் நெஞ்சு எரிச்சல் போன்றவற்றிர்க்கு அதுவே காரணமாகிவிடும். எனவே எண்ணெய் குறைவான காரம் இல்லாத உணவாக இருப்பது நலம். ஊறுகாய் சாப்பிடவேண்டும் போல் இருந்தாலும் அதில் இருக்கும் அதிகப்படியான உப்பும் எண்ணெயும் உடலுக்கு ஏற்றதல்ல. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிக உப்பு ஆகாது எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.
கால் வீக்கம் கவனிங்க
கர்ப்ப காலத்தில் சிலருக்கு கால் வீங்கும். வீக்கம் இருப்பின் சிறிது உயரமான ஸ்டூலில் கால்களைத் தூக்கி வைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் கர்ப்பிணிகளுக்கு வரும் சாதாரண பிரச்னைதான். பயப்பட வேண்டாம். இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஸ்கேன் செய்வதும் அவசியம் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.



Click it and Unblock the Notifications