Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
கர்ப்பிணிகளே, நார்ச்சத்து உணவுகளை நிறைய சாப்பிடுங்க!

மலச்சிக்கல் பிரச்சினை
கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்னை மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது. எனவேதான் நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றனர்
நிறைய கீரை சாப்பிடுவதும், பழங்கள் சாப்பிடுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு. பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது.அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும்.
மேலும் பாதாம் பருப்பு, பீன்ஸ், கீரைகள், பூசணிக்காய், பேரிக்காய், ப்ளாக் பெரிஸ், பயறுவகைகள், வேகவைத்த உருளைக்கிழங்கு, வாழைப்பழம், ஆரஞ்சு, போன்றவைகள் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இவற்றை கர்ப்பிணிகள் தவறாமல் தங்கள் உணவுகளில் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் சரியான அளவு தண்ணீர் பருகவேண்டும். இது மலச்சிக்கலை நீங்கும்.
கால்சிய உணவுகள்
15 வாரங்கள் ஆனதும் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும். கால்சியம் சத்து நிறைய தேவைப்படுகிறது என்பதால், கர்ப்பிணிகள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு லிட்டர் பால் அருந்த வேண்டும். கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும், மாத்திரையைவிட பால் நல்லது. மேலும் தயிர், பால்பொருள்கள், கொண்டக்கடலை, பட்டாணி சாப்பிடலாம். அதில் புரதம், கால்சியம், தேவையான தாது உப்புகள் இருக்கின்றன.
உப்பு, காரம் வேண்டாம்
கர்ப்ப காலத்தில் காரமான, மசாலா அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது ஏனெனில் மலச்சிக்கல், ஜீரணமாகாமல் ஏற்படும் நெஞ்சு எரிச்சல் போன்றவற்றிர்க்கு அதுவே காரணமாகிவிடும். எனவே எண்ணெய் குறைவான காரம் இல்லாத உணவாக இருப்பது நலம். ஊறுகாய் சாப்பிடவேண்டும் போல் இருந்தாலும் அதில் இருக்கும் அதிகப்படியான உப்பும் எண்ணெயும் உடலுக்கு ஏற்றதல்ல. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிக உப்பு ஆகாது எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.
கால் வீக்கம் கவனிங்க
கர்ப்ப காலத்தில் சிலருக்கு கால் வீங்கும். வீக்கம் இருப்பின் சிறிது உயரமான ஸ்டூலில் கால்களைத் தூக்கி வைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் கர்ப்பிணிகளுக்கு வரும் சாதாரண பிரச்னைதான். பயப்பட வேண்டாம். இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஸ்கேன் செய்வதும் அவசியம் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.



Click it and Unblock the Notifications