Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
எளிதில் கர்ப்பம் தரிக்க மன அமைதி முக்கியம்!

குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றி தம்பதியர் தங்களுக்குள் திட்டம் வைத்திருந்தாலும், சரியான உடல் நலமும் தாய்மைப் பேற்றினை ஏற்றுக்கொள்ளும் மன பலமும்தான் பெண் கருத்தரிக்க ஏற்றது. அமைதியற்ற சூழலில் உண்டாகும் கரு பாதிப்பிற்குள்ளாகும் வாய்ப்புள்ளது. எனவே எளிதில் கருத்தரிக்கவும், அதனை பாதுகாக்கவும் ஏற்ற ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர் மகப்பேறு மருத்துவர்கள்.
சரியான சுழற்சி அவசியம்
பெண்ணின் உடற்கூற்றில் ஏற்படும் மாதவிலக்கு சுழற்சி சரியாக அமையவேண்டும். அப்பொழுதுதான் கருமுட்டை வெளியாவது சரியானபடி அமையும். 27 நாள் முதல் 32 நாட்களுக்குள் சரியானபடி மாதவிலக்கு சுழற்சி ஏற்படும் பெண்கள் ஆரோக்கியமான உடல் அமைப்பு உடையவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். எனவே அந்த நேரத்தில் சரியான திட்டமிடல் இருந்தால் கரு உருவாவது நிச்சயம் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
கரு உருவாக சரியன உடல் பயிற்சியோடு மனப் பயிற்சியும் அவசியம் என்பது மருத்துவர்களின் அறிவுரை. முதலாவதாக தாய்மை அடைவதை விரும்பவேண்டும். பெற்றோர்களுக்காகவும், சொந்த பந்தங்களுக்காகவும் வேண்டா வெறுப்பாக தாய்மை அடைய நினைக்கக் கூடாது. அது கருவில் உருவாகும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஆர்வத்தோடும், அக்கறையோடும், தாய்மையை வரவேற்க தயாராக வேண்டும்.
எளிய உடற்பயிற்சி
எளிய உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குதித்தல், ஓடுதல் உள்ளிட்ட சிரமமான உடற்பயிற்சியை தவிர்க்லாம். காற்றாட நடக்கலாம். இதனால் உடலும், மனமும் புத்துணர்ச்ச்சியடையும். சின்ன சின்ன உடற்பயிற்சியினால் மாதவிலக்கு சுழற்றி சரியாக நிகழும். நடப்பதன் மூலம் கருத்தரித்தல் எளிதாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த உடற்பயிற்சியை கரு உண்டான பிறகும் தொடரலாம்.
தசைகளை வலுவாக்கும் சைக்கிள்
சைக்கிள் ஓட்டுவது மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும். இது கால்கள், தொடைகளின், தசைகளை வலுவாக்கும். ரத்த ஓட்டம் சீராகும். உடல் எடை குறைவதோடு, மாதவிலக்கு சுழற்சி சரியான முறையில் நிகழும் என்றும் மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மன அமைதி தரும் யோகா
யோகா, தியானம் மன அமைதி தரும். தாய்மை அடைவதை விரும்பும் பெண்கள் மன அமைதியோடு திகழ்வது அவசியம். தேவையற்ற மன அழுத்தம், கவலை போன்றவை தாய்மைப் பேற்றினை தடுக்கும் எதிரிகளாகும். எனவே யோகா, தியானங்களில் மனதை ஈடுபடுத்துவதன் மூலம் மனம் அமைதியடையும். இதனால் உடலில் ஹார்மோன்களின் சுரப்பு சரியான முறையில் நிகழும். ரத்த ஓட்டம் சீராக அனைத்து உறுப்புகளுக்கும் சென்றடையும்.
உற்சாகம் தரும் நீச்சல்
நீச்சலானது கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்ற எளிதான உடற்பயிற்சியாகும். இந்த உடற்பயிற்சியை கர்ப்பம் தரித்த பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையோடு தொடரலாம்.



Click it and Unblock the Notifications