Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
பெண்ணின் சிவப்பு இரத்தம் வெண்ணிற தாய்ப்பாலாக மாறுவது எப்படி?
ஒரு குழந்தை தாயின் வயிற்றில் கருவாகி, படிப்படியாய் கருவறையில் உருவாகி வெளியே வரும் பொழுது அதற்கு முதன் முதலாக கொடுக்கப்படும் உணவு தாய்ப்பால். தாய்ப்பாலை குழந்தைகளின் முதல் 6 மாத காலகட்டத்தில் கண்டிப்ப
ஒரு குழந்தை தாயின் வயிற்றில் கருவாகி, படிப்படியாய் கருவறையில் உருவாகி வெளியே வரும் பொழுது அதற்கு முதன் முதலாக கொடுக்கப்படும் உணவு தாய்ப்பால். தாய்ப்பாலை குழந்தைகளின் முதல் 6 மாத காலகட்டத்தில் கண்டிப்பாக தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்று முன்னோர்களும், மருத்துவர்களும் வழிவழியாக வலியுறுத்தி கூறி வந்துள்ளனர்.

அவ்வாறு ஏன் அவர்கள் தாய்ப்பாலை அத்துணை முக்கியமாக கருதினர், எவ்வாறு தாய்ப்பால் உருவாகிறது என்பது போன்ற தகவல்களை குறித்து இந்த பதிப்பில் காணலாம்.

பெண் - தாய்மை!
பெண்ணின் உடலமைப்பை குறித்து சற்று சிந்தித்து பார்த்தால், உடலமைப்பில் அவளின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியத்தை மீறிய முக்கியத்துவம் அவளுள் இருந்து பிறக்கப்போகும் குழந்தைக்கு கொடுக்கப்பட்டிருக்கும். குழந்தை உருவாக வயிறு, உருவான கரு வெளிவர பிறப்புறுப்பு, பெற்ற குழந்தையை ஆரோக்கியத்துடன் வளர்க்க மார்பகங்கள் என்று பெண்ணின் ஒவ்வொரு உறுப்பும், தாய்மைக்கான முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாய் திகழ்கிறது.

எப்படி உருவாகிறது?
இப்பொழுது இந்த பத்தியில் பெண்ணின் உடலில் ஓடும் சிவப்பு நிற இரத்தம் வெண்மை நிற தாய்ப்பாலாக மாறுகிறது என்று படித்தறியலாம். பெண்ணின் மார்பகங்கள் பல நுண்குழல்கள் கொண்ட, பல சுரப்பிகள் கொண்ட சதைத்திசுக்களால் ஆன ஒரு பகுதியாக திகழ்கிறது. மார்பகத்தில் உள்ள சுரப்பிகளில் தோன்றும் தாய்ப்பால், நுண்குழல்கள் வழியே பயணம் செய்து, பெண்ணின் மார்பகங்களின் முலைக்காம்புகளை அடைகிறது; அதன் வாயிலாக குழந்தைக்கு பால் சென்றடைகிறது.
சிவப்பு வெள்ளையாகும் கலையை அறியும் முன், அந்தக் கலை நடைபெற காரணமாக உள்ள உறுப்புகள் ஏன் ஒரு குறிப்பிட்ட வகையில் அமைந்துள்ளன என்று அவற்றின் அமைப்பைப் பற்றி அறிவது அவசியம்!

ஏன் இந்த அமைப்புகள்?
இப்பொழுது மார்பகத்தின் அமைப்பு மற்றும் அதிலுள்ள உறுப்புகள் எப்படி இயங்குகின்றன? ஏன் இந்த அமைப்பில் உள்ளன என்று பார்க்கலாம். மார்பகத்தில் தாய்ப்பாலை சுரக்கும் செல்கள் இங்கு காணப்படும் சுரப்பிகளில் நிறைந்துள்ளன. இந்த தாய்ப்பால் சுரப்பு செல்கள் ஒவ்வொரு பெண்ணின் உடலமைப்பிற்கு ஏற்றவாறு மாறுபடும்; இது மார்பக அளவை பொறுத்ததல்ல. இங்கு சுரக்கப்படும் தாய்ப்பால், குழந்தையை அடைய மார்பகங்களின் முலைக்காம்புகள் உதவுகின்றன; இந்த முலைக்காம்பில் பல பால் கடத்தும் நுண்குழல்கள் இணைந்து திறந்த நிலையில் உள்ளன; இதன் வாயிலாக குழந்தை தாய்ப்பாலை பெறுகிறது.

எதற்கு கரும்படலம்?
மார்பக முலைக்காம்புகளை சுற்றி ஒரு கரும் படலம் மார்பகத்தில் காணப்படுகிறது; இந்த கரும்படலம் வெண்மையான மார்பக பகுதியில் எங்கு பால் அருந்த வேண்டும் என்று குழந்தைக்கு சரியாக - எடுப்பாக எடுத்துக்காட்ட உதவுகிறது. மேலும் இந்த கரும்படலத்தில் சிறு சிறு சுரப்பிகள் உள்ளன; அவை சிறு சிறு பருக்கள் போன்று மிகச்சிறிதாக கண்ணிற்கு புலப்படும். இந்த கரும்படல சுரப்பிகள் ஒருவித எண்ணெய் போன்ற பொருளை உற்பத்தி செய்து மார்பகத்தை தானாகவே சுத்தம் செய்கின்றன; இங்கு சுரக்கப்படும் எண்ணெய் அல்லது என்சைம் மார்பக முலைக்காம்புகளை நோய்க்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் என எதுவும் தாக்காமல் பார்த்துக் கொள்கின்றன.

எப்பொழுது உருவாகிறது?
பெண் கர்ப்பம் தரிக்கையில், அவளின் உடலில் பலவித ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த ஹார்மோன் மாற்றங்களில் முக்கியமான ஒரு ஹார்மோன் தோற்றம் மற்றும் மாற்றம் புரோஜெஸ்டிரான் எனும் ஹார்மோனாகும். கருவறையில் இருக்கும் நஞ்சுக்கொடியின் கட்டுப்பாட்டில் ப்ரோஜெஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன், HPL போன்ற ஹார்மோன்கள் இருக்கும்; இவை கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் பிரசவத்திற்கு பின்னான மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும்; அதே சமயத்தில் கர்ப்ப காலத்திலேயே பால் வெளிப்படாதவாறு லாடோஜெனிசிஸ் எனும் பால் உற்பத்தி செயலை தற்காலிகமாக முடக்கி வைத்திருக்கும்.

முழுமையான பால் சுரப்பு!
பிரசவம் நிகழும் பொழுது இந்த நஞ்சுக்கொடி நீக்கப்படும் அப்பொழுது, மேற்கூறிய இந்த மூன்று ஹார்மோன்களின் அளவும் குறைந்து, பால் உற்பத்தி தொடங்கும். குழந்தை பிறந்த முதல் -40 மணி நேரங்கள் முழுமையான பால் சுரப்பு நிகழாது, முழுமையான பால் சுரப்பிற்கான செயல்கள் மார்பகத்தில் தொடங்கி, சிறிது சிறிதாக பால் சுரப்பு ஏற்படும். பிரசவம் முடிந்து 50-73 மணி நேரத்திற்கு பின், அதாவது 2-3 நாட்களுக்கு பின் முழுமையாக பால் சுரப்பு நிகழும்.

சிவப்பு வெள்ளையாதல்!
கர்ப்ப காலத்தில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்கள், இவற்றில் முக்கியமாக லாடோஜெனிசிஸ் எனும் செயல்பாட்டின் காரணமாக தான் சிவப்பு இரத்தம் வெண்ணிற தாய்ப்பாலாக உருவாகிறது. இதற்கு உடலில் சுரக்கப்படும் மற்ற ஹார்மோன்களும் பேருதவி புரிகின்றன. இந்த செயல்பாடு இரண்டு நிலையாக நடக்கும். அவை: எண்டோகிரைன் மற்றும் ஆட்டோகிரைன்.
இந்த முறைகளில் எண்டோகிரைன் செயல்பாட்டின் பொழுது தான் சிவப்பு இரத்தம் வெண்மையாக மாற்றப்படும் படிநிலைகளுக்கு உள்ளாகி, ஆட்டோகிரைன் நிலையில் செயல்பாடுகள் வெற்றிகரமாக நிறைவடைந்து வெண்ணிற பால் வெளிப்படுகிறது; அறிவியலில் வெண்மையிலிருந்து தான் மற்ற நிறங்கள் உருவாகின்றன; ஆனால் இந்த செயல்பாட்டில் மட்டும் தான், எங்கும் நடக்காத சிவப்பிலிருந்து வெண்மை தோன்றும் மாற்றம் உண்டாகிறது.

தாய்ப்பால் சுரப்பு!
பெண்ணின் முலைக்காம்பில் 15-20 தாய்ப்பால் சுரப்பு நுண்குழல்கள் இணைந்திருக்கின்றன; இந்த நுண்குழல்களின் வாயிலாக பால் குழந்தையை அடைகிறது. தாய்ப்பால் சுரப்பு மார்பகம் காலியாக இருக்கும் பொழுது விரைவாகவும், மார்பகம் நிறைந்திருக்கும் பொழுது மெதுவாகவும் நிகழும். குழந்தை பால் குடிப்பதை பொறுத்து, மார்பகத்தில் பாலின் சுரப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கும். குழந்தைக்கு குறைந்தது 6 மாதம் வரை முடிந்தால் தாய்ப்பால் சுரப்பு இருக்கும் வரை பால் கொடுப்பது நல்லது.



Click it and Unblock the Notifications











