Latest Updates
-
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம்
சுகப்பிரசவத்திற்கு பின் யோனியில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவும் அற்புத நாட்டு மருந்து!
இங்கு பிரசவத்திற்கு பின் யோனியில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவும் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
சிசேரியன் முறையில் குழந்தையைப் பெற்றெடுப்பதை விட, சுகப்பிரசவம் தான் மிகவும் சிறந்தது. ஏனெனில் சுகப்பிரசவம் என்றால் அதனால் சில நாட்கள் தான் வலியை அனுபவிக்கக்கூடும். ஆனால் சிசேரியன் என்றால் வாழ்நாள் முழுவதும் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.

சுகப்பிரசவத்தால் குழந்தைப் பெற்றெடுத்த பெண்களுக்கு சில நாட்கள் யோனிப் பகுதியில் கடுமையான வலி மற்றும் காயங்கள் இருக்கும். இதனால் சுகப்பிரசவத்திற்கு பின் பெண்கள் மிகுந்த களைப்பை உணர்வதோடு, பல உடல்நல பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். இந்த பிரச்சனைகள் ஒவ்வொரு பெண்களுக்கும் வேறுபடும்.
சுகப்பிரசவத்தின் போது குழந்தையை யோனியின் வழியே வெளியே தள்ளுவதால், யோனியின் சுவர்கள் அதிகம் விரிவடைந்து, இரத்தப்போக்கு மற்றும் காயங்களுடன், கடுமையான வலியை பெண்கள் சில நாட்கள் அனுபவிப்பார்கள். ஆனால் இந்த வலியைக் குறைக்க ஓர் அற்புத நாட்டு மருந்து உள்ளது.

இஞ்சி
இஞ்சியில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சியுடன் பாலிஃபீனால்களும் உள்ளது. இது யோனிப் பகுதியில் உள்ள காயங்களை விரைவில் குணமடைய உதவும்.

சீரகம்
சீரகத்தில் க்யூமினல்டிஹைடு என்னும் நொதிப் பொருள் உள்ளது. இது யோனியில் உள்ள காயங்கள் மற்றும் வீக்கத்தைக் குறைத்து, வலியைப் போக்கும்.

தேவையான பொருட்கள்:
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி சாறு - 2 டேபிள் ஸ்பூன்
சுடுநீர் - 1/2 கப்

தயாரிக்கும் முறை:
சுடுநீரில் இஞ்சி சாறு மற்றும் சீரகப் பொடி சேர்த்து நன்கு கலந்து, தினமும் காலை உணவு உட்கொண்ட பின் குடிக்க வேண்டும். இந்த பானத்தை வலி குறையும் வரைக் குடிக்க வேண்டும்.

குறிப்பு:
சுகப்பிரசவத்திற்கு பின் பெண்கள் நன்கு சாப்பிட வேண்டும். ஏனெனில் சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தைப் பெற்றெடுத்த பெண்களுக்கு இரத்தப் போக்கு அளவுக்கு அதிகமாக இருப்பதால், உடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும், நல்ல ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.



Click it and Unblock the Notifications