Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போதும் சரி, பிரசவத்திற்கு பின்னரும் உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, ஒருசில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சில உணவுகளால் குழந்தைகளுக்கு வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
குறிப்பாக வாய்வு தொல்லையை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை தினமும் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை அதிகம் உட்கொண்டால், அவை குழந்தைக்கு வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தி, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இங்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய வாய்வு தொல்லையை ஏற்படுத்தும் உணவுகளை பட்டியலிட்டுள்ளோம்.

முள்ளங்கி
அதிகப்படியான வாய்வு தொல்லையை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் முள்ளங்கி. எனவே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் முள்ளங்கியை சாப்பிட வேண்டாம்.

முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் கூட வாய்வு தொல்லையை ஏற்படுத்தும். இருப்பினும் முட்டைக்கோஸ் தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதால், முட்டைக்கோஸ் சாப்பிட்டால், நான்கு மணிநேரத்திற்கு பின் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது.

காலிஃப்ளவர்
முள்ளங்கி மற்றும் முட்டைக்கோஸ் போன்றே காலிஃப்ளவரும் வாய்வு தொல்லையை ஏற்படுத்தும். எனவே இந்த காய்கறியையும் தவிர்ப்பது நல்லது.

ப்ராக்கோலி
ப்ராக்கோலி கூட முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர் குடும்பத்தைச் சேர்ந்தது. எனவே இதனை தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இந்த காய் கசப்பாக இருப்பதால், இதனை தாய்மார்கள் உட்கொள்ளும் போது, அது தாய்ப்பாலை கசப்பாக்கி, குழந்தைக்கும் வாய்வு தொல்லை ஏற்படுத்தும்.

குடைமிளகாய்
குடைமிளகாய் மற்றும் இதுப்போன்று காரமான உணவுப் பொருட்களை தவிர்ப்பதும் நல்லது.

பீன்ஸ்
எவ்வளவு தான் மார்கெட்டில் பீன்ஸ் அதிகம் விற்கப்பட்டாலும், எத்தனை நன்மைகள் நிறைந்திருந்தாலும், இதனை தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது குழந்தைக்கு உப்புசத்தை ஏற்படுத்தி, அசௌகரியத்தை ஏற்படுத்திவிடும்.

உருளைக்கிழங்கு
அனைவருக்குமே உருளைக்கிழங்கு வாய்வு தொல்லையை ஏற்படுத்தும் உணவுப்பொருள் என்பது தெரியும். ஆனால் இத்தகைய உருளைக்கிழங்கை அளவாக தோலுடன் சாப்பிட்டால், வாய்வு தொல்லை சற்று குறைவாகத் தான் இருக்கும். இருப்பினும் குழந்தைக்காக இதனை சாப்பிடாமல் இருப்பது நல்லது.



Click it and Unblock the Notifications