Latest Updates
-
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும்
பிரசவத்திற்கு பின் ஏற்படும் உடல் துர்நாற்றத்தை தடுக்க சில டிப்ஸ்...
கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கு பின்னர் உடலிலும், வாழ்க்கை முறையிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய மாற்றங்கள் சில சமயங்களில் சந்தோஷமாகவும், வித்தியாசமானதாகவும் இருந்தாலும், சில நேரங்களில் அவை கஷ்டமானதாகவும், எரிச்சலூட்டும் வகையிலும் இருக்கும். அத்தகையவற்றில் ஒரு கஷ்டமான ஒன்று தான் உடல் துர்நாற்றம். சிலருக்கு பிரசவத்திற்கு முன்னும், பின்னும் உடல் துர்நாற்றம் அதிகமாக இருக்கும்.
இத்தகைய துர்நாற்றம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதிலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பிறப்புறுப்பு மற்றும் அக்குள்களில், ஹார்மோன்களில் மாற்றங்களினால் கடுமையான துர்நாற்றமானது உடலில் இருந்து வெளிவரும். மேலும் மற்றொரு காரணம் என்றால், அதிகமாக வியர்த்தல். ஆம், தாய்ப்பால் கொடுக்கும் போதுஇ உடலில் உள்ள மெட்டபாலிசமானது அதிகரிப்பதால், உடலில் உள்ள வெப்பமானது அதிகரித்து, இறுதியில் வியர்வையை அதிகமாக்குகிறது.
எனவே இவ்வாறு பிரசவத்திற்கு பின் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்க சில எளிய வழிகள் உள்ளன. அவற்றை சரியாக பின்பற்றினால், உடல் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். மேலும் இத்தகைய வழிகளை சாதாரணமாக அதிகமாக வியர்வை வெளியேறுபவர்களும் பின்பற்றலாம்.

சுத்தமாக இருப்பது
தினமும் தவறாமல் குளித்துவிட வேண்டும். எவ்வளவு தான் குழந்தைக்கும் ஓய்வின்றி வேலைப் பார்த்தாலும், தவறாமல் குளிக்கும் பழக்கத்தை கொள்ள வேண்டும். மேலும் இறுக்கமான ஆடைகளை அணியாமல், சற்று லூசாக இருக்கும் ஆடைகளை உடுத்துவது சிறந்ததாகும். குறிப்பாக ஒருமுறை உடுத்திய உடையை துவைக்காமல் மீண்டும் உடுத்தக்கூடாது.

எலுமிச்சை
குளிக்கும் போது இறுதியில் தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து உடலை அலச வேண்டும். இதனால் பிரசவத்திற்கு பின் ஏற்படும் உடல் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அதுவும் இந்த முறையை குளித்த பின், இறுதியில் ஒரு கப் நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி செய்ய வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, உடலை அலசினால், சருமத்தில் உள்ள pH-இன் அளவு குறைவ்தோடு, குழந்தை பிறந்த பின் ஏற்படும் உடல் துர்நாற்றமும் நீங்கும்.

டீ ட்ரீ ஆயில் (Tea Tree Oil)
டீ ட்ரீ ஆயிலும் ஒரு நேச்சுரல் டியோடரண்ட். அதற்கு இந்த ஆயிலை ஒரு பகுதி நீரில் கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, உடலில் ஸ்ப்ரே செய்து கொண்டால், உடல் துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.

புதினா
புதினாவும் உடல் துர்நாற்றத்தை போக்குவதில் சிறந்த ஒரு பொருள். அதற்கு புதினாவின் இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் அந்த நீரைக் கொண்டு, குளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்தால், உடல் துர்நாற்றத்தை போக்கலாம்.

தேன்
தினமும் குளிக்கும் போது, இறுதியில் ஒரு டீஸ்பூன் தேனை, நீரில் கலந்து குளிக்க வேண்டும். இதனால் சருமம் மென்மையாகவும், ஈரப்பசையுடனும் இருப்பதோடு, பிரசவத்திற்கு பின் ஏற்படும் உடல் துர்நாற்றத்தையும் நீக்கும்.

டயட்டில் கவனம் தேவை
உணவுகளில் சில உடல் துர்நாற்றதைத் தரக்கூடியவை. அதில் பூண்டு, சீரகம், ஆல்கஹால், காப்ஃபைன், அதிக அளவு இறைச்சி போன்றவற்றாலும் உடல் துர்நாற்றம் ஏற்படும். ஆகவே இத்தகையவற்றை அதிகம் சாப்பிடாமல் இருப்பதே நல்லது.



Click it and Unblock the Notifications