Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
பிரசவத்திற்கு பிறகு எப்போது பயணம் செய்யலாம்?

1. சிசேரியன் டெலிவரி? : இத்தகைய டெலிவரி செய்தவர்கள் நன்கு ஓய்வு எடுக்க வேண்டும். அவர்கள் கண்டிப்பாக ஒரு மாதத்திற்கு எந்த ஒரு பயணமும் மேற்கொள்ளக் கூடாது. ஏனெனில் சிசேரியன் டெலிவரி செய்தவர்களுக்கு போடப்பட்டிருக்கும் தையல்கள் புதிதாக, எந்த ஒரு கிருமியும் அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தாய்க்குத் தான் தேவையில்லாத நோய் தாக்கும், பின் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
2. குழந்தை பிறந்ததும் ஏதேனும் உறவினர் வீட்டிற்கு அரை மைல் தூரம் குழந்தையுடன் செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும். எப்படியென்றால் இந்த நேரத்தில் இரண்டு வாரமாவது கண்டிப்பாக ஓய்வு இருக்க வேண்டும். அப்போது தான் அந்த தையல்கள் சற்று காய்ந்து இருக்கும். ஆனால் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் கடல் தாண்டி பயணம் மேற்கொள்ள நேர்ந்தால் பின் பெரும் சிரமத்திற்கு ஆளாவீர்கள்.
3. விமானத்தில் செல்ல வேண்டிய நிலை வந்தால் சிசேரியன் ஆனவர்கள் குறைந்தது ஓரு மாதமாவது ஓய்வு எடுத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் உடலானது மறுபடியும் பழைய சக்தியை அடையும். சுகப்பிரசவம் ஆனவர்களுக்கு ஒரு வாரத்தில் குணமாகிவிடும். அவர்களுக்கு பஸ்சில் செல்வது நல்லது, அதுவும் குறைந்த தூரப் பயணங்களுக்கே. பிரசவம் ஆனதும் எப்போதும் எடுத்ததும் நீண்ட தூரப்பயணங்களை செய்யக் கூடாது. அதிலும் எப்போதும் ரயிலில் செல்வதே இருவகையான பிரசவங்களுக்கும் நல்லது.
4. சுகப்பிரசவம் ஆனவர்களுக்கு பயணம் செய்வதில் எந்த ஒரு சிக்கலும் ஏற்படாது. அவர்கள் ஒரு வாரத்திற்கு பிறகு பயணிக்கலாம். ஆனால் பிரசவத்தின் போது பிரச்சனை ஏற்பட்டவர்கள் அதாவது சிசேரியன் செய்தவர்கள் கண்டிப்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு எதையும் செய்ய வேண்டும்.
ஆகவே கர்ப்பமாக இருந்த போது கவனமாக இருந்த மாதிரி, பிரசவம் ஆன பின்னும் கவனமாக இருங்கள்.



Click it and Unblock the Notifications











