Latest Updates
-
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
குழந்தை பெற்ற பின்னும் அம்மாவுக்கு கவனம் தேவை!

பிரசவித்த பெண்களின் உடலில் நீர்ச்சத்து எப்பொழுதும் சமமாக இருக்க வேண்டும். எனவே நன்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை அதிக அளவு குடிக்க கொடுக்கலாம். இதனால் தாய்பால் சுரப்பதில் குறைபாடு ஏற்படாது. இது உண்ணும் உணவை நன்றாக ஜீரணிக்கவும் உதவும்.
உண்ணும் உணவு ஜீரணமாகவில்லை எனில் அந்த உணவை கண்டிப்பாக தவிர்த்திடுங்கள். அதோடு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் நிறைந்த புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற உணவுகளை கொடுக்கலாம். அதேபோல் உயர்தர வைட்டமின்கள் அடங்கிய கேரட், பீட்ரூட், சேனை, போன்றவைகளை கட்டாயம் உண்ணக்கொடுக்கலாம்.
பச்சை நிற உணவுகளை கட்டாயம் உண்ணக்கொடுக்க வேண்டும். வெந்தயக்கீரை, வெள்ளைப்பூண்டு போன்றவைகளை பிரசவித்த பெண்கள் சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்கும். அதேபோல் முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளையும் நன்றாக மென்று சாப்பிடவேண்டும்.
புரதச்சத்து நிறைந்த முட்டையை தினசரி காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல் அன்றாட உணவில் நெய் சேர்த்துக்கொள்வது சோர்வடையாமல் தடுக்கும்.
பிரசவித்த பெண்கள் பாலூட்டுவதனால் அடிக்கடி பசிக்கும் அந்த நேரத்தில் பழங்கள், காய்கறிகளை நறுக்கி வைத்துக்கொண்டு சாப்பிட வேண்டும். பசிக்கிறதே என்பதற்காக எண்ணெயில் பொரித்த காரமான உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் உபயோகப்படுத்தும் இடங்களில் மிளகினை உபயோகிக்கலாம். குழந்தை பிறந்த உடன் தாய்மார்கள் சாப்பிடும் சரியான உணவுதான் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாதுகாக்கும் என்கின்றனர்
மகப்பேறு மருத்துவர்கள்.
பிரசவமான பெண்களுக்கு வயிறு பெரிதாகவே இருக்கும். இவர்கள் பிரசவம் ஆனவுடன் வயிற்றின் சதையைக் குறைக்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக ஆறு மாதம் பயிற்சி செய்தால் வயிற்றுச் சதை குறைந்துவிடும்.
அதேப் போல வயிற்றில் உப்பியப் பகுதியில் மென்மையான துணியை பெல்ட் போல மடித்து லேசாக இறுக்கி அணிவதும், பெல்ட் வாங்கி அணிவதும் நல்லதுதான். பல மருத்துவமனைகளிலும், வயிற்றில் சதையைக் குறைக்க பயிற்சிகளை சிறப்பு நிபுணர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. அதனை கவனித்து சரியான முறையில் பயிற்சியை செய்து வந்தால் பெரிதான வயிறு படிப்படியாக குறையும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் குழந்தை பிறந்ததும் இழந்த சத்தினை திரும்ப பெறவேண்டும் என்பதற்காக கண்டபடி சாப்பிட்டு உடல் எடையை அதிகரித்துக் கொள்ளும் வழக்கத்தையும் மாற்றுங்கள் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.



Click it and Unblock the Notifications