Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
குழந்தை பெற்ற பின்னும் அம்மாவுக்கு கவனம் தேவை!

பிரசவித்த பெண்களின் உடலில் நீர்ச்சத்து எப்பொழுதும் சமமாக இருக்க வேண்டும். எனவே நன்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை அதிக அளவு குடிக்க கொடுக்கலாம். இதனால் தாய்பால் சுரப்பதில் குறைபாடு ஏற்படாது. இது உண்ணும் உணவை நன்றாக ஜீரணிக்கவும் உதவும்.
உண்ணும் உணவு ஜீரணமாகவில்லை எனில் அந்த உணவை கண்டிப்பாக தவிர்த்திடுங்கள். அதோடு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் நிறைந்த புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற உணவுகளை கொடுக்கலாம். அதேபோல் உயர்தர வைட்டமின்கள் அடங்கிய கேரட், பீட்ரூட், சேனை, போன்றவைகளை கட்டாயம் உண்ணக்கொடுக்கலாம்.
பச்சை நிற உணவுகளை கட்டாயம் உண்ணக்கொடுக்க வேண்டும். வெந்தயக்கீரை, வெள்ளைப்பூண்டு போன்றவைகளை பிரசவித்த பெண்கள் சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்கும். அதேபோல் முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளையும் நன்றாக மென்று சாப்பிடவேண்டும்.
புரதச்சத்து நிறைந்த முட்டையை தினசரி காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல் அன்றாட உணவில் நெய் சேர்த்துக்கொள்வது சோர்வடையாமல் தடுக்கும்.
பிரசவித்த பெண்கள் பாலூட்டுவதனால் அடிக்கடி பசிக்கும் அந்த நேரத்தில் பழங்கள், காய்கறிகளை நறுக்கி வைத்துக்கொண்டு சாப்பிட வேண்டும். பசிக்கிறதே என்பதற்காக எண்ணெயில் பொரித்த காரமான உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் உபயோகப்படுத்தும் இடங்களில் மிளகினை உபயோகிக்கலாம். குழந்தை பிறந்த உடன் தாய்மார்கள் சாப்பிடும் சரியான உணவுதான் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாதுகாக்கும் என்கின்றனர்
மகப்பேறு மருத்துவர்கள்.
பிரசவமான பெண்களுக்கு வயிறு பெரிதாகவே இருக்கும். இவர்கள் பிரசவம் ஆனவுடன் வயிற்றின் சதையைக் குறைக்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக ஆறு மாதம் பயிற்சி செய்தால் வயிற்றுச் சதை குறைந்துவிடும்.
அதேப் போல வயிற்றில் உப்பியப் பகுதியில் மென்மையான துணியை பெல்ட் போல மடித்து லேசாக இறுக்கி அணிவதும், பெல்ட் வாங்கி அணிவதும் நல்லதுதான். பல மருத்துவமனைகளிலும், வயிற்றில் சதையைக் குறைக்க பயிற்சிகளை சிறப்பு நிபுணர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. அதனை கவனித்து சரியான முறையில் பயிற்சியை செய்து வந்தால் பெரிதான வயிறு படிப்படியாக குறையும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் குழந்தை பிறந்ததும் இழந்த சத்தினை திரும்ப பெறவேண்டும் என்பதற்காக கண்டபடி சாப்பிட்டு உடல் எடையை அதிகரித்துக் கொள்ளும் வழக்கத்தையும் மாற்றுங்கள் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.



Click it and Unblock the Notifications











