Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
தாய்ப்பால் இல்லையா? அரிசிப் பால் கொடுங்க !

பசுவின் பால்
தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு பசுவின் பால் மிகச்சிறந்த இணை உணவாகும். பாட்டிலில் ஊற்றி கொடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தும், கொழுப்புச் சத்தும் கிடைக்கும்.
சோயாபால்
ஒரு சில குழந்தைகளுக்கு பசுவின் பால் ஒத்துக்கொள்ளாது. அவர்களுக்கு சோயா பால் தரலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதில் உள்ள உயர்தர புரதச் சத்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது.
அரிசிப் பால்
அரிசியில் உயர்தர கார்போஹைடிரேட், கால்சியம், புரதச்சத்துக்கள் காணப்படுகின்றன. குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின், கொழுப்புச்சத்துக்களும் இதில் காணப்படுகின்றன. அரசியில் இருந்து பால் தயாரிப்பது எளிதானது. சிறிதளவு அரிசியை எடுத்து மூன்று மணிநேரம் ஊறவைத்து நன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து வடிகட்டவும். இதேபோல் வடித்த கஞ்சியும் கூட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
பாதாம்பால்
பாதாமில் உயர்தர கொழுப்பு, புரதம் உள்ளது. இது வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. உலர்ந்த பாதம் பருப்பில் மெக்னீசியம், கால்சியம் சத்துக்கள் வளரும் குழந்தைகளுக்கும். இதய ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. இது பசுவின் பாலிற்கு இணையான சத்துக்களை கொண்டுள்ளது. பாதாம் பருப்பில் இருந்து பால் தயாரிப்பது எளிதானது. பருப்பை நன்றாக ஊறவைத்து தோலை நீக்கியபின்னர் நன்றாக மைய அரைக்க வேண்டும். அதை காய்ச்சி வடிகட்டிய நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
இவை தாய்பால் வற்றிப்போன தாய்மார்களுக்கான ஆலோசனைதான். தாய்பால் இருக்கும் போது எந்த சூழ்நிலையிலும் வேறு பால், உணவு கொடுக்கக்கூடாது என்பதே மருத்துவர்களின் ஆலோசனை. தாய்பால் வற்றிப் போன பின்னர் குழந்தைகளுக்கு சரிவிகித உணவு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் மேற்கண்ட பாலை கொடுக்கலாம் என்பதே மருத்துவர்களின் பரிந்துரையாகும்.



Click it and Unblock the Notifications