Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
பெற்றோர்கள் செய்யும் இந்த தவறுகள் அவங்க குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்...!
குழந்தைகள் அனைத்து பெற்றோரின் வாழ்க்கையிலும் பொக்கிஷம் போன்றவர்கள். அதனால்தான் பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
குழந்தைகள் சிறு வயதில் தங்கள் பெற்றோருடன் ஒட்டிக்கொள்வது சரியென்றாலும், அது அதிகமாகும்போது அத எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். உங்கள் குழந்தை வளர்ந்த பிறகும் உங்களை ஒட்டிக்கொண்டே இருக்கும் நடத்தையை வெளிப்படுத்துவது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

குழந்தைகள் பெற்றோரை அதிகம் சார்ந்திருக்க பல காரணங்கள் உள்ளன. குழந்தைகள் பெற்றோரை சார்ந்திருக்கத் தூண்டும் பெற்றோரின் தவறுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிக பாதுகாப்பு உணர்வுடன் இருப்பது
நீங்கள் அதிக பாதுகாப்பு உணர்வோடு இருந்தால், உங்கள் குழந்தை ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் உங்களை நோக்கி ஓடிவருவார்கள். தாங்களாகவே தீர்வுகளைத் தேடுவதற்குப் பதிலாக அல்லது கடினமான சூழ்நிலைகளைக் கையாள்வதற்குப் பதிலாக, எல்லாவற்றையும் சரிசெய்வதற்காக அவர்கள் உங்களிடம் வந்து அழுவார்கள்.
நீங்கள் எளிதில் அணுகக்கூடியவராக நல்ல விஷயம் என்றாலும், உங்கள் குழந்தையின் பிரச்சினைகளை மெதுவாக சமாளிக்க நீங்கள் அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும், குறிப்பாக உங்கள் தலையீடு தேவையில்லாத சிறிய பிரச்சனைகளை அவர்களாகவே பார்த்து கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.
எல்லைகளை பராமரிக்காமல் இருப்பது
பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையே பலவீனமான எல்லைகள் இருந்தால், குழந்தைகள் சுய மற்றும் தானாக முன்னேறும் உணர்வை வளர்த்துக் கொள்வதில் அதிக சிரமத்தை எதிர்கொள்ளலாம். இது குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து நிலையான சரிபார்ப்பு மற்றும் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலைக்கு அவர்களைத் தள்ளும்.
உங்களின் ஒப்புதலுக்கு காத்திருப்பது
உங்கள் குழந்தை உங்கள் பாராட்டு அல்லது ஒப்புதலின் மூலம் அவர்களின் செயல்கள் மற்றும் எண்ணங்களை சரிபார்த்துக் கொள்ள விரும்பினால், அவர்கள் உங்களைச் சார்ந்து இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
உங்கள் குழந்தையின் திறன்களில் நம்பிக்கையுடன் இருக்க அவர்களை ஊக்குவிக்கவும். உங்கள் குழந்தைகள் விருதுகளையோ வெற்றிகளையோ அடையாவிட்டாலும், நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள்.
குழந்தைகளின் நிலையை கவனிக்காமல் இருப்பது
சில சமயங்களில், ஒரு குழந்தையின் தொடர்ச்சியான ஒட்டிக்கொண்ட நடத்தைக்கு முக்கிய காரணம், அவர்களின் சூழ்நிலையை நீங்கள் கவனிக்காமல் இருப்பது. உங்கள் குழந்தை எப்போதாவது உங்களை சார்ந்திருந்தால் பரவாயில்லை.
இருப்பினும், இந்த நடத்தையை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதபோது இந்த நிலை மேலும் மோசமாகிவிடும், மேலும் இது உங்கள் குழந்தையின் ஆளுமைப் பண்பாக முடிவடையும்.
உங்கள் குழந்தையின் குழந்தை மருத்துவரிடம் அவர்களின் கவலைகளை பற்றி விவாதிப்பது எப்போதும் நல்லது, ஏனென்றால் அவர்கள் ஆரோக்கியமான பழக்கங்கள் மற்றும் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் உள்ள குழந்தைகளுக்கான பொதுவான நடத்தை விதிமுறைகளை அவர்களைக் கையாளுவார்கள்.
பெற்றோர்கள் செய்ய வேண்டியவை என்ன?
உங்கள் குழந்தையின் இந்த சார்பு நடத்தையை தவிர்க்க பல வழிமுறைகள் உள்ளன. குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ற முடிவுகளை எடுப்பதற்கும் பொறுப்புகளை எடுப்பதற்கும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களின் சுதந்திரத்தை ஊக்குவிக்கவும்.
பெற்றோராக உங்கள் தேவைகள் மற்றும் உங்கள் குழந்தையின் தேவைகள் ஆகிய இரண்டையும் மதிக்கும் ஆரோக்கியமான எல்லைகளை நிறுவுங்கள். கடைசியாக, உங்கள் குழந்தையின் சுயமரியாதையை வீட்டில் வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.



Click it and Unblock the Notifications
