Latest Updates
-
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக
ஆண் குழந்தையை பெற்றவரா நீங்கள்? இந்த விஷயங்கள கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமாம்..!
உங்கள் கோபத்தை எப்போதும் வெளிக்காட்ட வேண்டாம். ஏனென்றால், உங்கள் பாலினத்தின் படி, நீங்கள் அதிகமாக கோபப்படுவீர்கள். ஆண்களுக்கு அதிகம் கோபம் வரும்போது, சில தவறான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.
பொதுவாக நம் இந்திய சமூகத்தில் ஆண் பிள்ளை ஒருபோலவும், பெண் பிள்ளை ஒருபோலவும் வளர்க்கப்படுகிறார்கள். ஆண், பெண் இடையே பாகுபாடு குழந்தை பருவத்தில் வீட்டிலிருந்தே தொடங்குகிறது. ஆண், பெண் இருவரும் சமம் என்பதையும் யாரும் இங்கு உயர்ந்தவர் இல்லை என்பதையும் உங்கள் குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆனால், நம் சமூகம் பெண்களை விட ஆண் பிள்ளைகள்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை சிறுவயதிலே விதைத்து விடுகிறார்கள். பெரும்பாலும், குழந்தைகளை வளர்க்கும் விஷயத்தில், மகன்கள் மற்றும் மகள்களுக்கு வெவ்வேறு அடிப்படை விதிகள்தான் இங்கு உள்ளன.

பல பெற்றோர்கள் இந்த வேறுபாட்டை நியாயப்படுத்தினாலும், அவர்கள் செயல்பாட்டில் தவறவிடுவது சரியான பாலினத்திற்கு சரியான தகவலைச் சொல்லிக்கொடுக்க தவறிவிடுகிறார்கள். ஆண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

உயர்ந்த பாலினம் இல்லை
பாலின பாகுபாடுகளை களைய நீங்கள் உங்கள் ஆண் குழந்தைக்கு முதலில் சொல்லி கொடுக்க வேண்டும். உடல் வலிமையின் அடிப்படையில் ஆண்கள் வலுவாக இருந்தாலும், உங்கள் சகோதரியை விட அல்லது வேறு எந்த பெண்ணையும் விட நீங்கள் வலிமையானவர் என்று அர்த்தமல்ல. ஆண், பெண் இருவரும் சமம். பாலின பேதம் இருக்கக்கூடாது என்று சொல்லிக்கொடுங்கள். பெண்களைப் போலவே நீங்களும் சமூகத்தின் ஒரு அங்கம்தான்.

தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள்
மற்றவர்களின் உதவியை மட்டும் எப்போதும் நாடாதீர்கள். பிறருக்கு உதவி செய்ய ஆர்வம் காட்டுங்கள். உங்களுக்குத் தெரியாதவர்களுக்குக் கூட எப்போதும் கை கொடுங்கள். ஒருவருக்கு ஒரு கதவைத் திறப்பது, சாலையைக் கடக்க ஒருவருக்கு உதவுவது அல்லது சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பது போன்ற விஷயங்கள் உண்மையில் வாழ்க்கையில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவும். ஒரு உதவி நிச்சயமாக உங்களுக்கு பதிலுக்கு உதவி செய்யும்.

அனைவரையும் மதிக்கவும்
பாலினம் மற்றும் வயது ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு இளையவராக இருக்கக்கூடிய ஒரு நபர் உங்களுக்கு நல்ல வாழ்க்கை போதனைகளை வழங்க முடியும். மரியாதைக்கு வயதும் விதிகளும் இல்லை. உங்களுக்குத் தெரிந்தவர்கள் அல்லது மரியாதைக்குரியவர்கள் என்று நீங்கள் கருதும் நபர்களுக்கு மரியாதை பற்றிய உங்கள் எண்ணத்தை மட்டுப்படுத்த வேண்டும்.

கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்
உங்கள் கோபத்தை எப்போதும் வெளிக்காட்ட வேண்டாம். ஏனென்றால், உங்கள் பாலினத்தின் படி, நீங்கள் அதிகமாக கோபப்படுவீர்கள். ஆண்களுக்கு அதிகம் கோபம் வரும்போது, சில தவறான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. அதனால், மக்கள் கோபமான நபரிடமிருந்து விலகிச் செல்ல விரும்புகிறார்கள். ஆனால் கடினமான காலங்களில் கூட அமைதியாக இருக்கும் நபரை மக்கள் எப்போதும் விரும்புவார்கள்.

மற்றவர்களை குறை சொல்லாதீர்கள்
உங்கள் பாலினம் உங்களை உயர்ந்த மனிதனாக மாற்றாது. எந்த ஒரு நபரையும் குறை சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை என்பதை ஆண் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லிக்கொடுக்க வேண்டும். சக மனிதர்களிடம் எப்போதும் கருணையுடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள். ஒருவருக்கு உங்களைப் போன்ற சலுகைகள் இல்லாவிட்டாலும், நீங்கள் அவர்களுக்கு மரியாதை காட்ட வேண்டும். அவர்களுக்கு சலுகை இல்லாதது உங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆதலால், மற்றவர்களை குறை சொல்ல வேண்டாம் என்று ஆண் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்.

மென்மையாக இருங்கள்
மனிதர்கள் அனைவராலும் போற்றப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. மன்னிக்கவும், நன்றி, தயவு செய்யவும் போன்ற இனிமையான வார்த்தைகளை எப்போது, எங்கு தேவைப்பட்டாலும் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். கூச்ச சுபாவமுள்ள நபராக இருப்பது நல்லதல்ல. ஆனால், ஒருவரிடம் விட்டுக்கொடுப்பது உங்களை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். ஆதலால், மென்மையாக இருக்க ஆண் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்.



Click it and Unblock the Notifications