Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
பெற்றோர்களே! நீங்க செய்யும் இந்த தப்பால...உங்க குழந்தையோட எதிர்காலமே தவறா போயிடுமாம் தெரியுமா?
உங்கள் குழந்தையை நெறிப்படுத்த அல்லது நல்வழிப்படுத்த குற்ற உணர்வு, அவமானம் மற்றும் தண்டனையை நீங்கள் கொடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
ஒவ்வொரு பெற்றோரின் மிகப்பெரிய கடமை குழந்தைகளை வளர்ப்பது. எதிர்காலத்தில் குழந்தைகள் நல்லவர்களாகவும் புத்திசாலியாகவும் சாதனையாளராகவும் வளர வேண்டும் என ஒவ்வொரு பெற்றோரும் ஆசைப்படுவார்கள். ஆனால், அவர்கள் உண்மையாலும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறார்களா? இல்லை. சில சமயங்களில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள் குழந்தைகளின் வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கும். ஒவ்வொரு பெற்றோரும் கீழ்ப்படிதலுள்ள, இணக்கமான குழந்தையை பெற விரும்புகிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான பெற்றோர்கள் உணராதது என்னவென்றால், இணக்கமான குழந்தை பெரும்பாலும் மக்களை மகிழ்விக்கும் நடத்தையை கொண்டிருப்பார்கள். இது அவர்களின் ஆளுமை மற்றும் ஒட்டுமொத்த நம்பிக்கையை பாதிக்கும்.

இதனால், அவர்கள் சுயமதிப்பை இழந்து அடுத்தவர்கள் சொல் கேட்கும் பிள்ளையாக வளருவார்கள். குழந்தைகளின் சுதந்திரமான ஆரோக்கியமான நடத்தைகளை பாதிக்கும்படி பெற்றோர்கள் செய்யும் விஷயங்கள் என்னென்ன என்று இக்கட்டுரையில் காணலாம்.

உங்கள் குழந்தையின் உணர்ச்சிகளை செல்லாததாக்குதல்
ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தைகளின் உணர்ச்சிகளைச் சமாளிக்க மற்றும் அதற்கு மதிப்பு கொடுக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும். அதற்காக, நீங்கள் அவர்களைத் தங்களைத் தற்காத்துக் கொள்ள விட்டுவிடுகிறீர்கள் என்று அர்த்தமல்ல. உங்கள் குழந்தையின் உணர்வுகளைக் குறைத்து மதிப்பிடுவது அல்லது செல்லாததாக்குவது அவர்களின் சுயமரியாதையைப் பாதிக்கலாம். அவர்கள் தங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் சந்தேகிக்கத் தொடங்கலாம். இதனால் மற்றவர்களின் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

எல்லா கோரிக்கைகளுக்கும் 'இல்லை' என்று சொல்வது
உங்கள் குழந்தையின் அனைத்து கோரிக்கைகளையும் நீங்கள் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், கடுமையான 'இல்லை' என்று சொல்வதை விட, அவர்களின் கோரிக்கையைப் புரிந்துகொண்டு மதிப்பிடுங்கள். முதலில், அவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, அது பயனுள்ளதா என்பதை தீர்மானிக்கவும். இல்லையென்றால், உங்கள் பக்க கருத்துக்களை அவர்களுக்கு விளக்கித் தெரிவிக்கவும். அவர்களின் விருப்பத்தை நீங்கள் ஏன் நிறைவேற்ற முடியாது என்பதையும், உண்மையில் நீங்கள் அதை அவர்களுக்கு பின்னர் வழங்க முடியுமா என்பதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இதன் மூலம் அவர்கள் மதிப்புள்ளதாக உணருவார்கள்.

குற்றம், அவமானம் மற்றும் தண்டனை
உங்கள் குழந்தையை நெறிப்படுத்த அல்லது நல்வழிப்படுத்த குற்ற உணர்வு, அவமானம் மற்றும் தண்டனையை நீங்கள் கொடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒழுக்கம் என்று அழைக்கப்படும் இந்த மூன்றும் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே உள்ள தூரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் நம்பிக்கையையும் சுயமரியாதையையும் பாதிக்கும். அவர்கள் அவர்களைப் பற்றிய மக்களின் கருத்தைச் சார்ந்து இருக்கலாம். மேலும் அவர்கள் தங்களை மதிக்காமல் இருக்கலாம்.

கீழ்ப்படிதலுக்காக வெகுமதி அளிக்கிறீர்களா?
கீழ்ப்படிதல் குணம் நல்லது. ஆனால், எல்லாவற்றிற்கும் 'ஆம்' சொல்லிக்கொண்டு இருக்கும் குழந்தையாக இருப்பது நல்லதல்ல. பெற்றோர்களாகிய உங்களிடம் குழந்தைகள் இணக்கமாக இருப்பதால், நீங்கள் சொல்வதை எல்லாம் ஒப்புக்கொள்கிறார் அல்லது உங்கள் உத்தரவுகளைப் பின்பற்றுவது சரியானதல்ல. அவர்கள் எவ்வளவு சரியாக இருந்தாலும், அவர்கள் நல்லவர்கள் அல்லது வாழ்க்கையில் வெற்றிபெற வாய்ப்பில்லை. மாறாக, தங்களுடைய சொந்தக் கருத்துகள் இல்லாத மக்களை மகிழ்விப்பவர்களாக மாறலாம். யாராயினும் தங்களுக்கென்று சொந்த கருத்துக்கள் இருக்க வேண்டும், அதன்படி நடக்க வேண்டும்.

பிள்ளையின் கருத்தைப் பற்றி மோசமாக உணரச் செய்தல்
உங்கள் குழந்தை உங்களுடன் உடன்படவில்லை என்றால் அல்லது உங்கள் யோசனைகள் மற்றும் கருத்துக்கள் பற்றி கேள்வி எழுப்பினால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர்களிடம் விளக்கம் கேட்கிறீர்களா அல்லது நேரடியாக அவர்களை அழைத்து பேசுகிறீர்களா? குழந்தையின் கருத்துக்களை வெளிப்படுத்த அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் போது, அது உங்களைக் கவர்ந்தாலும், பிந்தையது அவர்களின் படைப்பாற்றல் மற்றும் அறிவாற்றல் திறன்களை மட்டுமே கட்டுப்படுத்துகிறது. ஆனால் உங்களுடன் உடன்படவில்லை என்று குழந்தைகளை மோசமாக உணர வைப்பது சரியானதல்ல. ஏனெனில், அவர்கள் ஒரு கருத்தைக் கொண்டிருக்க முடியாது என்றும் மற்றவர்கள் சொல்வதை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நீங்கள் அவர்களிடம் கூறுகிறீர்கள். இது மக்களை மகிழ்விப்பவர்களின் பண்புகளில் ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications











