Just In
- 7 min ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- 44 min ago கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- 1 hr ago இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- 1 hr ago யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- News மோடியின் முஸ்லிம் பேச்சு.. விமர்சித்த பாஜக சிறுபான்மை அணித் தலைவர் கட்சியிலிருந்து டிஸ்மிஸ்
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உங்க கொலஸ்ட்ராலை குறைக்கவும் உங்க குழந்தையோட நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இந்த ஒன்னு போதுமாம்!
சியாவன்பிராஷ் ஒரு சக்திவாய்ந்த மூலிகை மருந்து ஆகும். இது அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது மற்றும் எந்தவொரு உடல்நலக் கவலையையும் தீர்க்க முடியும்.
சியாவன்பிராஷ் என்பது ஆயுர்வேதத்தில் மிகவும் பிரபலமான மூலிகைகள் கலந்த ஒரு கலவையாகும். இதில், தேன், நெய், இந்திய நெல்லிக்காய் (அம்லா), எள் எண்ணெய், பெர்ரி மற்றும் பல்வேறு மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்டது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த மூலிகை கலவை உதவுகிறது. இந்த ஆயுர்வேதமானது சுமார் 50 மருத்துவ மூலிகைகளை பதப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த தயாரிப்பு பழ ஜாம் போன்ற நிலைத்தன்மையையும், இனிப்பு, புளிப்பு மற்றும் காரமான சுவையையும் கொண்டுள்ளது. குழந்தைகளின் வளரும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த சியாவன்பிராஷ் உதவும்.
மேலும், இது சுவாச ஆரோக்கியம், செரிமான ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் மட்டங்களை அதிகரிக்கும். சியாவன்பிராஷில் உள்ள பல்வேறு ஆயுர்வேத பொருட்கள், தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கவும், ஊட்டச்சத்து மற்றும் ஆற்றலை வழங்கவும் உதவுகின்றன. இதை 3 வயது முதல் குழந்தைகள் உட்கொள்ளலாம். பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சியாவன்பிராஷ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
என்னென்ன நன்மைகள்?
உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதற்கு சியாவன்பிராஷ் உதவுகிறது மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக, இது வீரியம் மற்றும் உயிர்ச்சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் வயதான செயல்முறையை குறைக்கிறது. மூளையின் டானிக்காக, நினைவாற்றல் போன்ற மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் இந்த மூலிகை கலவை உதவுகிறது.
நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
சியாவன்பிராஷ் என்பது ஒரு பாரம்பரிய உயிரியக்க ஆரோக்கிய துணைப் பொருளாகும். இது பல நோயெதிர்ப்பு மண்டல செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது மிகவும் பயனுள்ள மருந்து. சியாவன்பிராஷில் நெல்லிக்காய் உள்ளது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, இது நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை தூண்டுவதாக அறியப்படுகிறது. ஆம்லாவில் அடாப்டோஜெனிக் பண்புகள் உள்ளன. இது உடலை மன அழுத்தத்திற்கு ஏற்ப மாற்றவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக்கவும் அனுமதிக்கிறது. சியவன்பிராஷ் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி, ஆற்றல் நிலைகள் மற்றும் உடல் தகுதி ஆகியவற்றை அதிகரிக்க உதவுகிறது.
செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது
சியவன்பிராஷில் உள்ள பொருட்கள் செரிமான செயல்முறைக்கு உதவுகின்றன. இந்த ஆயுர்வேத மருத்துவ சப்ளிமெண்ட் வாயுவைத் தடுக்க உதவும் கார்மினேடிவ் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும், இது இரைப்பை அழற்சியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் இரைப்பை குடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த உதவுகிறது. செரிமானத்தை ஊக்குவிப்பதன் மூலம் திரட்டப்பட்ட கழிவுகளை (கழிவுப் பொருட்களை) அகற்றுவதற்கும் சியவன்ப்ராஷ் உதவுகிறது. சியாவன்பிராஷின் வழக்கமான நுகர்வு முறையான குடல் இயக்கங்கள் மற்றும் செரிமானத்தை எளிதாக்கும் என்று கூறப்பபடுகிறது.
பருவகால நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது
சியாவன்பிராஷ் ஒரு சக்திவாய்ந்த மூலிகை மருந்து ஆகும். இது அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது மற்றும் எந்தவொரு உடல்நலக் கவலையையும் தீர்க்க முடியும். நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் மற்றும் தொற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடிய பருவகால மாற்றங்களால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். தினசரி அடிப்படையில் தேவையான அளவு சியாவன்பிராஷை உட்கொள்வது பருவகால நோய்கள் மற்றும் மீண்டும் மீண்டும் வரும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும்.
தோஷங்கள் மீதான விளைவு
பண்டைய ஆயுர்வேத நூல்கள் மற்றும் இலக்கிய நூல்களின் படி, சியாவன்பிராஷ் என்பது மனித உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்கும் அதிசய மூலிகை கலவை. இது உடலுக்கு புத்துயிர் அளிப்பது மட்டுமல்லாமல், கபா (பூமி மற்றும் நீர்), வதா (காற்று), பித்த (நெருப்பு மற்றும் காற்று) ஆகிய மூன்று தோஷங்களையும் சமநிலைப்படுத்துகிறது.
நினைவாற்றல் மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
ஆரோக்கியமான மூளையை பராமரிப்பதில் சியாவன்பிராஷ் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெளிவாகிறது. மூளை செல்களுக்கு ஊட்டமளிக்கும் இயற்கையான பொருட்கள் சியாவன்பிராஷில் உள்ளன. சியாவன்ப்ராஷின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சரியான நினைவக செயல்பாடுகளை துரிதப்படுத்துகிறது மற்றும் உடலின் பல்வேறு பாகங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது. சியாவன்பிராஷ் ஒவ்வொரு தனிநபரின் முதல் தேர்வாக இருக்கிறது. ஏனெனில் தக்கவைப்பு மற்றும் கற்றல் திறனை அதிகரிக்கும் அதன் ஆற்றல்மிக்க திறன் கொண்டுள்ளது.