Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
குழந்தைகளுக்கு ஆபத்து உங்கள் வீட்டில் தான்.!
1- 3 வயதுள்ள குழந்தைகளை மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும். எமர்ஜென்ஸி வார்டுகளில் வரும் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஆபத்து வீட்டில்தான் நேரிடுகிறது என ஜான் ஹாப்கின் பல்கலைக்கழகத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் ஸ்டெர்லிங் ஹேரிங் கூறுகிறார்.

குழந்தைகளுக்கு இந்த 1- 3 வயதுகளில் ஏதாவது செய்து கொண்டேயிருக்க வேண்டும் என தோன்றும். அவர்களுக்கு இது ஆபத்து, இது நல்லது எனவும் தெரியாது. பெரும்பாலான பெற்றோர்கள் ஆபத்து நிறைந்த ஆசிட், ஸ்ப்ரே, மற்றும் தரை துடைக்கும் க்ளீனர் ஆகியவற்றை அவர்களின் கைக் கெட்டும் தூரத்தில் வைக்கிறார்கள்.
எல்லாவற்றையும் வாயில் வைக்கும் அந்த பருவத்தில் அவர்கள் விளைவுகளை தெரியாமல், ஸ்ப்ரே, க்ளீனர் ஆகியவற்றை விழுங்க அல்லது கண்ணில் பட நேரிடுகிறது. கண்களை இழக்கும் அபாயங்களும் உண்டாகிறது. பெரும்பாலான குழந்தைகள் இதனால் கண்பார்வை இழக்க நேரிடுகிறது.
ஹேரிங்க் மற்றும் அவரது உதவி ஆராய்ச்சியாளர்களும் கடந்த 4 வருடங்களாக சுமார் 900 மருத்துவமனைகளில் ஆராய்ச்சி நடத்தியிருக்கிறார்கள். இதில் வரும் எல்லா குழந்தைகள் நல எமர்ஜென்சி வார்டுகளிலுருந்தும் கணக்கெடுப்பு நடத்தி இந்த ஆய்வை சமர்ப்பித்திருக்கிறார்கள்.
இதில் தெரிய வந்தது என்னவென்றால், பெரும்பாலான கீழ் மற்றும் மத்திய வர்க்கத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு எட்டும் தூரத்திலேயே ஆபத்து நிறைந்த பொருட்களை வைக்கிறார்கள். இதனால் அவற்றை குடித்து, அல்லது கண்களில் பட்டு ஆபத்து நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்த மாதிரியான நேரங்களில் கட்டாயம் முதலுதவி செய்து மருத்துவ மனைகளில் கூட்டி வந்தால் ஆபத்தை தடுக்கலாம். கண்களில் ஆசிட் அல்லது ஸ்ப்ரே பட்டால் உடனடியாக கண்களை கழுவிடவேண்டும் என்பதே பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை. இதனால் விஷத்தின் வீரியத்தை குறைக்கலாம்.



Click it and Unblock the Notifications


