Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
வறுத்த உணவுகளை கொடுக்காதீங்க! மூளையை பாதிக்கும்!!

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்களுக்கு அக்கறை அதிகம் உண்டு. அவர்களின் வளர்ச்சியிலும், புத்திசாலித்தனத்திலும் ஆர்வம் கொண்ட பெற்றோர்கள் அவர்களுக்கு சத்தான உணவை மட்டுமே கொடுப்பார்கள். சில குழந்தைகள் ஆர்வத்தில் சிக்கன் ப்ரை, ஐஸ்க்ரீம், சாக்லேட், பப்ஸ், பர்கர் உருளைக் கிழங்கு வறுவல் போன்றவைகளை விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் இதனால், குழந்தையின் உடல் மட்டுமல்ல, மூளையும் பாதிக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் குழந்தையின் மூளை மந்தமாவதோடு அவர்களுக்கு டிஸ்லெக்சியா என்ற நோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எப்போதும் ஓடி விளையாடிக் கொண்டு சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தை திடீரென மந்தமாகக் காணப்பட்டால் அதை உடனடியாக கவனிக்க வேண்டும். சாதாரணமாக விட்டால் விபரீதமான விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.
அதேபோல் கடைகளில் விற்பனை செய்யப்படும் டின் பழச்சாறுகளையும் கொடுக்கக் கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக, காய்கறிகள், பழங்கள் போன்றவை உடலுக்கு நன்மையை அளிக்கும். கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை என்கிறது ஜெர்னல் பீடியாட்ரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று. மாறாக இவை உடல் நலத்தைக் கெடுத்து விடுகிறதாம். எனவே 100 சதவிகிதம் பழச்சாறு என்றெல்லாம் கவர்ச்சிகரமாய் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து அதனை குழந்தைகளுக்கும் வாங்கி கொடுக்காதீர்கள் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் குழந்தைகளை ஊட்டச்சத்தான உணவை உண்ணுமாறு நீங்கள் எந்த அளவிற்கு வற்புறுத்துகிறீர்களோ, அந்த அளவிற்கு தண்ணீர் அருந்துவதையும் ஊக்கப்படுத்துங்கள். சாப்பிட்ட பிறகு முழுதாக ஒரு டம்ளர் நீராவது அவர்கள் குடிக்க வேண்டும் என்பதை பழக்கப்படுத்த வேண்டும். விளையாட்டின் போது, படித்துக் கொண்டிருக்கும் போது இடை இடையே நீர் அருந்த வேண்டும் என்பதை சில நாட்களுக்கு நினைவு படுத்துங்கள். எங்கு சென்றாலும் தண்ணீர் கொண்டு செல்லும் பழக்கத்தையும் கொண்டு வாருங்கள். பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications











