Latest Updates
-
சனிப்பெயர்ச்சியால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலுக்கு ஏற்ற ஜில்லென்ற நன்னாரி பால் சர்பத் ரெசிபி - செஞ்சு பாருங்க, குளுகுளுனு சூப்பரா இருக்கும் -
கேரளா ஸ்டைல் தக்காளி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடீஸ்வர யோகத்தைப் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விவாகரத்து விகிதம் குறைவு என்பது பெருமையா? குடும்ப கௌரவத்திற்காகத் தம்பதிகள் அனுபவிக்கும் மௌனமான சித்திரவதை இதுதானா? -
திருமண உறவில் வரதட்சணை கொடுமை! உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு உங்கள் பாதுகாப்பிற்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா? -
சாணக்கிய நீதி படி பெண்கள் அவர்களின் கணவரிடம் எப்போதும் மறைக்கும் 5 ரகசியங்கள் என்னென்ன தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, ஹோட்டலில் சாப்பிடுவதை விட செமையா இருக்கும் -
வெயில் கொளுத்துதா? இந்த வாஸ்து செடிகளை வீட்ல வைங்க… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தானா வரும்! -
June 2026 Horoscope: ஜூன் மாதத்தில் பெரும் நஷ்டத்தையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்
செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?

என்ன காரணம்?
குழந்தைகளுக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம், மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத் தன்மை காணப்படும். இதனால் மூக்கில் வெடிப்புகள் தோன்றும். அப்போது மூக்கிலிருந்து இரத்தம் வடியும்.
மூக்கிலிருந்து சளியை வெளியேற்ற மூக்கைப் பலமாகச் சிந்துவார்கள். இதனாலும் இரத்தக் குழாய்கள் வெடித்து இரத்தம் வரலாம்.
மூக்கு அடைத்துக் கொள்ளும் போது அடைப்பை விலக்க குழந்தைகள் அடிக்கடி மூக்கைக் குடைவார்கள். இதனாலும் மூக்கிலிருந்து இரத்தம் கொட்டும்.
குழந்தைகள் விளையாட்டாக குச்சி, பேப்பர், ரப்பர், பஞ்சு, பிளாஸ்டிக் பொருள்கள் முதலிய பொருள்களை மூக்கில் திணித்துக் கொள்வார்கள். இவை மூக்கினுள்ளே ஊறி, புடைத்து, புண் ஏற்படுத்தும். அப்போது அந்த புண்ணிலிருந்து இரத்தம் கசியும்.
மூக்குக்கு மிகுந்த குளிர்ச்சியும், மிகுந்த வெப்பமும் ஆகாது. குளிர்காலங்களில் குளிர்ந்த காற்றைச் சுவாசித்தாலும், கோடையில் வெப்பம் மிகுந்த காற்றைச் சுவாசித்தாலும், மூக்கில் இரத்தம் வடியும்.
இரத்தம் வருவதை நிறுத்த என்ன செய்யலாம்?
குழந்தையை லேசாகத் தலையைக் குனிந்து உட்காரச் சொல்லி, வாயைத் திறந்து மூச்சுவிடச் சொல்ல வேண்டும்.
மூக்கின் இரண்டு துவாரங்களையும் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்களால் பத்து நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாகப் அழுத்தமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இரத்தம் வடிவது நின்றுவிடும்.
பஞ்சு அல்லது சுத்தமான துணியைக் நீரில் நனைத்து, மூக்கினுள் அழுத்தமாகத் திணித்து, மூக்கை அடைக்கலாம். அப்படியும் இரத்தம் வடிவது நிற்கவில்லை என்றால், இரத்தம் மூக்கின் மேற்பகுதியிலிருந்து தான் வருகிறது, அதற்கு உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
என்ன செய்யக்கூடாது?
1. மூக்கைச் சிந்தக்கூடாது.
2. விரலை நுழைத்து அடைக்கக் கூடாது
3. மருத்துவர் சொல்லாமல் எந்த சொட்டு மருந்தையும் மூக்கில் விடக்கூடாது.
ஆகவே குழந்தைகளை பத்திரமா பாத்துக்கோங்க!!!



Click it and Unblock the Notifications