Latest Updates
-
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
குட்டீஸ்க்கு ஜீரணக்கோளாறா? ஆரஞ்சு ஜூஸ் கொடுங்க!

உண்ட உணவு ஜீரணமாகாமல் வயிறு மந்தமாக இருந்தால் சரியாகும் வரை திட உணவு கொடுக்கவேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்தைத் தீர்க்க சீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு.
முதலில் குழந்தைகளுக்கு பழச்சாறுகள் மட்டுமே கொடுக்க வேண்டும், ஆரஞ்சு சாற்றை வென்னீரில் 50 : 50 என்ற விகிதத்தில் முதலில் கொடுக்கலாம்.
சீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. சீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம். எலுமிச்சையில் உள்ள அமிலச்சத்து ஜீரணப்பாதையை சரியாக்கும்.
திராட்சைப் பழம் அஜீரணக்கோளாறுக்கு ஏற்றது. உடனடியாக பலனளிக்கும். வயிறு வலி இருந்தாலும் உடனடியாக சரியாகும். அதேபோல் அன்னாசிபழச்சாற்றினை குழந்தைகளுக்குக் கொடுத்தால் அது டானிக் போல செயல்பட்டு உடனடி பலன் தரும். பழங்கள், பழச்சாறுகள் உணவு முறையை மேலும் 2 நாட்களுக்கு கொடுத்து வந்தபிறகு, சீரணமாகக் கூடிய லேசாக வேகவைத்த காய்கறிகள் மற்றும் மோர் ஆகியவற்றை கொடுக்கலாம்.
அஜீரணக்கோளாறு ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு உணவு அருந்தும்போது தண்ணீர் குடிக்கத் தரக்கூடாது. சாப்பிடும் முன் அரை மணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து தண்ணீர் கொடுக்கலாம்
பசிக்காமல் சாப்பிடக் கொடுக்கக் கூடாது. அதேபோல் வயிறு முட்ட சாப்பிடத் தரக்கூடாது. சாப்பிடும் போது அவசரமாக விழுங்காமல் உணவை நன்றாக மென்று விழுங்கச் சொல்லவேண்டும்.
இந்த நடைமுறைகளை பின்பற்றினால் குழந்தைகளின் ஜீரணக்கோளாறுகளை சரியாக்கலாம்.



Click it and Unblock the Notifications