Latest Updates
-
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது!
குட்டீஸ்க்கு ஜீரணக்கோளாறா? ஆரஞ்சு ஜூஸ் கொடுங்க!

உண்ட உணவு ஜீரணமாகாமல் வயிறு மந்தமாக இருந்தால் சரியாகும் வரை திட உணவு கொடுக்கவேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்தைத் தீர்க்க சீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு.
முதலில் குழந்தைகளுக்கு பழச்சாறுகள் மட்டுமே கொடுக்க வேண்டும், ஆரஞ்சு சாற்றை வென்னீரில் 50 : 50 என்ற விகிதத்தில் முதலில் கொடுக்கலாம்.
சீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. சீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம். எலுமிச்சையில் உள்ள அமிலச்சத்து ஜீரணப்பாதையை சரியாக்கும்.
திராட்சைப் பழம் அஜீரணக்கோளாறுக்கு ஏற்றது. உடனடியாக பலனளிக்கும். வயிறு வலி இருந்தாலும் உடனடியாக சரியாகும். அதேபோல் அன்னாசிபழச்சாற்றினை குழந்தைகளுக்குக் கொடுத்தால் அது டானிக் போல செயல்பட்டு உடனடி பலன் தரும். பழங்கள், பழச்சாறுகள் உணவு முறையை மேலும் 2 நாட்களுக்கு கொடுத்து வந்தபிறகு, சீரணமாகக் கூடிய லேசாக வேகவைத்த காய்கறிகள் மற்றும் மோர் ஆகியவற்றை கொடுக்கலாம்.
அஜீரணக்கோளாறு ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு உணவு அருந்தும்போது தண்ணீர் குடிக்கத் தரக்கூடாது. சாப்பிடும் முன் அரை மணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து தண்ணீர் கொடுக்கலாம்
பசிக்காமல் சாப்பிடக் கொடுக்கக் கூடாது. அதேபோல் வயிறு முட்ட சாப்பிடத் தரக்கூடாது. சாப்பிடும் போது அவசரமாக விழுங்காமல் உணவை நன்றாக மென்று விழுங்கச் சொல்லவேண்டும்.
இந்த நடைமுறைகளை பின்பற்றினால் குழந்தைகளின் ஜீரணக்கோளாறுகளை சரியாக்கலாம்.



Click it and Unblock the Notifications