Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
குட்டீஸ்க்கு ஜீரணக்கோளாறா? ஆரஞ்சு ஜூஸ் கொடுங்க!

உண்ட உணவு ஜீரணமாகாமல் வயிறு மந்தமாக இருந்தால் சரியாகும் வரை திட உணவு கொடுக்கவேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்தைத் தீர்க்க சீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு.
முதலில் குழந்தைகளுக்கு பழச்சாறுகள் மட்டுமே கொடுக்க வேண்டும், ஆரஞ்சு சாற்றை வென்னீரில் 50 : 50 என்ற விகிதத்தில் முதலில் கொடுக்கலாம்.
சீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. சீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம். எலுமிச்சையில் உள்ள அமிலச்சத்து ஜீரணப்பாதையை சரியாக்கும்.
திராட்சைப் பழம் அஜீரணக்கோளாறுக்கு ஏற்றது. உடனடியாக பலனளிக்கும். வயிறு வலி இருந்தாலும் உடனடியாக சரியாகும். அதேபோல் அன்னாசிபழச்சாற்றினை குழந்தைகளுக்குக் கொடுத்தால் அது டானிக் போல செயல்பட்டு உடனடி பலன் தரும். பழங்கள், பழச்சாறுகள் உணவு முறையை மேலும் 2 நாட்களுக்கு கொடுத்து வந்தபிறகு, சீரணமாகக் கூடிய லேசாக வேகவைத்த காய்கறிகள் மற்றும் மோர் ஆகியவற்றை கொடுக்கலாம்.
அஜீரணக்கோளாறு ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு உணவு அருந்தும்போது தண்ணீர் குடிக்கத் தரக்கூடாது. சாப்பிடும் முன் அரை மணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து தண்ணீர் கொடுக்கலாம்
பசிக்காமல் சாப்பிடக் கொடுக்கக் கூடாது. அதேபோல் வயிறு முட்ட சாப்பிடத் தரக்கூடாது. சாப்பிடும் போது அவசரமாக விழுங்காமல் உணவை நன்றாக மென்று விழுங்கச் சொல்லவேண்டும்.
இந்த நடைமுறைகளை பின்பற்றினால் குழந்தைகளின் ஜீரணக்கோளாறுகளை சரியாக்கலாம்.



Click it and Unblock the Notifications











