Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
செல்போன் கலாச்சாரத்தால் சீரழியும் மாணவர்கள்: பெற்றோர்கள் கவலை
நெல்லை: செல்போன் கலாச்சாரத்தால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் ஒன்றான செல்போனால் பொதுமக்களுக்கு பல நன்மைகள் ஏற்பட்டாலும் சமுதாயத்தை சீரழிக்கும் பல தீமைகளும் உள்ளன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தற்போது செல்போனால் சீரழிந்து வருகின்றனர். மாணவர்களின் செல்போனில் அருவருக்கத்தக்க படங்கள் உள்ளன. இதனால் அவர்களின் மனது பாழாகி குற்றச் செயல் புரிய தூண்டப்படுகின்றனர்.
பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடைகளை மீறி செல்போன்களை பள்ளி, மற்றும் கல்லுரிகளுக்கு கொண்டு செல்கின்றனர். மாணவர்களிடம் புழக்கத்தில் உள்ள செல்போன்களை வாங்கி மெமரி கார்டுகளை போலீசார் சோதனையி்ட்டு ஆபாச படங்களை அதில் வைத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்களிலும், பள்ளி, கல்லூரி அருகிலும் செல்போன் மன்மத ராஜாக்களின் அட்டூழியம் அதிகரித்து வருவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்ல ஒரு சில செல்போன் கடைகள் துணை புரிகின்றன. இங்கு மாணவர்களுக்கு ஆபாச படங்கள் மெமரி கார்டில் பதிவு செய்து வழங்குவதாகவும் பெற்றோர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



Click it and Unblock the Notifications