Just In
- 12 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 52 min ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 1 hr ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 2 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
Don't Miss
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
செல்போன் கலாச்சாரத்தால் சீரழியும் மாணவர்கள்: பெற்றோர்கள் கவலை
நெல்லை: செல்போன் கலாச்சாரத்தால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் ஒன்றான செல்போனால் பொதுமக்களுக்கு பல நன்மைகள் ஏற்பட்டாலும் சமுதாயத்தை சீரழிக்கும் பல தீமைகளும் உள்ளன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தற்போது செல்போனால் சீரழிந்து வருகின்றனர். மாணவர்களின் செல்போனில் அருவருக்கத்தக்க படங்கள் உள்ளன. இதனால் அவர்களின் மனது பாழாகி குற்றச் செயல் புரிய தூண்டப்படுகின்றனர்.
பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடைகளை மீறி செல்போன்களை பள்ளி, மற்றும் கல்லுரிகளுக்கு கொண்டு செல்கின்றனர். மாணவர்களிடம் புழக்கத்தில் உள்ள செல்போன்களை வாங்கி மெமரி கார்டுகளை போலீசார் சோதனையி்ட்டு ஆபாச படங்களை அதில் வைத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்களிலும், பள்ளி, கல்லூரி அருகிலும் செல்போன் மன்மத ராஜாக்களின் அட்டூழியம் அதிகரித்து வருவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்ல ஒரு சில செல்போன் கடைகள் துணை புரிகின்றன. இங்கு மாணவர்களுக்கு ஆபாச படங்கள் மெமரி கார்டில் பதிவு செய்து வழங்குவதாகவும் பெற்றோர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.