Latest Updates
-
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா? -
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் தன யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தட்டுக்கடை புதினா தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 03 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கவலை அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்...! -
ஒரே நேரத்தில் வக்ர நிலையில் 4 கிரகங்கள்: மார்ச் 04 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்..
உங்க மார்பக காம்பு ட்ரையாவும் வெடிச்சி போயும் இருக்கா? அப்ப அந்த இடத்துல இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க!
சரும அல்லது கூந்தல் பிரச்சனை என எதுவாக இருந்தாலும், நீங்கள் எப்போதும் தேங்காய் எண்ணெயை நம்பலாம். இது உங்கள் முடி மற்றும் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து பராமரிக்க உதவுகிறது.
ஆனால் மார்பக காம்பு வெடிப்புகளுக்கு தேங்காய் எண்ணெய் நல்லதா? குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் போது அதை பயன்படுத்தலாமா? என்ற கேள்விகள் நமக்குள் இருக்கும்.

பண்டைய காலம் முதல் இன்று வரை தலைமுடி மற்றும் சரும பராமரிப்பில் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த எண்ணெயின் சில துளிகள் எடுத்து, உங்கள் தலைமுடி அல்லது சருமத்தில் தடவி ஈரப்பதமாகவும் நீரேற்றமாகவும் மாற்ற பயன்படுத்த வேண்டும். ஆனால் உலர்ந்த மார்பக காம்புகளுக்கு தேங்காய் எண்ணெய் பாதுகாப்பானதா? என்று கேட்டால் நாம் யோசிக்கிறோம்.
அதுவும் குறிப்பாக நீங்கள் தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் சரும பராமரிப்பில் நன்றாக வேலை செய்கிறது. ஆனால் உலர்ந்த மார்பக காம்புகளுக்கு என்று வரும்போது, நீங்கள் அவற்றை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பக காம்புகளில் வெடிப்பு ஏற்பட்டால், மிகவும் கவனமாக தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும்.
பல்வேறு காரணங்களால் மார்பக காம்புகள் உலர்ந்து அல்லது விரிசல் ஏற்படக்கூடும். இறுக்கமான ஆடைகளை அணிவது, தொடர்ந்து மார்பகங்களை தேய்ப்பது போன்ற காரணங்களால் கூட ஏற்படலாம். மேலும், ஆண்டிபயாடிக் எதிர்வினை அல்லது தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் ஈஸ்ட் தொற்றால் கூட ஏற்படலாம். மார்பக காம்புகள் வறண்டு விரிசல் ஏற்படுவதற்கு எக்ஸிமாவும் ஒரு காரணம். எக்ஸிமா என்பது தோலின் மேல் ஏற்படும் ஒருவித நாள்பட்ட சரும நோயாகும். இது பெரும்பாலும் தோல் வறட்சியை ஏற்படுத்தும்.
உலர்ந்த மார்பக காம்புகளுக்கு தேங்காய் எண்ணெய் நல்லதா?
தேங்காய் எண்ணையை பெண்கள் அடிக்கடி ஸ்ட்ரெச் மார்க் அல்லது உதடு வெடிப்புக்கு பயன்படுத்துவார்கள். உங்கள் சருமத்தை ஆற்றுவதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்தது. உங்கள் மார்பக காம்புகளில் சிறிதளவு தேங்காய் எண்ணெயைத் தடவி, மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இது மார்பக காம்புகளில் விரிசல், புண் அல்லது அரிப்பு போன்றவற்றுக்குத் தேவையான நிவாரணத்தைக் கொடுக்கும். இது ஒரு ஈரப்பதமூட்டும் முகவர் என்பதால், நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும்போது இது ஒரு சிறந்த இயற்கை மூலப்பொருளாக இருக்கும்.
தேங்காய் எண்ணெயில் ஆண்டிமைக்ரோபியல், பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் குணப்படுத்துவதை ஊக்குவிக்க உதவுகிறது. இதில் லாரிக் அமிலம் உள்ளது, இது தாய்ப்பாலிலும் உள்ளது. நீங்கள் பாக்டீரியா மற்றும் பூஞ்சை பிரச்சனைகளை எதிர்கொண்டால் அதை குணப்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும். இது உலர்ந்த மார்பக காம்புகளைத் தடுக்கவும், அவை குணமடைய அனுமதிக்கவும் உதவும் அதே வேளையில், தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும் உதவும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் கர்ப்ப காலத்தில் பல பாக்டீரியாக்களை செயலிழக்கச் செய்யும் மற்றும் பொதுவான பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளையும் தடுக்கும். உங்கள் மார்பக காம்புகளில் இதைப் பயன்படுத்தும்போது அதை மிதமாகப் பயன்படுத்துங்கள், நீங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தாலும் தேங்காய் எண்ணெய் பாதுகாப்பானதாக இருக்கும். இது, உங்கள் குழந்தை தேங்காய் எண்ணெயை உட்கொள்ள வேண்டும் என்று அர்த்தப்படுத்துவதில்லை.
மார்பக காம்புகளில் தேங்காய் எண்ணெய் தடவி இருந்தால், அது உங்கள் குழந்தைக்கு எந்தத் தீங்கும் செய்யப் போவதில்லை. உங்கள் பிள்ளைக்கு ஒவ்வாமை உணர்திறன் இருப்பதை நீங்கள் கவனித்தால், உடனடியாக அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். தேங்காய் எண்ணெய் இயற்கையான தயாரிப்பு என்றும் உங்களுக்கு ஒவ்வாமை இல்லாவிட்டால் 100 சதவீதம் பாதுகாப்பானது.
உலர்ந்த முலைக்காம்புகளுக்கான பிற எண்ணெய்கள்
தேங்காய் எண்ணெய் தவிர, ஆலிவ் எண்ணெய் மார்பகக்காம்பு பிளவுகள் அல்லது விரிசல் அல்லது வறட்சிக்கு பயன்படுத்தப்படலாம். மார்பக காம்பு வலியைத் தணிக்கவும், குணமடையவும், நீர்த்த புதினா, லானோலின் எண்ணெய் அல்லது மெந்தோல் எசென்ஸ் ஆகியவற்றை உங்கள் மார்பக காம்புகளில் தடவலாம். ஆண்டிசெப்டிக் கிரீம்கள் அல்லது லோஷன்களை பயன்படுத்தி இருந்தால், பால் கொடுப்பதற்கு முன்பு நீங்கள் நன்றாக துடைக்க வேண்டும் அல்லது மார்பக காம்புகளை நன்றாக கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications














