Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
உங்க மார்பக காம்பு ட்ரையாவும் வெடிச்சி போயும் இருக்கா? அப்ப அந்த இடத்துல இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க!
சரும அல்லது கூந்தல் பிரச்சனை என எதுவாக இருந்தாலும், நீங்கள் எப்போதும் தேங்காய் எண்ணெயை நம்பலாம். இது உங்கள் முடி மற்றும் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து பராமரிக்க உதவுகிறது.
ஆனால் மார்பக காம்பு வெடிப்புகளுக்கு தேங்காய் எண்ணெய் நல்லதா? குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் போது அதை பயன்படுத்தலாமா? என்ற கேள்விகள் நமக்குள் இருக்கும்.

பண்டைய காலம் முதல் இன்று வரை தலைமுடி மற்றும் சரும பராமரிப்பில் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த எண்ணெயின் சில துளிகள் எடுத்து, உங்கள் தலைமுடி அல்லது சருமத்தில் தடவி ஈரப்பதமாகவும் நீரேற்றமாகவும் மாற்ற பயன்படுத்த வேண்டும். ஆனால் உலர்ந்த மார்பக காம்புகளுக்கு தேங்காய் எண்ணெய் பாதுகாப்பானதா? என்று கேட்டால் நாம் யோசிக்கிறோம்.
அதுவும் குறிப்பாக நீங்கள் தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் சரும பராமரிப்பில் நன்றாக வேலை செய்கிறது. ஆனால் உலர்ந்த மார்பக காம்புகளுக்கு என்று வரும்போது, நீங்கள் அவற்றை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பக காம்புகளில் வெடிப்பு ஏற்பட்டால், மிகவும் கவனமாக தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும்.
பல்வேறு காரணங்களால் மார்பக காம்புகள் உலர்ந்து அல்லது விரிசல் ஏற்படக்கூடும். இறுக்கமான ஆடைகளை அணிவது, தொடர்ந்து மார்பகங்களை தேய்ப்பது போன்ற காரணங்களால் கூட ஏற்படலாம். மேலும், ஆண்டிபயாடிக் எதிர்வினை அல்லது தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் ஈஸ்ட் தொற்றால் கூட ஏற்படலாம். மார்பக காம்புகள் வறண்டு விரிசல் ஏற்படுவதற்கு எக்ஸிமாவும் ஒரு காரணம். எக்ஸிமா என்பது தோலின் மேல் ஏற்படும் ஒருவித நாள்பட்ட சரும நோயாகும். இது பெரும்பாலும் தோல் வறட்சியை ஏற்படுத்தும்.
உலர்ந்த மார்பக காம்புகளுக்கு தேங்காய் எண்ணெய் நல்லதா?
தேங்காய் எண்ணையை பெண்கள் அடிக்கடி ஸ்ட்ரெச் மார்க் அல்லது உதடு வெடிப்புக்கு பயன்படுத்துவார்கள். உங்கள் சருமத்தை ஆற்றுவதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்தது. உங்கள் மார்பக காம்புகளில் சிறிதளவு தேங்காய் எண்ணெயைத் தடவி, மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இது மார்பக காம்புகளில் விரிசல், புண் அல்லது அரிப்பு போன்றவற்றுக்குத் தேவையான நிவாரணத்தைக் கொடுக்கும். இது ஒரு ஈரப்பதமூட்டும் முகவர் என்பதால், நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும்போது இது ஒரு சிறந்த இயற்கை மூலப்பொருளாக இருக்கும்.
தேங்காய் எண்ணெயில் ஆண்டிமைக்ரோபியல், பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் குணப்படுத்துவதை ஊக்குவிக்க உதவுகிறது. இதில் லாரிக் அமிலம் உள்ளது, இது தாய்ப்பாலிலும் உள்ளது. நீங்கள் பாக்டீரியா மற்றும் பூஞ்சை பிரச்சனைகளை எதிர்கொண்டால் அதை குணப்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும். இது உலர்ந்த மார்பக காம்புகளைத் தடுக்கவும், அவை குணமடைய அனுமதிக்கவும் உதவும் அதே வேளையில், தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும் உதவும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் கர்ப்ப காலத்தில் பல பாக்டீரியாக்களை செயலிழக்கச் செய்யும் மற்றும் பொதுவான பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளையும் தடுக்கும். உங்கள் மார்பக காம்புகளில் இதைப் பயன்படுத்தும்போது அதை மிதமாகப் பயன்படுத்துங்கள், நீங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தாலும் தேங்காய் எண்ணெய் பாதுகாப்பானதாக இருக்கும். இது, உங்கள் குழந்தை தேங்காய் எண்ணெயை உட்கொள்ள வேண்டும் என்று அர்த்தப்படுத்துவதில்லை.
மார்பக காம்புகளில் தேங்காய் எண்ணெய் தடவி இருந்தால், அது உங்கள் குழந்தைக்கு எந்தத் தீங்கும் செய்யப் போவதில்லை. உங்கள் பிள்ளைக்கு ஒவ்வாமை உணர்திறன் இருப்பதை நீங்கள் கவனித்தால், உடனடியாக அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். தேங்காய் எண்ணெய் இயற்கையான தயாரிப்பு என்றும் உங்களுக்கு ஒவ்வாமை இல்லாவிட்டால் 100 சதவீதம் பாதுகாப்பானது.
உலர்ந்த முலைக்காம்புகளுக்கான பிற எண்ணெய்கள்
தேங்காய் எண்ணெய் தவிர, ஆலிவ் எண்ணெய் மார்பகக்காம்பு பிளவுகள் அல்லது விரிசல் அல்லது வறட்சிக்கு பயன்படுத்தப்படலாம். மார்பக காம்பு வலியைத் தணிக்கவும், குணமடையவும், நீர்த்த புதினா, லானோலின் எண்ணெய் அல்லது மெந்தோல் எசென்ஸ் ஆகியவற்றை உங்கள் மார்பக காம்புகளில் தடவலாம். ஆண்டிசெப்டிக் கிரீம்கள் அல்லது லோஷன்களை பயன்படுத்தி இருந்தால், பால் கொடுப்பதற்கு முன்பு நீங்கள் நன்றாக துடைக்க வேண்டும் அல்லது மார்பக காம்புகளை நன்றாக கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications


