Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
கர்ப்பம் தரிக்க பெரியவர்கள் சொல்லும் இந்த கட்டுக்கதைகளை நம்பாதீங்க... சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் ஷாலினி...
நீங்களும், உங்கள் துணையும் குழந்தைக்காக முயற்சிக்கிறீர்களா? கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கவும் அல்லது நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தவும் அல்லது நீங்கள் இருவரும் கருத்தரிக்க தகுதியானவர்கள் என்பதை அறிந்து கொள்ளவும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பல முட்டாள்தனமான அறிவுரைகளை கூறி இருப்பார்கள்.
உங்களுக்கு சொல்லப்பட்ட விஷயங்களில் சில விஞ்ஞானரீதியாக உண்மையாக இருக்கலாம். ஆனால், அவற்றில் பல மூடநம்பிக்கையாகவும் மற்றும் கற்பனையாக உருவாக்கப்பட்டதாகவும் இருக்கலாம். பிரபல மகப்பேறு மருத்துவர் ஷாலினி கருத்தரித்தல் பற்றிய சில கட்டுக்கதைகளை நம்முடன் பகிர்ந்துள்ளார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கால்களை உயர்த்துவது
உடலுறவில் ஈடுபட்டு முடித்தவுடன் 20 - 30 நிமிடங்கள் கால்களை உயர்த்தி வைத்திருப்பது, கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்பது பலரின் கருத்து. ஈர்ப்பு விசையின் காரணமாக விந்து கருமுட்டையை சென்றடையும் என்பதே இதன் பின்னணியில் இருக்கும் காரணம். அறிவியல்பூர்வமாக, ஒவ்வொரு துளி விந்திலும், போதுமான அளவு உயிரணுக்கள் நிறைந்திருக்கின்றன. அவை கருமுட்டையை சென்றடைவது உயிரியல்ரீதியாக திட்டமிடப்பட்டிருப்பதால் அதன் இலக்கை அடைவதற்கு ஈர்ப்பு விசை தேவைப்படாது. இதனால், கால்களை உயர்த்துவது எந்த பலனையும் தராது.
தத்தெடுப்பது
ஒரு குழந்தையை தத்தெடுத்தால், கருத்தரிக்கலாம் என்பது பெரும்பாலான பெண்களின் கருத்தாக இருக்கிறது. இருப்பினும், பல பெண்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்த பிறகும் கருத்தரிக்க இயலாமல் இருக்கிறார்கள். ஒரு குழந்தையை தத்தெடுத்த பின் சில பெண்கள் கருத்தரிப்பது என்பது எதேர்ச்சையான ஒரு நிகழ்வு. கருத்தரிப்பிற்கும், தத்தெடுப்பிற்கும் எந்தவித அறிவியல்பூர்வமான தொடர்பும் இல்லை.
பெண்கள் மட்டுமே காரணம்
கருத்தரிக்காமல் இருப்பது பெண்களின் பிரச்சனையாக மட்டுமே நம்பப்படுகிறது. பெண்களின் உடலில் இருக்கும் பிரச்சனையின் காரணமாகவே, கருத்தரிக்க முடிவதில்லை என்னும் கருத்தும் பரவலாக காணப்படுகிறது. மலட்டு தன்மை என்பது ஆண்களிடமும் இருக்கலாம். ஆண்கள் உடலில் இருக்கும் பிரச்சனைகளும் கருத்தரிக்க இயலாமைக்கு காரணமாக இருக்கலாம். பெண்களை மட்டுமே குற்றம் சாட்டாமல் தம்பதிகள் இருவரும் முயற்சி செய்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே நல்ல பலனை தரும்.
அதிக உடலுறவு
தினமும் உடலுறவில் ஈடுபடுவது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்பது முற்றிலும் தவறான கருத்து. பெண்களின் மாதாவிடாய் முடிந்த பின்னான ஒரு சில நாட்களில் மட்டுமே, விந்தணு கருமுட்டையினுள் நுழைந்து கருத்தரிக்க இயலும். தினமும் உடலுறவில் ஈடுபடுவது கருத்தரிப்பதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது,
இருமல் மருந்து
இருமல் மருந்தில் இருக்கும் மூலப்பொருட்கள், விந்தணு கருமுட்டையை விரைவாக அடைய உதவி எளிதாக கருத்தரிக்க செய்வதாக நம்பப்படுகிறது. இருமல் மருந்தில் இருக்கும் மூலப்பொருட்கள் கருப்பை வாயை திறக்க செய்து, விந்தணு கருமுட்டையை எளிதாக அடைய உதவுதாக நம்பப்படுகிறது. இதற்கு அறிவியல்பூர்வமான சான்றுகள் எதுவுமில்லை.
இரண்டாவது கர்ப்பம் தரிப்பது எளிது
பொதுவாகவே முதல் முறை கருத்தரித்துவிட்டால், இரண்டாவது முறை கருத்தரிப்பது எளிதான ஒன்று என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல. பல இடங்களில் பெண்கள் இரண்டாவது முறை கருத்தரிப்பது சிரமமான ஒன்றாக இருக்கிறது. சில பெண்களால் மட்டுமே, இரண்டாவது முறை எளிதாக கருத்தரிக்க முடிகிறது.



Click it and Unblock the Notifications
