பெண்களுக்கு மகப்பேற்றுக்கு பிறகான மசாஜ் செய்வதினால் கிடைக்கும் நன்மைகள்...!

பிரசவத்திற்கு பிறகு மசாஜ் உடலுக்கு நிவாரணம் அளிக்கிறது. அதனால் நமது உடல் அதிக ஆற்றலையும் உற்சாகத்தையும் பெறுகிறது. மசாஜ் என்பது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைந்த உடலை புத்துணர்ச்சியூட்டும் ஒரு செயல்முறையாகும். தினசரி வேலை அழுத்தம் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் ஓய்வெடுக்க மசாஜ் சென்டர்களை நாடுகின்றனர்.

உடலின் தசைகளைத் தூண்டும் மசாஜ் எல்லா வயதினருக்கும் நல்லது. பல்வேறு வகையான மசாஜ்கள் உடலில் உள்ள பல்வேறு நோய்களை குணப்படுத்தும் என்றும் மருத்துவ மற்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்..

Benefits of Postpartum Massage for Women

பிரசவத்திற்குப் பிறகு, தாய் தனது உடல்நிலையை கவனித்துக் கொள்ள நேரமில்லை. இரவும் பகலும் குழந்தையிடம் மிகுந்த கவனத்துடன் இருக்கிறாள். அதே சமயம் தனக்கு உடல் வலி இருப்பதையும் வெளிப்படுத்துகிறாள். பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் கொஞ்சம் எடை கூடுகிறார்கள். அவர்களின் முந்தைய உடல் வடிவத்தை மீண்டும் பெறுவதே அவர்களின் குறிக்கோளாக இருக்கும்.. அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்? பிரசவத்திற்குப் பிறகு அவர்கள் மசாஜ் செய்ய வேண்டும்.. இது பிரசவத்திற்குப் பிந்தைய மசாஜ் என்று அழைக்கப்படுகிறது. அழகு மற்றும் உடல்வலி தவிர பிரசவத்திற்கு பிறகான மசாஜின் மற்ற நன்மைகளைப் பாருங்கள்...

1. பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். குழந்தைக்காக அதிக நேரம் ஒதுக்குவது ஒரு புதிய தாயை உடலளவிலும் மனதளவிலும் சோர்வடையச் செய்கிறது. எனவே, சோர்வுற்ற உடலுக்கு மசாஜ் தேவை.

2. பிரசவத்திற்குப் பிறகு கால்கள், தொடைகள், கைகள், கழுத்து, முதுகு வலிகள் இருகும்.. மசாஜ் செய்வதால் இவற்றில் இருந்து விடுபடலாம். இரவில் மசாஜ் செய்வது நல்லது. தூங்குவதற்கு முன் சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். அல்லது கணவரின் உதவியைப் பெற்று மசாஜ் செய்து கொள்ளுங்கள். வலியின்றி தூங்குங்கள்.

3. பிரசவத்திற்குப் பின் அடிவயிற்றில் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை மசாஜ் செய்வதன் மூலம் குறைக்கலாம். நல்ல எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்யவும். தோல் - மசாஜ் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்படும்.

4. பிரசவத்திற்கு முந்தைய உடல் வடிவம் பெற, தொப்பையை குறைக்க, உடல் கொழுப்பை குறைக்க மசாஜ் தவிர வேறு வழியில்லை. மசாஜ் செய்தால் பாலூட்டி சுரப்பிகள் அதிகமாக உற்பத்தி செய்ய உதவுகிறது. மார்பகங்களை மசாஜ் செய்வதன் மூலம், பால் அதிகரிப்பது மட்டுமல்லாமல், மார்பகங்கள் கீழே தொங்காமல் இருக்கும். தடுக்கப்பட்ட பாலூட்டி சுரப்பிகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து உற்பத்தி அதிகரிக்கிறது.

5. பிரசவத்தின்போது பெண்களின் தசைகள் தளர்ந்துவிடும். பிரசவத்திற்குப் பிந்தைய மசாஜ் தசைகள் மீண்டும் தங்கள் திறனைப் பெற உதவுகிறது.

6. மசாஜ் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. வலியை நீக்குவது மட்டுமல்லாமல், ஆக்ஸிஜன் மற்றும் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு மசாஜ் செய்வதன் நன்மைகள் இவை.

7. பிரசவத்திற்குப் பிறகு உடலுக்கு சிறிது ஓய்வு தேவை. அதற்கு இந்த மசாஜ் செய்தால் தாயின் உடல் நன்றாக புத்துணர்ச்சி பெறும்..

Story first published: Monday, September 16, 2024, 19:15 [IST]
Desktop Bottom Promotion