Just In
- 44 min ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 1 hr ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 1 hr ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 2 hrs ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
Don't Miss
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இரட்டைக் குழந்தைகள் பெத்துக்க ஆசைப்படுறீங்களா? இந்த விஷயங்களை முதலில் தெரிஞ்சிக்கோங்க...!
குழந்தை வளர்ப்பு என்பது நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு அங்கமாகும். குழந்தைகளை சரியாக வளர்ப்பது அனைத்து பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.
குழந்தை வளர்ப்பு என்பது நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு அங்கமாகும். குழந்தைகளை சரியாக வளர்ப்பது அனைத்து பெற்றோர்களின் தலையாய கடமையாகும். குழந்தைகளை வளர்ப்பது அற்புதமானதாகவும் அதேசமயம் பொறுப்புகளும் நிறைந்ததாகும். இது உங்களின் வாழ்க்கைக்கான அர்த்தத்தை தரும் அதேசமயம் உங்களின் நேரத்தை உங்களுக்காக செலவிடவும் விடாது.
நீங்கள் இரட்டை குழந்தைகளை வளர்க்கிறீர்கள் என்றால் மகிழ்ச்சி, பொறுப்பு, சுமை என அனைத்துமே இரண்டு மடங்காக இருக்கும். இரட்டை குழந்தைகளை வளர்க்க நீங்கள் அனைத்திலும் இருமடங்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இரட்டை குழந்தைகளை வளர்க்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பதிவில் பார்க்கலாம்.
இரட்டை மனஅழுத்தம்
ஒரு குழந்தை அல்லது இரட்டையர்களைப் பெற்றெடுப்பது உங்கள் கையில் இல்லை. இது ஒரு இயற்கையான நிகழ்வு மற்றும் அதிலிருந்து தப்பிக்க முடியாது. இரட்டை குழந்தைகளை வளர்ப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் - ஒரு குழந்தையை வளர்ப்பதில் நீங்கள் எதிர்பார்த்ததை விட இரு மடங்கு இருக்கும். இரட்டையர்கள் ஒரே வயதில் இருக்கும்போது, அவர்களுக்கு அவர்களின் சொந்த தேவைகளும் தனித்துவமான ஆளுமையும் உள்ளன. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக பராமரிப்பது ஒரு கட்டத்தில் சோர்வாக மாறும். இருப்பினும், இது சாத்தியமற்ற வேலை அல்ல. காலப்போக்கில், நீங்கள் அதைப் பழக்கப்படுத்திக்கொள்வீர்கள், மேலும் அதை என்ஜாய் பண்ணத் தொடங்கி விடுவீர்கள்.
அனைத்தையும் இரண்டாக வாங்க வேண்டும்
இரட்டையர்களால் செலவுகள் அதிகரிக்கும். ஒரு பொருளை வாங்குவதற்கு பதிலாக, எல்லாவற்றிலும் இரண்டை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். எனவே அதற்கேற்ப உங்கள் நிதிகளை நிர்வகிக்க உங்களை தயாராகிக் கொள்ளுங்கள். தேவையில்லாமல் செலவிட வேண்டாம், ஏனெனில் இது உங்கள் செலவினங்களை அதிகரிக்கும்.
ஒரே மாதிரியான இரட்டையர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்
உங்களுக்கு ஒரே மாதிரியான இரட்டையர்கள் இருப்பதால், முதல் சில வாரங்கள் அல்லது மாதங்கள் கூட கடினமாக இருக்கலாம், குறிப்பாக யார் யார் என்பதை அடையாளம் காண்பதில். இது குழப்பத்திற்கு வழிவகுக்கும். உதாரணமாக, நீங்கள் ஒரு குழந்தைக்கு இரண்டு முறை தாய்ப்பால் கொடுக்கலாம், அதேசமயம் மற்ற குழந்தையை அதிக நேரம் பசியோடு விடலாம். அதைத் தவிர்க்க, வெவ்வேறு வண்ணத் துணிகளைக் கொண்டு அவர்களை அடையாளம் காணுங்கள் அல்லது இயற்கை குறிப்பான்களைத் தேடுங்கள்.
இருவருக்கும் தனித்தனி நேரம் ஒதுக்க வேண்டும்
உங்கள் இரட்டையர்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் அவர்களின் ஆளுமைகளும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களுக்கென தனித்துவம் உள்ளது மற்றும் உணர்ச்சிகள் மற்றும் செயல்களுக்கான அவர்களின் பதில்கள் அதற்கேற்ப வேறுபடும். ஆகையால், அவர்கள் இருவருக்கும் நேரம் ஒதுக்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அவர்களின் தேவைகளை தனித்தனியாக கேட்டு அவர்களின் ஆளுமைக்கு ஏற்ப நடந்து கொள்ளுங்கள்.
ஒருவருக்கொருவர் சிறந்த நண்பராக இருப்பார்கள்
வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அவர்கள் எவ்வளவு சண்டையிட்டாலும் அல்லது ஒருவருக்கொருவர் எதிராக இருந்தாலும், அவர்கள் எப்போதும் சிறந்த நண்பர்களாகவே இருப்பார்கள். அவர்கள் கருத்து மற்றும் நம்பிக்கைகளில் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அவர்களின் பிணைப்பு நிரந்தரமாக இருக்கும்.
உதவியை நாடுங்கள்
நேரம் வேகமாக நகரும்போது, நீங்கள் சுய கவனிப்பில் ஈடுபடுவது முக்கியம். எந்த வடிவத்திலும் உதவி பெற தயங்க வேண்டாம். ஒரு ஆயாவை பணியமர்த்துவது அல்லது உங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்ள உங்கள் நெருங்கிய உறவினர்களைக் கேட்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் பங்குதாரர் அல்லது உங்கள் துணையுடன் உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.