Latest Updates
-
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
கர்ப்பிணிகளுக்கு மட்டுமே தெரிந்த விஷயங்கள், ஆனா ஆண்களும் தெரிஞ்சுக்கனும்!
கர்ப்பிணி பெண்களை கவலைப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். ஆம், உடலளவில் அவர்கள் ஏற்கனவே நிறைய கவலைகளை தாங்கிக் கொண்டு தான் இருப்பார்கள், அந்த பத்து மாதத்திலும். மேலும், கர்ப்பிணி பெண்கள் சந்தோசமாக இருந்தால் தான் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.
உடல் ரீதியாக, மன ரீதியாக கர்ப்பிணி பெண்களிடம், கர்ப்பக் காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இது அவர்களுக்கும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் தெரியும். ஆனால், ஆண்களுக்கு, கணவன்மார்களுக்கு?? ஆண்களும், கர்ப்பிணி பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

தகவல் # 1
கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி மூட் ஸ்விங் ஏற்படும். கர்ப்பக் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி பதட்டம், ஆச்சரியம் போன்ற உணர்வுகள் மாறி, மாறி வரும்.

தகவல் # 2
கர்ப்பிணி பெண்கள் காலை எழுந்ததும் மிகவும் சோர்வாகவும், உடல்நலம் குன்றியும் காணப்படுவார்கள். இது கர்ப்பக் காலத்தில் இயல்பு தான். சில சமயங்களில் இது பகல் நேரத்திலும் தொடரலாம்.

தகவல் # 3
கர்ப்பிணி பெண்களுக்கு செரிமானம் மற்றும் மலச்சிக்கல் ஏற்படுவது இயல்பு. கர்ப்பக் காலத்தில் அவர்களது குடல் இயக்கும் குறைவாக இருப்பதால் தான் இந்த தொல்லைகள் ஏற்படுகின்றன.

தகவல் # 4
மேலும், கர்ப்பம் காரணமாக, கருவறையில் சிசு வளர வளர, அதன் அழுத்தம் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். சில சமயங்களில் அவர்களுக்கு தெரியாமல் கூட இரவில் சிறுநீர் வெளிப்படலாம்.

தகவல் # 5
குழந்தை எட்டி உதைப்பது. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் அதிகமாக ஆச்சரியப்படும், வியக்கும் விஷயம் குழந்தை எட்டி உதைப்பது. இதை விட பெரிய மகிழ்ச்சி ஓர் பெண்ணின் வாழ்க்கையில் வேறு ஏதும் இருக்க முடியாது.

தகவல் # 6
சந்தோசங்கள் ஒரு பக்கம் இருப்பினும், அதே போல, அவர்களுக்கு பயமும் இருக்கும். முக்கியமாக பிரசவ வலி. குழந்தை பிறக்கும் போது ஏற்படும் வலி பற்றிய பயம் அவர்களுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

தகவல் # 7
புதிய உடைகள்! பொதுவாகவே பெண்களுக்கு புதிய உடைகள் பிடிக்கும். கர்ப்ப காலத்தில், மற்றும் அதற்கு பிறகு இது இன்னும் அதிகரிக்கும். ஒவ்வொரு மாதம் கடக்கும் போதும் உடைகள் புதியதாக வாங்க வேண்டி இருக்கும். மற்றும் பிரசவத்திற்கு பிறகு அவர்களுக்கான பிரத்தியோக உடைகளும் வாங்கி தர வேண்டும்.



Click it and Unblock the Notifications