Latest Updates
-
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை
கருக்கலைப்பு பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்!
சில சமயம் குழந்தை வேண்டாம் என கருத்தடுப்பு பாதுகாப்பு மேற்கொண்டும் கருத்தரித்துவிட்டால் தம்பதிகள் கருக்கலைப்பு செய்வதுண்டு.
ஆனால், சிலர் பாலினம் கருதி, ஆண், பெண் வேறுபாடு கருதி கருக்கலைப்பு செய்வது, திருமணத்திற்கு முன்னர், அல்லது தகாத உறவு வைத்து கருக்கலைப்பு செய்வதும் தான் உலகம் முழுவதும் நடக்கும் பெரும்பாலான கருக்கலைப்பிற்கு காரணமாக இருக்கிறது.
கருக்கலைப்பு என்பது ஓர் செயலாக அன்றி, மனிதம் சார்ந்த பார்க்கையில் அது ஓர் சிசுவின் எதிர்காலம், விலைமதிப்பற்ற உயிர் என்பதை நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக பெண் சிசு என்பதால் கருக்கலைப்பு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது கூட சரியானது தான்.
இனி, கருக்கலைப்பு சார்ந்த சில உண்மைகள் குறித்து பார்க்கலாம்...

உண்மை #1
ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் 1.2 மில்லியன் பெண்கள் கருக்கலைப்பு செய்துக் கொள்கின்றனர்.

உண்மை #2
கருக்கலைப்பு செய்து நலமுடன் இருபவர்களில் 51% பேர், கருக்கலைப்பை அதிகாரப்பூர்வமாக சட்டம் கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உண்மை #3
நியூயார்க் நகரின் கருத்தரிக்கும் பெண்களில் 37% பேர் கருக்கலைப்பு செய்துக் கொள்கின்றனர்.

உண்மை #4
ஒவ்வொரு வருடமும் பெண் குழந்தை என தெரிந்த பிறகு ஒரு மில்லியன் சிசுக்கள் கருக்கலைப்பு செய்யப்படுகின்றன.

உண்மை #5
சீனாவில் பத்தாயிரத்திற்கும் மேலான பெண் குழந்தைகள் பிறந்த பிறகு அனாதையாக தவிக்கவிடப்படுகின்றனர். இதற்கு காரணம் சீன அரசின் ஒரு குழந்தை திட்டம் என கூறப்படுகிறது.

உண்மை #6
இந்தியாவில் ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை பெண் குழந்தை என அறிந்த பிறகு கருக்கலைப்பு செய்யப்படுகிறது. பாலினம் அறிந்து கருக்கலைப்பு செய்வது ஸ்வீடனில் பெரும் குற்றமாகும்.

உண்மை #7
பதின் வயது பெண்களைவிட இருபது வயதை கடந்த பெண்கள் தான் அதிகம் கருக்கலைப்பு செய்கிறன்றனர். மேலும், கருக்கலைப்பு செய்யும் பத்தில் ஆறு பேர் ஏற்கனவே குழந்தை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை #8
கருக்கலைப்பு செய்யும் பதின் வயது பெண்களில் 40% பேர் கருக்கலைப்பு செய்துள்ளனர் என்பது அவர்களது பெற்றோர்களுக்கே தெரியாது.

உண்மை #9
ஒவ்வொரு வருடமும் கருக்கலைப்பு செய்ததால் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை மட்டும் 70,000.

உண்மை #10
உலகில் நான்கில் ஒரு கருத்தரிப்பு நிகழ்வு கருக்கலைப்பில் தான் முடிகிறது. இவற்றில் பாதியளவு சட்டவிரோதமாக செய்யப்படுகிறது.



Click it and Unblock the Notifications