Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
இறுதி மாதவிடாய் வரப்போவதற்கான அறிகுறிகள்!!!
பெண்களுக்கு இறுதி மாதவிடாய் மிகவும் முக்கியமான மற்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ஏனெனில், அந்த அளவு இறுதி மாதவிடாயின் போது, பெண்கள் நிறைய அவஸ்தைகளை எதிர்கொள்வார்கள். பொதுவாக இறுத மாதவிடாயானது 45-50 வயது காலங்களில் நிகழும். இந்த நிகழ்வு ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் நிலை, இனிமேல் இல்லை என்பதை உணர்த்துவதற்கான ஒரு அடையாளமாகும்.
மேலும் இறுதி மாதவிடாய், பெண்களின் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஸ்ட்ரோஜென்னின் அளவானது குறைவதோடு, முட்டை உற்பத்தியானது நிறுத்தப்பட்டுவிட்டது என்பதையும் வெளிப்படுத்துகிறது. இத்தகைய அடையாளங்களை வெளிப்படுத்தும் இறுதி மாதவிடாய் சாதாரணமானது அல்லது. இது வரப்போகிறது என்றால், உடலில் சில மாற்றங்கள் தெரியும். ஒருசிலருக்கும் இறுதி மாதவிடாயானது சீக்கிரம் வந்துவிடும். அவ்வாறு விரைவில் வந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது அந்த மாற்றங்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் நடந்துகொள்ளுங்கள்.

* இறுதி மாதவிடாய் காலமாக இருந்தால், உடலானது அனலாக இருக்கும். சொல்லப்போனால் வெப்பத்தின் நடுவே அமர்ந்திருப்பது போன்று இருக்கும். ஒரு நிமிடம் கூட உட்கார முடியாது. மேலும் என்னதான் ஜன்னலை திறந்து வைத்தோ அல்லது ஃபேன் போட்டு உட்கார்ந்தாலோ, அது தணியாமல் இருக்கும். இது ஒரு நாளைக்கு குறைந்தது, 3-4 முறை ஏற்படும்.
* இரவில் படுக்கும் போது அதிகப்படியான வியர்வை வெளியேறும். மேலும் படுக்கும் இடமே ஈரமாகிவிடும். பின் நிம்மதியாக தூங்கவே முடியாது.
* இறுதி மாதவிடாய் சுழற்சி வருவதற்கு முந்தைய மாதத்தில் ஏற்படும் சுழற்சியில், அதிகப்படியான இரத்தப்போக்கோ அல்லது லேசான இரத்தப்போக்கோ இருக்கும். இவ்வாறு முறையற்று இருந்தாலும், இறுதி மாதவிடாய் வரப்போகிறது என்பதற்கு அறிகுறியாகும்.
* வயதாகிவிட்டால் சருமத்தில் அதிகப்படியான வறட்சி இருக்கும். ஏனெனில் ஈஸ்ட்ரோஜெனின் அளவானது குறைவதால், சருமத்தினால் சரியான ஈரப்பதத்தை தக்க வைக்க முடியாது என்பதாலேயே தான்.
* ஈஸ்ட்ரோஜெனின் அளவு குறைவதால், மூட்டு வலி, இடுப்பு வலி, தலை வலி, தசை வலி போன்ற வலிகள் கடுமையாக அடிக்கடி ஏற்படும்.
* தூக்கமின்மை ஏற்படுவதற்கு ஈஸ்ட்ரோஜெனின் அளவு குறைவாக இருப்பதே ஆகும். இவ்வாறு சரியான தூக்கம் இல்லாததால், ஒருவித டென்சன், மன இறுக்கம் போன்றவை ஏற்படும்.
* போதிய தூக்கம் இல்லாத காரணத்தினால், எந்நேரமும் உடலானது சோர்வுடன் இருக்கும். குறிப்பாக எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாது.



Click it and Unblock the Notifications











