Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
உங்க குழந்தை பிறந்த அப்போ என்ன கலர்ல இருந்தாங்க? அதுக்கு என்ன அர்த்தம்.
குழந்தைகள் பிறந்த சில நேரத்திலேயே அவர்களின் சருமம் மஞ்சள்நிறத்தில் மாறக்கூடும். அவ்வாறு மாறும்போது மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. இது மஞ்சள் காமாலைக்கான அறிகுறியாகும், இவை புதிதாகப் பி
பெற்றோர்கள் முதலில் பிறந்த குழந்தைகளின் உடல், சருமம், முடி போன்றவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகள் பிறந்து ஒரு வாரக் காலத்திற்குள் அவர்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் ஒரு தாயின் புதிய உருவமாகும்.


மஞ்சள் காமாலை
குழந்தைகள் பிறந்த சில நேரத்திலேயே அவர்களின் சருமம் மஞ்சள் நிறத்தில் மாறக்கூடும். அவ்வாறு மாறும்போது மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. இது மஞ்சள் காமாலைக்கான அறிகுறியாகும். இவை புதிதாகப் பிறந்த குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் ஒன்றாகும். இந்த மஞ்சள் காமாலை சிவப்பு நிற அணுக்கள் உடைவதன் காரணமாக உருவாகும் கழிவுப் பொருளான பிலிரூபின் என்னும் நிறமியால் ஏற்படுகிறது. குழந்தையின் கல்லீரல் வழியாக இந்த பிலிரூபின் வெளியேறிய பின்பு இது தானாகவே சரி ஆகிவிடும். புதிதாகப் பிறந்த குழந்தைகளின் கல்லீரல் முதிர்ச்சியடையாததால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. கல்லீரல் முதிர்ச்சியடைந்த பின்பு பிலிரூபின் வெளியேற்றப்பட்டவுடன் தானாகவே சரியாகி விடும்.
வழக்கமாக இரண்டு வாரங்களுக்குள் குழந்தைகளுக்கு ஏற்பட்ட இந்த மஞ்சள் நிறம் அகன்று விடும். இந்த மஞ்சள் நிறம் இழப்பதற்கு மருத்துவர் எவ்வாறு குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று ஒரு அறிவுரை கூறுவார். அதன்படி நீங்கள் கடைப்பிடிக்கலாம். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு பிறகும் குழந்தைகள் மஞ்சள் நிறமாக இருந்தால், ஒளிக்கதிர் சிகிச்சையை மேற்கொள்ளலாம். மேலும், மஞ்சள் காமாலை சில வாரங்களுக்குப் பிறகு மறுபடியும் ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியம். ஏனெனில் இது கல்லீரல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

மார்பகம்
பிறந்த குழந்தைகளின் மார்பகங்கள் வளர்வது போன்று தோன்றினால் கவலைப்படத் தேவையில்லை. இது கர்ப்ப காலத்தில் குழந்தைகள் உங்களிடம் இருந்து பெற்ற ஹார்மோன்களின் தன்மையால் தான் ஏற்படுகிறது. இந்த ஹார்மோன்களின் மாற்றத்தால் வீங்கிய பிறப்புறுப்புகள் அல்லது முலைக்காம்புகளிலிருந்து நீர் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதாவது உங்களுக்கும் குழந்தைக்குமான தொப்புள் கொடியை வெட்டப்பட்டவுடன் தாய்வழி ஹார்மோன்கள் சிதறிவிடும். குழந்தையின் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றமே இதற்குக் காரணமாக அமைகிறது. மேலும் குழந்தையின் முதல் மாதத்திற்குள் இந்த வீக்கம் மற்றும் நீர் வெளியேற்றங்கள் மறைந்துவிடும். அவ்வாறு மறையாமல் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருந்தால் குழந்தை மருத்துவரிடம் செல்லுங்கள்.

முகப்பரு
குழந்தைகளுக்கு முகப்பரு ஏற்பட இரண்டு காரணங்கள் உள்ளன. கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு உங்களால் அனுப்பப்பட்ட ஆண்ட்ரோஜன்கள் மற்றும் முதிர்ச்சியடையாத எண்ணெய் சுரப்பிகள் இவை இரண்டும் குழந்தைகளுக்குப் பருக்கள் ஏற்படக் காரணமாக உள்ளது. குழந்தைகள் பிறந்து சில வாரங்களில், குழந்தையின் ஹார்மோன் அளவுகள் குறைந்த உடன் எண்ணெய் சுரப்பிகள் முதிர்ச்சி அடைந்து குழந்தைகளின் சருமத்தைச் சரி செய்யும். சில வாரங்களுக்குள் இவை சரியாகவில்லையெனில் மருத்துவரை அணுகலாம்.

தலை
புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தலையில் உள்ள எலும்புகள் தனித்தனி எலும்புகளாக இருக்கும். இணைப்புகளாக இருப்பதில்லை. இந்த எலும்புகள் குழந்தைகள் பிறக்கும்போதே முழுமையாக இணைக்கப்படாது. இந்த ஒழுங்கற்ற மண்டை வடிவம் தாயின் பிறப்புறுப்பு வழியாக வெளிவரும் போதும் ஏற்படலாம். ஆனால் காலப்போக்கில் நாட்கள் செல்ல செல்ல அவர்களின் தலை வட்ட வடிவமாக மாறக்கூடும். மேலும் குழந்தைகள் பிறந்து சில மாதத்திற்குள் மண்டை ஓட்டின் எலும்புகள் வளரத் தொடங்கியவுடன் தலையின் வடிவம் மாறிவிடும்.

முடிகள்
பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் முகம், சருமம் மற்றும் முதுகு போன்ற இடங்களில் முழுவதும் முடிகள் இருக்கும். இதனை லானுகோ என்று கூறுவார்கள். இது கருப்பையில் இருக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படக்கூடியதாகும். குழந்தைகள் பிறந்து 4 மாதத்திற்குள் முடி தானாகவே விழுந்து விடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதற்கு மேலும் முடிகள் விழாமல் நீடிக்கும் போது குழந்தை மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள். மேலும், குழந்தைகளுக்கு முதுகெலும்பின் மேல் முடிகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். இது நரம்பியல் பிரச்சினையின் ஒரு அறிகுறியாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.



Click it and Unblock the Notifications