Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
உங்க குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருக்கிறார்களா? இத பாலோவ் பண்ணுங்க.
குழந்தைகள் எப்போதும் அழுது கொண்டே இருந்தால் எரிச்சல் தான் ஏற்படும். அவர்களின் அழுகைக்கு பின்னால் நிறையக் காரணங்கள் இருக்கும் குழந்தை எதற்காக அழுகிறார்கள் என்பதைத் தாய் உணர முடியும். இருந்தும் உங்கள்
குழந்தைகள் எப்போதும் அழுது கொண்டே இருந்தால் எரிச்சல் தான் ஏற்படும். அவர்களின் அழுகைக்கு பின்னால் நிறையக் காரணங்கள் இருக்கும். குழந்தை எதற்காக அழுகிறார்கள் என்பதைத் தாய் உணர முடியும். இருந்தும் உங்கள் குழந்தைகள் எப்போதும் அழாமல் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள சில வழிகள் உள்ளன.

பிறந்த குழந்தைகளின் தேவைகள் முதல் ஆறு மாதங்களில் சரியான நேரத்தில் பூர்த்தி செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தைகள் எதற்காக அழுகிறார்கள் என்பதை அறிந்து தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட்டாலே அவர்களின் அழுகை பாதி நின்றுவிடும். மேலும் குழந்தையை மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொள்ளுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

தொடுதல்
குழந்தைகள் பிறந்து 6 மாத காலங்களுக்குத் தாயின் தொடுதல் மிகவும் அவசியம். அவர்கள் அம்மாவிடம் இருக்கும்போது மிகவும் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உணருவார்கள். நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தையின் உடல் உங்களின் வயிற்றில் படும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் குழந்தைகளைக் குளிக்க வைக்கும் போது அவர்களின் கை, கால் மற்றும் உடலினை நன்றாக மசாஜ் செய்து குளிக்க வையுங்கள். இது குழந்தைகளுக்கு நிம்மதியான நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் நீங்கள் கொடுக்கும் இனிமையான முத்தம் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

தூங்குதல்
குழந்தைகள் சரியாகத் தூக்கம் இல்லாத காரணத்தினாலும் அழுவார்கள். எனவே குழந்தைகள் நிம்மதியாக மற்றும் வசதியாகத் தூங்குவதற்கு ஏற்றவாறு அவர்களைப் படுக்க வையுங்கள். மென்மையான துணியை மேலே போட்டு, போர்த்தியபடி படுக்க வைத்தால், கருப்பையில் இருக்கும் உணர்வை அடைவார்கள். எனவே குழந்தைகள் உறங்கும் போது ஒரு நல்ல மெத்தை போன்ற துணிகளில் சுற்றி அவர்களை உறங்க வையுங்கள். குழந்தைகள் பிறந்து 4 மாதங்கள் வரை இந்த முறையைப் பின்பற்றலாம். மேலும் குழந்தைகள் எந்த முறையில் நிம்மதியாக உறங்குகிறார்கள் என்று கவனித்து அதனை பின்பற்றுங்கள்.

கட்டை விரல்
குழந்தைகள் எதற்காக அழுகிறார்கள் என்று கண்டுபிடித்தது சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆனால் உண்மை என்னவென்றால் சில குழந்தைகள் தங்களின் கட்டை விரலைச் சப்பும்போது அழுகையை நிறுத்தி விடுகிறார்களாம். எனவே குழந்தைகள் விரல்களைச் சப்பும்போது அது அவர்களுக்கு நிம்மதியைத் தருகிறதாம் எனவே அவற்றை வாயிலிருந்து எடுக்க வேண்டாம். பின்னர் அந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வெளி இடங்கள்
குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே இருப்பதினாலும் எரிச்சல் அடைவார்கள். எனவே அவர்களைச் சற்று வெளியே தூக்கிச் சென்று இயற்கையை ரசிக்க வையுங்கள். பூங்கா போன்ற இடங்களுக்குத் தூக்கிச் செல்லுங்கள் அல்லது 6 மாத குழந்தையாக இருந்தால் அவர்களுக்குச் சூரியன், மரம், செடி, கொடிகள் போன்றவற்றைக் காட்டுங்கள். 6 மாதங்களுக்கு மேல் இருக்கும் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் விளையாட வையுங்கள்.

பேசுதல்
குழந்தைகளிடம் பேசுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. குழந்தைகள் வயிற்றில் இருக்கும் ஐந்தாவது மாதத்திலேயே நாம் என்ன பேசுகிறோம் என்ற புரிதலை உணர ஆரம்பித்து விடுவார்களாம். எனவே குழந்தைகளிடம் நீங்கள் பேசுவது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குழந்தைகளிடம் பேசுவதில் மிக முக்கியம் அமைதியாக மற்றும் உணர்ச்சியுடன் பேச வேண்டும். நீங்கள் குழந்தைகளிடம் பேசும்போது அவர்களின் கண்களை பார்த்து பேசுங்கள் குழந்தைகளை சிரிக்க வையுங்கள் அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது பாடுங்கள். இவற்றை எல்லாம் பின்பற்றி குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியாக உணர வையுங்கள்.



Click it and Unblock the Notifications











