Just In
- 41 min ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 1 hr ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 10 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Don't Miss
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தாய்ப்பாலூட்டும் போது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா? குறையுமா? குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா?
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, தாய்ப்பால் கொடுப்பது குழந்தை பருவத்தில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதிகப்படியான ஊட்டச்சத்து ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. இது பிற்கால வாழ்க்கையில் உடல் பருமன், உயர் இரத்த அழ
கர்ப்பகால நீரிழிவு எனப்படுவது கர்ப்ப காலத்தில் 9 சதவீத பெண்களுக்கு இன்சுலின் எதிர்ப்பை உருவாக்குகிறது. 40 லட்சம் இந்தியப் பெண்கள், கடந்த காலங்களில் சர்க்கரை நோயின் வரலாறு இல்லாமல் கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வாழ்க்கையில் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது. ஆனால் இந்த ஆபத்தை குறைக்கக்கூடிய ஒன்று உள்ளது என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். அது தாய்ப்பால்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஏனெனில் தாய்ப்பால் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவும். தாய்ப்பால் இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு மேம்படுத்தும் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
பெண்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
குழந்தையைப் பராமரிப்பதற்கும் தாய்-சேய் பிணைப்பை உருவாக்குவதற்கும் தாய்ப்பால் சிறந்த வழியாகும். ஆஸ்டியோபோரோசிஸ், முடக்கு வாதம், இதய நோய், வகை 2 நீரிழிவு நோய், கர்ப்பத்திற்குப் பிந்தைய எடை இழப்பு, மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு சுகாதார நிலைமைகள் பெண்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் வாய்ப்புகள் குறைக்கிறது.
மனச்சோர்வை குறைக்கிறது
உடல் நன்மைகளுக்கு மட்டுமல்ல, பிரசவத்திற்குப் பிந்தைய கவலையை நிர்வகிப்பதில் தாய்ப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்ப்பால் கொடுப்பது ஆக்ஸிடாஸின் எனப்படும் மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடுகிறது, இது தாயின் மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் புதிதாகப் பிறந்த தாய்மார்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு மனச்சோர்வு அபாயத்தைக் குறைக்கிறது.
தாய்ப்பால் நீரிழிவு மேலாண்மை மற்றும் இரத்த சர்க்கரையை எவ்வாறு பாதிக்கிறது?
புதிய தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது ஒரு உண்மையான பயிற்சி. இது மாதவிடாய் சரியாக வர உதவுகிறது. மன அழுத்தத்தை குறைத்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், பிரசவத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் முடியும். குழந்தைக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கும் போது, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சில பெண்களுக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படலாம். எனவே, குழந்தைக்கு பாலூட்டும் போது குளுக்கோஸை அருகில் வைத்திருப்பது நல்லது.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோயுடன் தாய்ப்பால் கொடுப்பது சவாலானது. ஏனெனில் பெண்களுக்கு மார்பகங்களில் வீக்கம் ஏற்படலாம், இந்த நிலை முலையழற்சி என்று அழைக்கப்படுகிறது. மார்பகங்களில் வீக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு இரு மார்பகங்களிலிருந்தும் உணவளிப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த பெண்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவையும் சரிபார்க்க வேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பு பால் தரத்தை பாதிக்கும். பால் உற்பத்தி செய்யும் திறனையும் இது பாதிக்கலாம்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, தாய்ப்பால் கொடுப்பது குழந்தை பருவத்தில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதிகப்படியான ஊட்டச்சத்து ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. இது பிற்கால வாழ்க்கையில் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இருதய நோய் அபாயத்தையும் குறைக்கும்.
தாய்ப்பால் இரத்த குளுக்கோஸ் அளவை எவ்வாறு குறைக்கலாம்?
தாய்ப்பாலை உற்பத்தி செய்ய இரத்தத்தில் உள்ள குளுக்கோஸைப் பயன்படுத்தி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க தாய்ப்பால் உதவுகிறது. இது கூடுதல் கலோரிகளை எரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது, இது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தாய் பாலூட்டும் பெண்கள்
- தாய்ப்பால் கொடுக்கும் முன் அல்லது போது சிற்றுண்டி சாப்பிடுங்கள்
- ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கவும்
- குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் போது அருகில் பிஸ்கட் அல்லது பழம் போன்ற சிற்றுண்டியை வைத்திருங்கள்
- மன அழுத்தத்தை தவிர்க்கவும் மற்றும் மார்பகத்தில் உள்ள அழற்சியை சரிபார்க்கவும்
- நீரேற்றமாக இருங்கள்