Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
9 நிமிஷத்துல 6 குழந்தையை பெற்றெடுத்த அபூர்வ பெண்... என்ன நடந்ததுனு நீங்களே பாருங்க
வெறும் ஒன்பது நிமிடத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த அபூாவ பெண் பற்றி தான் இந்த பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய தொகுப்பு தான் இது.
பிரசவம் என்பது எளிதான காரியம் அல்ல. அதுவும் ஒரு குழந்தைக்கு மேல் பிரசவிக்கும்போது, பிரசவ செயல்பாடுகளில் சிக்கல் உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம். 4.7 மில்லியன் வழக்குகளில் ஒரு அரிய வழக்காக உங்கள் பிரசவம் அமைந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு பிரசவம் பற்றி தான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம். ஆம், ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பிரசவித்திருக்கிறார், அதுவும் 9 நிமிடங்களில் ! ஆச்சர்யமாக இருக்கிறதா?

வாருங்கள் இந்த அரிய பிரசவம் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்..

வலிமையான பெண்
இந்த பெண் உண்மையிலேயே வலிமையானவர். அந்தத் தாயின் பெயர் தெல்மா சியாகா. தற்போது 6 குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும் இவர், பிரசவத்திற்கு பின்னான ஓய்வில் இருந்து வருகிறார். வெறும் 9 நிமிடங்களில் 6 குழந்தைகளை இவர் பிரசவித்திருக்கிறார்.

குழந்தைகள் பற்றி
தெல்மா, இரண்டு ஜோடி ஆண் இரட்டையர்களையும், ஒரு ஜோடி பெண் இரட்டையரையும் பெற்றெடுத்திருக்கிறார். இந்த பிரசவம் அதிகாலை 4.50-4.59 க்குள் நிகழ்ந்திருக்கிறது.

ஆரோக்கியமான குழந்தைகள்
எல்லாக் குழந்தைகளும் 1 பவுண்ட் 12 அவுன்ஸ் முதல் 2 பவுண்ட் 14 அவுன்ஸ் க்குள் இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த 6 குழந்தைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், ஆரம்ப கால மருத்துவ கண்காணிப்பு அவசியம் என்பதால் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களை கண்காணித்து வருவதாகவும், அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது ஒரு அரிய பிரசவம்
தெல்மாவின் பிரசவம் அரியதாக இருந்தாலும், ஒரே நேரத்தில் பல குழந்தைகளை பிரசவித்தவர் என்ற சாதனை இவருக்கு சொந்தமாகவில்லை. ஏனெனில் , 2009ம் ஆண்டு, நாதியா சுலைமான் என்பவர் ஒரு நேரத்தில் 8 குழந்தைகளைப் பிரசவித்து இந்த சாதனையை தன் வசம் வைத்திருக்கிறார். அவர் தனது 33ம் வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.



Click it and Unblock the Notifications











