Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
9 நிமிஷத்துல 6 குழந்தையை பெற்றெடுத்த அபூர்வ பெண்... என்ன நடந்ததுனு நீங்களே பாருங்க
வெறும் ஒன்பது நிமிடத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த அபூாவ பெண் பற்றி தான் இந்த பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய தொகுப்பு தான் இது.
பிரசவம் என்பது எளிதான காரியம் அல்ல. அதுவும் ஒரு குழந்தைக்கு மேல் பிரசவிக்கும்போது, பிரசவ செயல்பாடுகளில் சிக்கல் உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம். 4.7 மில்லியன் வழக்குகளில் ஒரு அரிய வழக்காக உங்கள் பிரசவம் அமைந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு பிரசவம் பற்றி தான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம். ஆம், ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பிரசவித்திருக்கிறார், அதுவும் 9 நிமிடங்களில் ! ஆச்சர்யமாக இருக்கிறதா?

வாருங்கள் இந்த அரிய பிரசவம் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்..

வலிமையான பெண்
இந்த பெண் உண்மையிலேயே வலிமையானவர். அந்தத் தாயின் பெயர் தெல்மா சியாகா. தற்போது 6 குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும் இவர், பிரசவத்திற்கு பின்னான ஓய்வில் இருந்து வருகிறார். வெறும் 9 நிமிடங்களில் 6 குழந்தைகளை இவர் பிரசவித்திருக்கிறார்.

குழந்தைகள் பற்றி
தெல்மா, இரண்டு ஜோடி ஆண் இரட்டையர்களையும், ஒரு ஜோடி பெண் இரட்டையரையும் பெற்றெடுத்திருக்கிறார். இந்த பிரசவம் அதிகாலை 4.50-4.59 க்குள் நிகழ்ந்திருக்கிறது.

ஆரோக்கியமான குழந்தைகள்
எல்லாக் குழந்தைகளும் 1 பவுண்ட் 12 அவுன்ஸ் முதல் 2 பவுண்ட் 14 அவுன்ஸ் க்குள் இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த 6 குழந்தைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், ஆரம்ப கால மருத்துவ கண்காணிப்பு அவசியம் என்பதால் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களை கண்காணித்து வருவதாகவும், அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது ஒரு அரிய பிரசவம்
தெல்மாவின் பிரசவம் அரியதாக இருந்தாலும், ஒரே நேரத்தில் பல குழந்தைகளை பிரசவித்தவர் என்ற சாதனை இவருக்கு சொந்தமாகவில்லை. ஏனெனில் , 2009ம் ஆண்டு, நாதியா சுலைமான் என்பவர் ஒரு நேரத்தில் 8 குழந்தைகளைப் பிரசவித்து இந்த சாதனையை தன் வசம் வைத்திருக்கிறார். அவர் தனது 33ம் வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.



Click it and Unblock the Notifications