Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
9 நிமிஷத்துல 6 குழந்தையை பெற்றெடுத்த அபூர்வ பெண்... என்ன நடந்ததுனு நீங்களே பாருங்க
வெறும் ஒன்பது நிமிடத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த அபூாவ பெண் பற்றி தான் இந்த பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய தொகுப்பு தான் இது.
பிரசவம் என்பது எளிதான காரியம் அல்ல. அதுவும் ஒரு குழந்தைக்கு மேல் பிரசவிக்கும்போது, பிரசவ செயல்பாடுகளில் சிக்கல் உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம். 4.7 மில்லியன் வழக்குகளில் ஒரு அரிய வழக்காக உங்கள் பிரசவம் அமைந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு பிரசவம் பற்றி தான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம். ஆம், ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பிரசவித்திருக்கிறார், அதுவும் 9 நிமிடங்களில் ! ஆச்சர்யமாக இருக்கிறதா?

வாருங்கள் இந்த அரிய பிரசவம் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்..

வலிமையான பெண்
இந்த பெண் உண்மையிலேயே வலிமையானவர். அந்தத் தாயின் பெயர் தெல்மா சியாகா. தற்போது 6 குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும் இவர், பிரசவத்திற்கு பின்னான ஓய்வில் இருந்து வருகிறார். வெறும் 9 நிமிடங்களில் 6 குழந்தைகளை இவர் பிரசவித்திருக்கிறார்.

குழந்தைகள் பற்றி
தெல்மா, இரண்டு ஜோடி ஆண் இரட்டையர்களையும், ஒரு ஜோடி பெண் இரட்டையரையும் பெற்றெடுத்திருக்கிறார். இந்த பிரசவம் அதிகாலை 4.50-4.59 க்குள் நிகழ்ந்திருக்கிறது.

ஆரோக்கியமான குழந்தைகள்
எல்லாக் குழந்தைகளும் 1 பவுண்ட் 12 அவுன்ஸ் முதல் 2 பவுண்ட் 14 அவுன்ஸ் க்குள் இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த 6 குழந்தைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், ஆரம்ப கால மருத்துவ கண்காணிப்பு அவசியம் என்பதால் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களை கண்காணித்து வருவதாகவும், அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது ஒரு அரிய பிரசவம்
தெல்மாவின் பிரசவம் அரியதாக இருந்தாலும், ஒரே நேரத்தில் பல குழந்தைகளை பிரசவித்தவர் என்ற சாதனை இவருக்கு சொந்தமாகவில்லை. ஏனெனில் , 2009ம் ஆண்டு, நாதியா சுலைமான் என்பவர் ஒரு நேரத்தில் 8 குழந்தைகளைப் பிரசவித்து இந்த சாதனையை தன் வசம் வைத்திருக்கிறார். அவர் தனது 33ம் வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.



Click it and Unblock the Notifications











