Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடிப்பது குழந்தைகளின் மீது பாதிப்பை ஏற்படுத்துமா?
அம்மாக்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளுமே பாலூட்டுவதால் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும்.
பெண்கள் வாழ்க்கையில் முக்கியமான தருணம் என்பது தாய்மையடையும் தருணம் ஆகும். அனைத்து பெண்களின் வாழ்க்கையுமே தாய்மை அடைந்ததற்கு பிறகு முற்றிலுமாக மாறிவிடும். குழந்தை பிறந்து அவர்களுக்கு பாலூட்டும் காலம் முடியும்வரை அம்மாக்கள் அவர்களின் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

ஏனெனில் அம்மாக்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளுமே பாலூட்டுவதால் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் காபி அதிகமாக குடிப்பது பொதுவாக ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்று கூறுவார்கள். இந்த சூழ்நிலையில் தாய்ப்பால் கொடுக்கும்போது காபி குடிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த பதிவில் பாலூட்டும் காலத்தில் எவ்வளவு காபி குடிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

கர்ப்பகாலத்தில் காபி
கர்ப்ப காலத்தில் காபி குடிப்பதை குறைக்கவோ அல்லது முற்றிலுமாக நிறுத்தி விடவோ பெண்கள் அறிவுறுத்தப்படுவார்கள். ஏனெனில் காபியில் இருக்கும் காஃபைன் தொப்புள்கொடியை கடந்து கருவில் இருக்கும் குழந்தை மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான். அதனால் பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் காபி பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது.

பாலூட்டும் காலம்
கர்ப்பகாலம் முடிந்து குழந்தை பெற்றவுடன் பெண்கள் மீண்டும் காபி குடிக்க தொடங்கி விடுவார்கள். அதற்கு காரணம் அவர்கள் இந்த காலகட்டத்தில் அடிக்கடி அதிக சோர்வுக்கு உள்ளாவதுதான்.

காஃபைன்
காஃபைன் என்பது காபி, டீ மற்றும் அனைத்து கோகோ தாவரங்களிலும் காணப்படும் ஒரு பொருளாகும். இது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை தூண்டுவதன் மூலம் உங்களை சுறுசுறுப்பாகவும், அதிக ஆற்றலுடனும் இருக்கும்படி செய்கிறது. இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது ஆனால் அதிகளவு காஃபைன் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

பாலூட்டும்போது காபி குடிக்கலாமா?
காஃபினுடைய பக்கவிளைவுகளால் பாலூட்டும் போது காபி குடிக்கலாமா? வேண்டாமா? என்று பெண்கள் பயப்பட தேவையில்லை. ஏனெனில் பாலூட்டும் காலத்தில் காபி குடிப்பது அம்மாக்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பானதுதான். மிதமான அளவில் நீங்கள் குடிக்கும் காபியில் இருக்கும் காஃபைன் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு செல்லும்போது அது அவர்கள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

எவ்வளவு குடிக்கலாம்?
மகப்பேறு மருத்துவர்களின் கருத்துப்படி பாலூட்டும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு 300 மிகி அளவிற்கு காஃபைன் எடுத்துக்கொள்ளலாம். அதாவது ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு மேலும் குடிக்க வேண்டுமென்று ஆசை இருந்தால் காஃபைன் குறைவாக இருக்கும் வேறு பானங்களை குடிப்பது நல்லது.

விளைவுகள்
டீ, காபி மட்டுமின்றி சோடா, சாக்லேட் போன்ற பொருட்களிலும் காஃபைன் உள்ளது. எனவே நீங்கள் எடுத்துக்கொள்ளும் காஃபைன் அளவில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். பொதுவாக காஃபைன் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் குழந்தைகள் சோர்வாக காணப்பட்டாலோ அல்லது பால் குடிக்க மறுத்தாலோ நீங்கள் காஃபைன் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











