Latest Updates
-
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம்
கோடையில் குழந்தையை கூலாக வைப்பதற்கு சில டிப்ஸ்...
குழந்தைகளைப் பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதிலும் கோடைகாலம் ஆரம்பித்து விட்டால், அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் குழந்தைகள் பிறப்பதற்கு முன் கருப்பையில் குளிர்ச்சியான இடத்தில் இருந்ததால், கோடைகாலத்தில் இருக்க முடியாது. அவர்களுக்கு எப்போதும் அதிக வெப்பம் ஆகாது. ஆகவே கோடைக்காலம் ஆரம்பிக்கப் போகிறது என்றால், அதற்கு முன்னரே குழந்தைகளை குளிர்ச்சியுடன் வைப்பதற்கு சிந்திக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு அதிகம் வியர்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு அவர்களுக்கு வேண்டிய சூழ்நிலையை வீட்டிற்குள்ளேயே ஏற்படுத்தி தருவதோடு, ஒருசில செயல்களையும் மேற்கொள்ள வேண்டும். சரி, இப்போது குழந்தைகளை கோடைக்காலத்தில் குளிர்ச்சியுடன் வைப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!!

* தற்போது சூரியக் கதிர்களின் தாக்குதல் அதிகப்படியாக இருப்பதால், குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மதிய வேளையில் அழைத்து செல்வதை அறவே கூடாது.
* குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது, நல்ல காற்றோட்டமாக இருக்கும் குழந்தைகளை வைத்து தள்ளிக் கொண்டு செல்லும் தள்ளுவண்டியைப் பயன்படுத்துவது நல்லது. மேலும் இவ்வாறு தள்ளுவண்டி வாங்கும் போது, குழந்தைகளை இறுக்குமாறு இல்லாமல், சற்று இடம் அதிகமாக இருக்கும் வகையில் வாங்குவது நல்லது. அதிலும் எடைகுறைவாக உள்ள நைலானால் செய்யப்பட்ட தள்ளுவண்டியை பயன்படுத்துவது நல்லது.
* கோடை காலத்தில், அதிக வெப்பத்தின் காரணமாக உடலில் வறட்சியானது அதிகமாக இருக்கும். எனவே குழந்தைகளுக்கு அவ்வப்போது அதிகப்படியான தண்ணீரைக் கொடுத்து வர வேண்டும். இதனால் உடல் வறட்சியை நீக்கலாம்.
இவையே குழந்தைகளை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான சில எளிமையான வழிகள்.



Click it and Unblock the Notifications