Latest Updates
-
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்!
கோடையில் குழந்தையை கூலாக வைப்பதற்கு சில டிப்ஸ்...
குழந்தைகளைப் பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதிலும் கோடைகாலம் ஆரம்பித்து விட்டால், அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் குழந்தைகள் பிறப்பதற்கு முன் கருப்பையில் குளிர்ச்சியான இடத்தில் இருந்ததால், கோடைகாலத்தில் இருக்க முடியாது. அவர்களுக்கு எப்போதும் அதிக வெப்பம் ஆகாது. ஆகவே கோடைக்காலம் ஆரம்பிக்கப் போகிறது என்றால், அதற்கு முன்னரே குழந்தைகளை குளிர்ச்சியுடன் வைப்பதற்கு சிந்திக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு அதிகம் வியர்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு அவர்களுக்கு வேண்டிய சூழ்நிலையை வீட்டிற்குள்ளேயே ஏற்படுத்தி தருவதோடு, ஒருசில செயல்களையும் மேற்கொள்ள வேண்டும். சரி, இப்போது குழந்தைகளை கோடைக்காலத்தில் குளிர்ச்சியுடன் வைப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!!

* தற்போது சூரியக் கதிர்களின் தாக்குதல் அதிகப்படியாக இருப்பதால், குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மதிய வேளையில் அழைத்து செல்வதை அறவே கூடாது.
* குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது, நல்ல காற்றோட்டமாக இருக்கும் குழந்தைகளை வைத்து தள்ளிக் கொண்டு செல்லும் தள்ளுவண்டியைப் பயன்படுத்துவது நல்லது. மேலும் இவ்வாறு தள்ளுவண்டி வாங்கும் போது, குழந்தைகளை இறுக்குமாறு இல்லாமல், சற்று இடம் அதிகமாக இருக்கும் வகையில் வாங்குவது நல்லது. அதிலும் எடைகுறைவாக உள்ள நைலானால் செய்யப்பட்ட தள்ளுவண்டியை பயன்படுத்துவது நல்லது.
* கோடை காலத்தில், அதிக வெப்பத்தின் காரணமாக உடலில் வறட்சியானது அதிகமாக இருக்கும். எனவே குழந்தைகளுக்கு அவ்வப்போது அதிகப்படியான தண்ணீரைக் கொடுத்து வர வேண்டும். இதனால் உடல் வறட்சியை நீக்கலாம்.
இவையே குழந்தைகளை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான சில எளிமையான வழிகள்.



Click it and Unblock the Notifications