Latest Updates
-
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..!
குட்டிப்பாப்பாவுக்கு பசும்பால் கொடுக்கறீங்களா? கொஞ்சம் படிங்க!

தாய்ப்பால்தான் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்ற ஊட்டச்சத்து மிக்க உணவு. ஆறுமாதம் வரை தாய்ப் பால் மட்டும் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று குழந்தை நல நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தாய்ப்பாலுக்குப் பதிலாக பலரும் பசுவின் பாலை குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ஜீரணம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் என்பது நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பசுவின் பாலில் அதிகளவு புரதச்சத்து உள்ளது. இந்தப் புரதச்சத்து, குழந்தைகளின் சிறுநீரகம் உரிய வளர்ச்சியைப் பெறாத நிலையில் இருக்கும் என்பதால் அவற்றில் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று தேசிய குடும்ப நல சர்வேயில் தெரியவந்துள்ளது.
தாய்ப்பாலில் குறைந்த அளவு கலோரிகளும், புரதச்சத்தும் உள்ளது. இதனை குடித்து வளரும் குழந்தைகள் வளர்ச்சி சராசரியாக இருக்கும். அதேசமயம் பசுவின் பாலில் தாய்ப்பாலை விட மூன்று மடங்கு புரதச்சத்தும், கொழுப்பும் அதிகமாக உள்ளது. இதனால் உடல் பருமன் சட்டென்று அதிகரிக்கும் என்கின்றனர். பெரியவர்களுக்கும், வளர்ந்த குழந்தைகளுக்கும் பசுவின் பால் நன்மை தரலாம் அதேசமயம் பிறந்த குழந்தைகளுக்கு இது ஏற்றதல்ல என்பதே நிபுணர்களின் அறிவுரை.
பசுவின் பால் கொடுப்பதனால் குழந்தைகளுக்கு ஜீரணமாகாமல் வாந்தி எடுத்துவிடும். வயிற்றுப்போக்கு ஏற்படும். வயிறு வலியால் அவதிப்படும். உதடு, வாய், தொண்டை போன்றவைகளினால் எரிச்சல் ஏற்படும். சளித் தொந்தரவுகள் ஏற்படும். தோல் அரிப்பு போன்றவைகளும் ஏற்படும் என்றும் எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
எனவே உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில், தாய்மார்கள் இதுகுறித்து குடும்ப மருத்துவரைக் கலந்து ஆலோசித்து மாற்று வழி காண வேண்டுமே தவிர பசுவின்பாலைத் தரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.



Click it and Unblock the Notifications