Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
குட்டிப்பாப்பாவுக்கு பசும்பால் கொடுக்கறீங்களா? கொஞ்சம் படிங்க!

தாய்ப்பால்தான் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்ற ஊட்டச்சத்து மிக்க உணவு. ஆறுமாதம் வரை தாய்ப் பால் மட்டும் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று குழந்தை நல நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தாய்ப்பாலுக்குப் பதிலாக பலரும் பசுவின் பாலை குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ஜீரணம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் என்பது நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பசுவின் பாலில் அதிகளவு புரதச்சத்து உள்ளது. இந்தப் புரதச்சத்து, குழந்தைகளின் சிறுநீரகம் உரிய வளர்ச்சியைப் பெறாத நிலையில் இருக்கும் என்பதால் அவற்றில் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று தேசிய குடும்ப நல சர்வேயில் தெரியவந்துள்ளது.
தாய்ப்பாலில் குறைந்த அளவு கலோரிகளும், புரதச்சத்தும் உள்ளது. இதனை குடித்து வளரும் குழந்தைகள் வளர்ச்சி சராசரியாக இருக்கும். அதேசமயம் பசுவின் பாலில் தாய்ப்பாலை விட மூன்று மடங்கு புரதச்சத்தும், கொழுப்பும் அதிகமாக உள்ளது. இதனால் உடல் பருமன் சட்டென்று அதிகரிக்கும் என்கின்றனர். பெரியவர்களுக்கும், வளர்ந்த குழந்தைகளுக்கும் பசுவின் பால் நன்மை தரலாம் அதேசமயம் பிறந்த குழந்தைகளுக்கு இது ஏற்றதல்ல என்பதே நிபுணர்களின் அறிவுரை.
பசுவின் பால் கொடுப்பதனால் குழந்தைகளுக்கு ஜீரணமாகாமல் வாந்தி எடுத்துவிடும். வயிற்றுப்போக்கு ஏற்படும். வயிறு வலியால் அவதிப்படும். உதடு, வாய், தொண்டை போன்றவைகளினால் எரிச்சல் ஏற்படும். சளித் தொந்தரவுகள் ஏற்படும். தோல் அரிப்பு போன்றவைகளும் ஏற்படும் என்றும் எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
எனவே உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில், தாய்மார்கள் இதுகுறித்து குடும்ப மருத்துவரைக் கலந்து ஆலோசித்து மாற்று வழி காண வேண்டுமே தவிர பசுவின்பாலைத் தரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.



Click it and Unblock the Notifications