Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
கைக்குழந்தைகளை குளிக்க வைக்க தெரியவில்லையா?

1. குழந்தை பிறந்து முதல் இரண்டு வாரத்திற்கு சுத்தமான, மென்மையான துணியை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து உடலை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் குழந்தைகளை குளிக்க வைக்கும் போது எப்படி பிடிக்க வேண்டும் என்று நன்கு தெரிந்துவிடும். மேலும் இதன்மூலம் நன்கு பழகியும் கொள்ளலாம்.
2. எப்போதும் குழந்தைகளை குளிப்பாட்டும் போது வெதுவெதுப்பான தண்ணீரையே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இவை குழந்தையின் உடம்பில் இருக்கும் கிருமிகளை அழித்துவிடும். மேலும் அவற்றில் குளிக்க வைத்தால், குழந்தைகளுக்கு சுகமாகவும் இருக்கும்.
3. குழந்தைகளுக்கு குழந்தைகளுக்காக விற்கும் பேபி சோப்பை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் குழந்தையின் சருமமானது மிகவும் மென்மையாக இருக்கும். மேலும் பேபி சோப்பானது கெமிக்கல் இல்லாதது. ஆகவே குழந்தைக்கு வேறு எந்த சோப்பையும் பயன்படுத்தக் கூடாது.
4. குழந்தைக்கு தினமும் குளிப்பாட்ட வேண்டும் என்பதில்லை. கோடை காலத்தில் என்றால் வாரத்திற்கு 4-5 தடவையாவது குளிக்க வைக்கலாம். ஆனால் குளிர், மழை காலம் என்றால் வாரத்திற்கு ஒரு முறை குளிக்க வைப்பதே போதுமானது.
5. குழந்தைகளை குளிப்பாட்டும் இடத்தை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் குழந்தையின் தொப்புள் கொடியானது தண்ணீரில் நனையக் கூடாது. ஏனெனில் பிறந்த உடனே குழந்தையின் தொப்புள் கொடியை கட் செய்து விட்டு, கிளிப் போட்டுவிடுவார்கள். தண்ணீரில் நனைந்தால் அது பாதிக்கப்படும். மேலும் குளிப்பாட்டிய பின்னர் நன்றாக அந்த இடத்தை துடைத்து விட்டு அதற்கென கொடுக்கப் பட்ட பவுடரினை போடவேண்டும். பொதுவாக தொப்புள் கொடி நன்றாக காய்ந்து 5 நாட்களில் உதிர்ந்து விடும். பின்னர் பயமில்லாமல் குளிப்பாட்டலாம்.
6. பிறந்த குழந்தையை குளிக்க வைக்கும் போது, அதன் கழுத்தை நன்கு பிடித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பிறந்த குழந்தையின் கழுத்தானது எப்போதும் தள்ளாடிக் கொண்டே தான் இருக்கும். ஆகவே சரியாக, கவனமாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
7. குழந்தையை குளிக்க வைக்கும் போது கால்களில் படுக்க வைத்து, பிறகு மெதுவாக தண்ணீரை ஊற்ற வேண்டும். அவ்வாறு குளிக்க வைக்கும் போது தலையை பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மேலும் குழந்தையானது அசைந்து கொண்டே இருக்கும், அப்போது ஒரு கையில் குழந்தை கீழே விழுந்து விடாமல் பார்த்துக் கொண்டு, மறு கையில் குழந்தைக்கு சோப்பு போட்டு குளிப்பாட்ட வேண்டும். எப்போதும் உட்கார்ந்தே குழந்தைக்கு குளிப்பாட்டுங்கள், அதுவே குழந்தைக்கும், தாய்க்கும் ஈஸியாக இருக்கம்.
8. பிறகு குழந்தைக்கு குளிக்கும் போது முகத்தில் தண்ணீரை ஊற்ற வேண்டாம். தண்ணீரை தொட்டு முகத்தை துடைத்து விடுங்கள். இல்லையென்றால் குழந்தை மூச்சுவிடத் திணரும். ஆகவே அப்போது கவனமாக இருக்க வேண்டும்.
9. குளிப்பாட்டியப் பிறகு குழந்தையை துடைக்க சுத்தமான டவலை வைத்து உடனே துடைக்க வேண்டும். மேலும் குழந்தையை குளிப்பாட்டி, துடைத்தப் பின் மிகவும் நெருக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் குழந்தையை குளிரில் இருந்து தடுக்கலாம்.
இவற்றையெல்லாம் நினைவில் வைத்து குழந்தையை குளிப்பாட்டுங்கள். நீங்களே உங்கள் குழந்தையை பராமரிப்பதில் சிறந்தவர் ஆகலாம்.



Click it and Unblock the Notifications