Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
பருவமழையில் குழந்தையை பாதுகாக்க சில டிப்ஸ்...

1. எப்போதும் குழந்தைகளுக்கு முறையான சுகாதாரமானது வேண்டும். அதிலும் குழந்தைகளுக்கு பருவமழையின் போது அதிகமாக வியர்த்தால், அப்போது குழந்தைகளுக்கு ஆன்டிசெப்டிக் சோப்பை பயன்படுத்தி தினமும் குளிப்பாட்ட வேண்டும். மேலும் வியர்வையானது ஏற்பட்டால் சுத்தமான துணியை வைத்து துடைத்துவிட வேண்டும். ஏனெனில் அதிகமாக வியர்வை ஏற்பட்டால் குழந்தைக்கு பூஞ்சை தொற்றுநோய்கள், அரிப்பு மற்றும் அலர்ஜி போன்றவை ஏற்படக்கூடும்.
2. பருவமழையின் போது தண்ணீரிலேயே பெரும்பாலான நோய்கள் வருகின்றன. அப்போது குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கும் உணவு மற்றும் குடிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வயிற்றுப்போக்கு ஏற்படும். ஆகவே இது ஏற்படாமல் இருக்க, குழந்தைகளது பால் பாட்டிலை சூடான நீரில் கழுவி, பின் பாலை கொடுக்க வேண்டும். குழந்தைக்கு தாய்பால் உணவு இல்லையென்றால், அப்போது அவர்களுக்கு செய்யும் உணவை, சூடான நீரில் தயாரிக்கவும். மேலும் குழந்தைகளுக்கு உணவை சுத்தமான தட்டு மற்றும் பௌலில் கொடுக்க வேண்டும். அதை விட முக்கியம், உணவை ஊட்டும் முன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
3. குழந்தைகளுக்கு பயன்படுத்தும் துணியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களது துணியை எப்போதும் சூடான நீரில் அலசி பயன்படுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு குளிராமல் இருக்கும் வகையில் துணியை உடுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு இருமல், சளி போன்றவை ஏற்பட்டுவிடும்.
4. குழந்தைகளை கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நிறைய நோய்கள் குழந்தைகளை சீக்கிரம் எளிதாக தாக்கும். ஆகவே அப்போது அவர்களது கை மற்றும் கால்களுக்கு துணியை வைத்து நன்கு போர்த்திவிட வேண்டும். மேலும் தூங்கும் போது கொசு வலைகளை சுற்றி கட்டிவிட வேண்டும். அப்போது கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி அவர்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. அது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
5. குழந்தைகளுக்கு பயன்படுத்தும் நேப்கின்களை இந்த பருவகாலத்தில் ஈரமாக வைத்திருக்க கூடாது. இல்லையென்றால் அவர்களுக்கு தடிப்பு, அரிப்பு போன்றவை ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வாரத்திற்கு ஒரு முறை நகங்களை வெட்டி விட வேண்டும். மேலும் முக்கியமாக வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.
இவ்வாறெல்லாம் செய்தால் குழந்தையானது எந்த ஒரு நோயும் அண்டாமல் மகிழ்ச்சியாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications











