Latest Updates
-
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க..
குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் தாய்ப்பால்!

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால்தான் அருமருந்து. தாய்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதேசமயம் குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் அபாரமாக இருக்கும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தாய்பால் குடித்து வளர்ந்த குழந்தைகள் நேர்மறை எண்ணம் கொண்டவர்களாவும் இருக்கின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
5 மற்றும் 7 வயதுடைய குழந்தைகளையும், 11 மற்றும் 14 வயதுடைய குழந்தைகளையும் ஆய்வாளர்கள் ஆய்விற்கு எடுத்துக்கொண்டனர்.
இதில் தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகள் வாசிக்கும் திறன், எழுதும் திறன் கொண்டவர்களாக இருந்தனர். கணக்கு, அறிவியல் பாடத்தில் அதிக திறன் கொண்டவர்களாகவும் காணப்பட்டனர்.
இங்கிலாந்தில் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது அரிதாகிவருகிறது. 35 சதவிகித சிசுக்கள் ஒருவாரம் மட்டுமே தாய்ப்பால் குடிக்கின்றனராம். 21 சதவிகித குழந்தைகள் நான்கு வாரம் தாய்ப்பால் குடிக்கின்றனர். 7 சதவிகித குழந்தைகள் நான்கு மாதமும், 3 சதவிகிதம் குழந்தைகள் மட்டுமே 6 மாதம் வரை தாய்ப்பால் குடித்திருக்கின்றனராம். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அதேபோல் தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், தாய்ப்பால் குடிக்காத குழந்தையின் மூளை வளர்ச்சி குறைவாக இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பால் மூலம் குழந்தையின் உடல் வேண்டுமானால் நன்கு வளர்ச்சியடையலாம். ஆனால் மூளை வளர்ச்சிக்கு உரியது தாய்ப்பால்தான். எனவே அந்த அரிய தாய்ப்பாலை அன்னை தனது குழந்தைக்கு நிச்சயம் கொடுக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.



Click it and Unblock the Notifications











