Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
பாப்பாவுக்கு பாட்டில் பால் கொடுக்கறீங்களா? ஜாக்கிறதை!

சுடுநீரில் கழுவுங்கள்
கடையில் இருந்து பால் பாட்டிலை வாங்கி வந்த உடனே சுடுநீரில் அவற்றை நன்றாக கழுவ வேண்டும். நிப்பில், பாட்டில் போன்றவைகளை 5 நிமிடம் வரை சுடுநீரில் ஊறவைக்கவும். அப்பொழுதுதான் நுண் கிருமிகள் எதுவும் இல்லாமல் இருக்கும்.
பாலை பாட்டிலில் வைக்காதீர்கள்
குழந்தையின் வயிறு மெதுவாகத்தான் பெரிதாகும். அவை தாய்ப்பால் குடிக்கும் அளவிற்கு மட்டுமே உள்ள இடம். அந்த அளவிற்கு ஏற்பதான் பாட்டிலில் பால் ஊற்றவேண்டும். அதை விடுத்து அதிக அளவிற்கு ஊற்றினால் குழந்தையால் குடிக்க முடியாது மிச்சம் வைத்துவிடும். அந்த பாலை அப்படியே பாட்டிலில் ஸ்டாக் வைக்காதீர்கள். அதை சுத்தம் செய்துவிட்டு பாட்டிலையும் கழுவி விடுங்கள். இல்லையெனில் பாக்டீரியாக குடியேறிவிடும். முக்கியமாக
காய்ச்சிய பாலை எப்போதும் பாட்டிலில் ஊற்றி வைக்காதீர்கள்
உலர்வாக வைத்திருங்கள்
குழந்தையில் பால் பாட்டிலை எப்போதும் உலர்வாக வைத்திருங்கள். ஏனெனில் ஈரமான பாட்டிலில் கிருமிகள் குடியேறும். கூடுமானவரை உலர்வான இடத்தில் தனியாக பாட்டிலை வைத்திருங்கள்.
பாட்டிலை கழுவுவதற்கு என தனியாக உள்ள பிரஸ் பயன்படுத்துங்கள். அதேபோல் நிப்பிலையும் நன்றாக தேய்த்து கழுவுங்கள். பாட்டிலையும், நிப்பிலையும் தனித்தனியாக கழற்றி பாதுகாப்பாக வைக்க வேண்டியது அவசியம்.
பாக்டீரியா கவனம்
பால் பாட்டிலை இந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருந்தால் மட்டுமே அதில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு எந்த வித நோயும் ஏற்படாமல் இருக்கும். இல்லையெனில் வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பாட்டில் பால் அவசியமில்லை. அதையும் மீறி பசும்பால் கொடுக்க விரும்பினால், சங்கிலோ, அல்லது சிறிய டம்ளரிலோ கொடுத்து பழக்கலாம். அதுதான் ஆரோக்கியமானதும் கூட என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.



Click it and Unblock the Notifications











