Latest Updates
-
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
பாப்பாவுக்கு பாட்டில் பால் கொடுக்கறீங்களா? ஜாக்கிறதை!

சுடுநீரில் கழுவுங்கள்
கடையில் இருந்து பால் பாட்டிலை வாங்கி வந்த உடனே சுடுநீரில் அவற்றை நன்றாக கழுவ வேண்டும். நிப்பில், பாட்டில் போன்றவைகளை 5 நிமிடம் வரை சுடுநீரில் ஊறவைக்கவும். அப்பொழுதுதான் நுண் கிருமிகள் எதுவும் இல்லாமல் இருக்கும்.
பாலை பாட்டிலில் வைக்காதீர்கள்
குழந்தையின் வயிறு மெதுவாகத்தான் பெரிதாகும். அவை தாய்ப்பால் குடிக்கும் அளவிற்கு மட்டுமே உள்ள இடம். அந்த அளவிற்கு ஏற்பதான் பாட்டிலில் பால் ஊற்றவேண்டும். அதை விடுத்து அதிக அளவிற்கு ஊற்றினால் குழந்தையால் குடிக்க முடியாது மிச்சம் வைத்துவிடும். அந்த பாலை அப்படியே பாட்டிலில் ஸ்டாக் வைக்காதீர்கள். அதை சுத்தம் செய்துவிட்டு பாட்டிலையும் கழுவி விடுங்கள். இல்லையெனில் பாக்டீரியாக குடியேறிவிடும். முக்கியமாக
காய்ச்சிய பாலை எப்போதும் பாட்டிலில் ஊற்றி வைக்காதீர்கள்
உலர்வாக வைத்திருங்கள்
குழந்தையில் பால் பாட்டிலை எப்போதும் உலர்வாக வைத்திருங்கள். ஏனெனில் ஈரமான பாட்டிலில் கிருமிகள் குடியேறும். கூடுமானவரை உலர்வான இடத்தில் தனியாக பாட்டிலை வைத்திருங்கள்.
பாட்டிலை கழுவுவதற்கு என தனியாக உள்ள பிரஸ் பயன்படுத்துங்கள். அதேபோல் நிப்பிலையும் நன்றாக தேய்த்து கழுவுங்கள். பாட்டிலையும், நிப்பிலையும் தனித்தனியாக கழற்றி பாதுகாப்பாக வைக்க வேண்டியது அவசியம்.
பாக்டீரியா கவனம்
பால் பாட்டிலை இந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருந்தால் மட்டுமே அதில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு எந்த வித நோயும் ஏற்படாமல் இருக்கும். இல்லையெனில் வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பாட்டில் பால் அவசியமில்லை. அதையும் மீறி பசும்பால் கொடுக்க விரும்பினால், சங்கிலோ, அல்லது சிறிய டம்ளரிலோ கொடுத்து பழக்கலாம். அதுதான் ஆரோக்கியமானதும் கூட என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.



Click it and Unblock the Notifications