Latest Updates
-
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா?
இந்த 6 கேள்விகளை உங்கள் குழந்தைகளிடம் தினமும் கேட்க மறக்காதீர்கள்.. ஏன் தெரியுமா?
வளரும் குழந்தைகளுடன் பெற்றோர்கள் நல்ல உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் இடையே வலுவான உறவு உருவாகும். ஆனால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அவர்களுடன் பழகவில்லை என்று நினைக்கிறார்கள். இந்த பிணைப்புக்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே சரியான தொடர்பு தேவைப்படுகிறது. குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..
இதற்காக அவர்களிடம் நிறைய பேச வேண்டும். எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அவற்றைப் பற்றி பேச ஊக்குவிக்கப்பட வேண்டும். அதற்கு அவர்கள் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இவையெல்லாம் நடக்க, ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடம் தினமும் சில கேள்விகளைக் கேட்க வேண்டும்.

குழந்தைகளுடன் நல்ல உறவை வளர்க்க, அவர்களுடன் நல்ல அழகான நேரத்தை செலவிட வேண்டும். அவர்களின் யோசனைகளைப் பற்றி விவாதிக்கவும். தரமான நேரம் என்பது குழந்தைகளுடன் விளையாடுவது, பேசுவது மற்றும் அவர்கள் விரும்பும் விஷயங்களைச் செய்வது. அந்த நேரத்தில் நீங்கள் பின்வரும் 6 கேள்விகளைக் கேட்டு அவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டறியலாம்.
என்ன உணர்வுகள்?
"நான் உன்னுடன் இருக்கும்போது அல்லது நான் உன்னை விட்டு விலகி இருக்கும்போது, நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?" குழந்தைகளிடம் கேளுங்கள். பின்னர் அவர்கள் தங்கள் விருப்பங்களையும் பயத்தையும் வெளிப்படுத்துவர்கள். அதை வைத்து அவர்களின் முழு உணர்வை நீங்கள் அறிய முடியும்.
குடும்பத்துடன் சேர்ந்திருப்பது
குழந்தைகளுடன் நல்ல பிணைப்பை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த வழி, குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து நேரத்தை கழிப்பது. பின்னர் இதை பற்றி நினைவுகளாக பேசலாம். அப்படி பேசும் போது, அவர்களிடம், "உங்கள் குடும்பத்துடன் நீங்கள் சேர்ந்து இருந்ததில் உங்களுக்கு பிடித்தது என்ன? என்று கேளுங்கள்... அவர்களின் பதில்கள் மிகவும் சுவாரஸ்யமானவையாக இருக்கும்..
முக்கியமாக பெற்றோர்கள் குழந்தைகள் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இந்த வழியில் நீங்கள் அவர்களுடன் நன்றாக பேசிக் கொள்ளலாம் மற்றும் அவர்களை நன்றாக புரிந்து கொள்ளலாம். சில குழந்தைகள் பெற்றோரிடம் பேச பயப்படுவார்கள். அதனால் பெற்றோர்கள் அவர்களை சுதந்திரமாக பேச ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பளிக்க வேண்டும்.
மன அழுத்தம் இருக்கா?
இன்றைய உலகில் மன அழுத்தம் குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் குழந்தைகளின் மனநலம் குறித்து பெரியவர்கள் விசாரிக்க வேண்டும். எதையும் பற்றி அழுத்தமாக உணர்கிறீர்களா? கேட்டால், குழந்தைகள் மனம் திறந்து பேசும் வாய்ப்பு அதிகம். அவர்களின் பதிலைப் பொறுத்து, அவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க முடியும். இதைச் செய்வதன் மூலம், குழந்தைகள் உணர்ச்சிப் பிரச்சினைகளை சமாளித்து உங்களுடன் அதிகம் இணைந்திருப்பார்கள்.
ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் உள்ளதா?
வளரும் குழந்தைகளின் மனதில் பல கேள்விகள் இருக்கும். சில சமயம் எதையும் கேட்க வெட்கப்படுவார்கள். அத்தகைய சூழ்நிலைகளில், நீங்கள் ஏதாவது தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா? நேரடியாகக் கேட்பது நல்லது. இது குழந்தைகளை மனம் திறக்க வைக்கும்.
விருப்பத்தேர்வுகள் பற்றிய கேள்விகள்
குழந்தைகளுடன் நல்ல உறவை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த வழி, அவர்களின் விருப்பங்களைப் பற்றி அவர்களிடம் கேட்பது. உனக்கு என்ன சந்தோஷம்? குழந்தைகள் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
புதிதாக எதையும் கற்றுக் கொள்ளலாமா?
சில குழந்தைகள் தங்கள் எண்ணங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில், நீங்கள் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? என்று குழந்தைகளிடம் கேட்பது நல்லது. புதிய மொழி கற்பதில் ஆர்வம் காட்டினால், நீச்சல், நடனம், பாட்டு போன்றவற்றில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஆதரவளிக்க எப்போதும் நீங்கள் தயாராக இருத்தல் வேண்டும். அப்போது அவர்களின் மனம் தன்னபிக்கையுடன் தைரியமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











