Latest Updates
-
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட்-ல் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்சக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உங்களுக்கு மாரடைப்பு வருமான்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இந்த 5 இரத்த பரிசோதனைகளை செய்யுங்க.. -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் ஆகஸ்ட் மாதத்தில் அற்புத பலன்களை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சனி பகவான் வக்ரமடைவதால் இன்று முதல் எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
காஞ்சிபுர கோவில் இட்லியும், அதுக்கேற்ற இட்லி பொடியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம்
சோடாக்கள் குடித்தால் மலட்டுத்தன்மை உண்டாகும் என்பது தெரியுமா?
சோடா குடிப்பதால் மலட்டுத்தன்மை ஆண் பெண் இருவருக்கும் உண்டாகும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதனைப் பற்றிய கட்டுரை இங்கே.
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் அவதிப்படும் பிரச்சனைகளில் ஒன்றுஎன்றால் அது மலட்டுத்தன்மை. மருத்துவர்கள் பலர் இதற்கு கூறும் காரணம் நவீன வாழ்க்கை முறையில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செயற்கை முறையில் சுவை கூட்டப்பட்ட சோடாக்களும், காற்றூட்டப்பட்ட பானங்கள் இவை அனைத்தும் மனிதர்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது என்று எச்சரிக்கின்றனர்.

குளிர்பானங்களில் செயற்கை இனிப்பு, அஸ்பார்டேமைக் சேர்க்கப்பட்டிருக்கின்றன, இது பெண்களில் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் கருவுறாமை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் தன்மை கொண்டது.
இயற்கை மற்றும் பாதிப்பில்லாதவை என கருதப்பட்ட அஸ்பார்டேமிலை அமினோ அமிலங்களுடன் சேர்த்து சாப்பிடும் போது அது ஆணின் உயிரணு உற்பத்தியில் ஏற்றத்தாழ்வினை ஏற்படுத்தி உயிரணு இறப்பிற்கு வழிவகுக்கும்.
இந்த மாதிரியான பானங்களை அளவுக்கு அதிகமாக பருகும் போது விந்தணுக்கள் இறப்பதற்கு 90 சதவிகிதம் வரை வாய்ப்பு உள்ளது என்று பல மருத்துவர்கள் தெரிவிக்கினறனர். உடலுறவில் ஏற்பட எடுத்துக் கொள்ளக்கூடிய எந்த ஒரு மருந்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று வல்லுனர்கள் பலர் கூறுகின்றனர்.
அதிகமாக சுவையூட்டப்பட்ட குளிர்பானங்களை பருகும் போது அவை உடல் எடை அதிகரிப்பு மற்றும் சமநிலையற்ற ஹார்மோன்கள் போன்ற பிரச்சனைகளை உண்டு பண்ணும். இது மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும்.
அதிகப்படியான பி.எச். ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்தி, விந்தணுகளுக்கு அசாதாரணமான தன்மை மற்றும் மோசமான தரத்திற்கு வழிவகுக்கும் அல்லது இறுதியில் இறக்க கூட நேரிடலாம் என ஜெய்ஷ்வர் கூறுகிறார்.
பெரும்பாலான மென்மையான பானங்கள் காஃபினேட்டுகள் மற்றும் பிரக்டோஸைக் கொண்டுள்ளன என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர், இது பெண்களுக்கு மத்தியில் உடலில் கோளாறுகள் மற்றும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் அதிக ஆபத்துடன் தொடர்புடையதாகவே உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
எனவே, இது போன்ற குளிர்பானங்களை தவிர்த்து இயற்கை பானங்களைக் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். மலட்டுத் தன்மை ஏற்படுத்தக்கூடிய சுவையூட்டப்பட்ட பானங்களை சுத்தமாக தவிர்த்து உங்கள் உடலை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications



