Latest Updates
-
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத உலகின் சந்தோஷமான நாடு - இந்த நாட்ல பிறக்க கொடுத்த வைச்சிருக்கணும் -
சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க! -
ராகு-கேது பெயர்ச்சி 2026: துலாம் முதல் மீனம் வரை யாருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்?- விளக்கும் ஜோதிடர்! -
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க.. -
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்!
சோடாக்கள் குடித்தால் மலட்டுத்தன்மை உண்டாகும் என்பது தெரியுமா?
சோடா குடிப்பதால் மலட்டுத்தன்மை ஆண் பெண் இருவருக்கும் உண்டாகும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதனைப் பற்றிய கட்டுரை இங்கே.
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் அவதிப்படும் பிரச்சனைகளில் ஒன்றுஎன்றால் அது மலட்டுத்தன்மை. மருத்துவர்கள் பலர் இதற்கு கூறும் காரணம் நவீன வாழ்க்கை முறையில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செயற்கை முறையில் சுவை கூட்டப்பட்ட சோடாக்களும், காற்றூட்டப்பட்ட பானங்கள் இவை அனைத்தும் மனிதர்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது என்று எச்சரிக்கின்றனர்.

குளிர்பானங்களில் செயற்கை இனிப்பு, அஸ்பார்டேமைக் சேர்க்கப்பட்டிருக்கின்றன, இது பெண்களில் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் கருவுறாமை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் தன்மை கொண்டது.
இயற்கை மற்றும் பாதிப்பில்லாதவை என கருதப்பட்ட அஸ்பார்டேமிலை அமினோ அமிலங்களுடன் சேர்த்து சாப்பிடும் போது அது ஆணின் உயிரணு உற்பத்தியில் ஏற்றத்தாழ்வினை ஏற்படுத்தி உயிரணு இறப்பிற்கு வழிவகுக்கும்.
இந்த மாதிரியான பானங்களை அளவுக்கு அதிகமாக பருகும் போது விந்தணுக்கள் இறப்பதற்கு 90 சதவிகிதம் வரை வாய்ப்பு உள்ளது என்று பல மருத்துவர்கள் தெரிவிக்கினறனர். உடலுறவில் ஏற்பட எடுத்துக் கொள்ளக்கூடிய எந்த ஒரு மருந்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று வல்லுனர்கள் பலர் கூறுகின்றனர்.
அதிகமாக சுவையூட்டப்பட்ட குளிர்பானங்களை பருகும் போது அவை உடல் எடை அதிகரிப்பு மற்றும் சமநிலையற்ற ஹார்மோன்கள் போன்ற பிரச்சனைகளை உண்டு பண்ணும். இது மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும்.
அதிகப்படியான பி.எச். ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்தி, விந்தணுகளுக்கு அசாதாரணமான தன்மை மற்றும் மோசமான தரத்திற்கு வழிவகுக்கும் அல்லது இறுதியில் இறக்க கூட நேரிடலாம் என ஜெய்ஷ்வர் கூறுகிறார்.
பெரும்பாலான மென்மையான பானங்கள் காஃபினேட்டுகள் மற்றும் பிரக்டோஸைக் கொண்டுள்ளன என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர், இது பெண்களுக்கு மத்தியில் உடலில் கோளாறுகள் மற்றும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் அதிக ஆபத்துடன் தொடர்புடையதாகவே உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
எனவே, இது போன்ற குளிர்பானங்களை தவிர்த்து இயற்கை பானங்களைக் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். மலட்டுத் தன்மை ஏற்படுத்தக்கூடிய சுவையூட்டப்பட்ட பானங்களை சுத்தமாக தவிர்த்து உங்கள் உடலை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications




