Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனி-சுக்கிரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..
1.30 கோடி தமிழ்நாட்டு பெண்களுக்கு ஜாக்பாட்!! உயர போகிறது மகளிர் உரிமைத்தொகை!!
தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி ரேஷன் கார்டு அடிப்படையில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
1000 ரூபாய் தொகை மாதம் தோறும் 15ஆம் தேதி மகளீரின் வங்கி கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு பல வழிகளில் உதவியாக இருக்கிறது என ஏராளமான பெண்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

தற்போது இந்த திட்டத்தின் கீழ் ஒன்று 1,30,69,831 பெண்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். கடந்த டிசம்பரில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியிலும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் முக்கிய இடம் வகிக்கும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை என்ற வாக்குறுதி தான் கேம் சேஞ்சராக இருந்தது. பெருமளவிலான மகளிர் வாக்குகளை திமுகவுக்கு பெற்றுத்தந்தது.
பொங்கல் பரிசு தொகை ரூ.3,000: எப்படி விநியோகம் செய்ய வேண்டும்? வழிகாட்டுதல்களை வெளியிட்ட அரசு!!
எனவே இந்த தேர்தலிலும் இந்த மகளிர் உரிமைத் தொகை தொடர்பான வாக்குறுதி இரண்டு கட்சிகளுக்கும் பெரிய அளவில் மகளிர் வாக்குகளை பெற்று தரும் ஒரு காரணியாக இருக்கப்போகிறது. திமுகவை பொறுத்தவரை தங்களுடைய தேர்தல் வாக்குறுதியிலேயே மகளிர் உரிமை தொகையை உயர்த்தி அறிவிப்பு வழங்கலாம் என சொல்லப்படுகிறது. அப்படி அறிவிக்கப்பட்டு ஒருவேளை தேர்தலில் திமுக அரசு வெற்றி பெறும் பட்சத்தில் இந்த ஆண்டிலேயே இந்த ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கூடுதலாக கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தற்போது கிடைக்கக்கூடிய 1000 ரூபாய் 1500 ரூபாயாகவும் அல்லது 2000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இல்லை என்றால் திமுக அரசு தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்கலாம் என சொல்லப்படுகிறது. அதாவது ஒரு மாதம் மட்டும் வழங்கிவிட்டு அதன் பின்னர் தேர்தலை எதிர்கொள்வதற்கு திட்டமிடலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொங்கல் பரிசு தொகையில் டிவிஸ்ட் வைத்த அரசு: உங்களிடம் இந்த ரேஷன் கார்டு இருந்தா பணம் கிடைக்காது!!
அதிமுகவும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் நிச்சயமாக சேர்க்கும். கண்டிப்பாக 2000 ரூபாய் என்ற அறிவிப்பாகவே அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் இரண்டு கட்சியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மகளிர் உரிமை தொகை உயரப் போவது நிச்சயம். அந்த வகையில் இந்த ஆண்டு மகளிர் உரிமைத் தொகை பெறக்கூடிய பெண்களுக்கு சிறப்பான ஒரு ஆண்டாக அமையப்போகிறது.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications











