Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை வழிபட்டால் அதீத பலன்கள் கிடைக்குமாம்..!
சூரிய வழிபாடு என்பது உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நிம்மதியை தரக்கூடியது... காலையில் எழுந்து சூரிய உதயத்தின் பொழுது சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நமது உடலும் மனதும் தெளிவாகும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
சூரிய நமஸ்காரம் மற்ற கிழமைகளில் செய்ய முடியாவிட்டாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாயம் செய்ய வேண்டும் எனக் கூறப்படுகிறது. மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை நினைத்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை..

ஞாயிற்றுக்கிழமைகளில் செய்ய வேண்டியவைகள்
1. உண்மையில் சூரிய பகவான் மிக எளிமையான தெய்வம்.. தாமிரக் கோப்பையுடன் தண்ணீர் கொடுத்தால் அவர் மகிழ்ச்சி அடைவார் என்பது ஐதீகம். இதை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் எழுந்து செய்தால் மிகவும் விஷேசம்.. அதாவது சூரிய உதயத்திற்கு முன் எழுந்திருக்க வேண்டும். அப்படி செய்தால் சுவாமியின் அருளும் கிட்டும்.
2. அப்படி காலையில் எழுந்தவுடன் சூரியனை வழிப்பட்டல், நோய் மற்றும் பிற பிரச்சனைகளை நம் வாழ்க்கையிலிருந்து நீக்குகிறது. காரணம், ஞயிற்றுக்கிழமை சூரியனுக்கு உரிய நாளாகும். காலையில் இருந்து சூரிய பகவானை தரிசனம் செய்துவிட்டு தியானம் செய்தால் உடல் ரீதியாக நல்ல பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் தியானம் செய்வது மட்டுமல்லாமல் தானம் செய்தாலும் அதீத பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
3. ஞாயிற்றுக்கிழமைகளில் வெள்ளை நிறத்தை அணிய வேண்டும். ஏனென்றால் சூரியக் கடவுளுக்கு வெள்ளை நிறம் மிகவும் பிடிக்கும். எனவே அன்று முடிந்தவரை வெள்ளை நிறத்தை பயன்படுத்துங்கள்..
4. ஞாயிற்றுக்கிழமைகளில் குளித்துவிட்டு சிறிது நேரம் தியானம் செய்யுங்கள்.. சூரிய பகவானின் மந்திரத்தை உச்சரிக்கவும். இந்த பரிகாரத்தையும் மிகவும் மங்களகரமான முறையில் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். ஓம் சூர்யாய நம, ஓம் பாஸ்கராய நம, ஓம் ஆதித்யாய நம, இந்த மந்திரத்தை ஜபிக்கவும்.
இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யவே கூடாத சில முக்கியமான விஷயங்கள்
1. ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யக்கூடாத முக்கிய விஷயங்களில் தேவையற்ற பயணம். அன்று காலை முதலே பயணங்களை தவிர்ப்பது நல்லது... குறிப்பாக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தொலைதூர பயணத்தை மேற்கொள்ள வேண்டும். தேவையில்லாத தொலைதூர பயணங்களை மேற்கொண்டால் படாத பாடு படுவீர்கள் என கூறப்படுகிறது.
2. ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய மருந்துகளை உடலில் செலுத்தக் கூடாது. உடல் பாதிப்பிற்காக மருத்துவரை அணுகி சாப்பிட மருந்து வாங்கி இருந்தால், அதனை ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்கக்கூடாது. அது தேவையில்லாத விஷயங்களை இழுத்து விடும் என கூறப்படுகிறது.
3. ஞாயிற்றுக்கிழமைகளில் குளித்துவிட்டு சிறிது நேரம் தியானம் செய்யுங்கள்.. சூரிய பகவானின் மந்திரத்தை உச்சரிக்கவும். இந்த பரிகாரத்தையும் மிகவும் மங்களகரமான முறையில் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். ஓம் சூர்யாய நம, ஓம் பாஸ்கராய நம, ஓம் ஆதித்யாய நம, இந்த மந்திரத்தை ஜபிக்கவும்.



Click it and Unblock the Notifications