Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை வழிபட்டால் அதீத பலன்கள் கிடைக்குமாம்..!
சூரிய வழிபாடு என்பது உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நிம்மதியை தரக்கூடியது... காலையில் எழுந்து சூரிய உதயத்தின் பொழுது சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நமது உடலும் மனதும் தெளிவாகும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
சூரிய நமஸ்காரம் மற்ற கிழமைகளில் செய்ய முடியாவிட்டாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாயம் செய்ய வேண்டும் எனக் கூறப்படுகிறது. மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை நினைத்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை..

ஞாயிற்றுக்கிழமைகளில் செய்ய வேண்டியவைகள்
1. உண்மையில் சூரிய பகவான் மிக எளிமையான தெய்வம்.. தாமிரக் கோப்பையுடன் தண்ணீர் கொடுத்தால் அவர் மகிழ்ச்சி அடைவார் என்பது ஐதீகம். இதை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் எழுந்து செய்தால் மிகவும் விஷேசம்.. அதாவது சூரிய உதயத்திற்கு முன் எழுந்திருக்க வேண்டும். அப்படி செய்தால் சுவாமியின் அருளும் கிட்டும்.
2. அப்படி காலையில் எழுந்தவுடன் சூரியனை வழிப்பட்டல், நோய் மற்றும் பிற பிரச்சனைகளை நம் வாழ்க்கையிலிருந்து நீக்குகிறது. காரணம், ஞயிற்றுக்கிழமை சூரியனுக்கு உரிய நாளாகும். காலையில் இருந்து சூரிய பகவானை தரிசனம் செய்துவிட்டு தியானம் செய்தால் உடல் ரீதியாக நல்ல பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் தியானம் செய்வது மட்டுமல்லாமல் தானம் செய்தாலும் அதீத பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
3. ஞாயிற்றுக்கிழமைகளில் வெள்ளை நிறத்தை அணிய வேண்டும். ஏனென்றால் சூரியக் கடவுளுக்கு வெள்ளை நிறம் மிகவும் பிடிக்கும். எனவே அன்று முடிந்தவரை வெள்ளை நிறத்தை பயன்படுத்துங்கள்..
4. ஞாயிற்றுக்கிழமைகளில் குளித்துவிட்டு சிறிது நேரம் தியானம் செய்யுங்கள்.. சூரிய பகவானின் மந்திரத்தை உச்சரிக்கவும். இந்த பரிகாரத்தையும் மிகவும் மங்களகரமான முறையில் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். ஓம் சூர்யாய நம, ஓம் பாஸ்கராய நம, ஓம் ஆதித்யாய நம, இந்த மந்திரத்தை ஜபிக்கவும்.
இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யவே கூடாத சில முக்கியமான விஷயங்கள்
1. ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யக்கூடாத முக்கிய விஷயங்களில் தேவையற்ற பயணம். அன்று காலை முதலே பயணங்களை தவிர்ப்பது நல்லது... குறிப்பாக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தொலைதூர பயணத்தை மேற்கொள்ள வேண்டும். தேவையில்லாத தொலைதூர பயணங்களை மேற்கொண்டால் படாத பாடு படுவீர்கள் என கூறப்படுகிறது.
2. ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய மருந்துகளை உடலில் செலுத்தக் கூடாது. உடல் பாதிப்பிற்காக மருத்துவரை அணுகி சாப்பிட மருந்து வாங்கி இருந்தால், அதனை ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்கக்கூடாது. அது தேவையில்லாத விஷயங்களை இழுத்து விடும் என கூறப்படுகிறது.
3. ஞாயிற்றுக்கிழமைகளில் குளித்துவிட்டு சிறிது நேரம் தியானம் செய்யுங்கள்.. சூரிய பகவானின் மந்திரத்தை உச்சரிக்கவும். இந்த பரிகாரத்தையும் மிகவும் மங்களகரமான முறையில் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். ஓம் சூர்யாய நம, ஓம் பாஸ்கராய நம, ஓம் ஆதித்யாய நம, இந்த மந்திரத்தை ஜபிக்கவும்.



Click it and Unblock the Notifications











