Latest Updates
-
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம்
38 நிமிடங்கள் மட்டுமே நடந்த வரலாற்றின் மிகவும் குறுகிய போர் இதுதான்... இந்த போரில் யார் ஜெயிச்சா தெரியுமா?
உலகில் பல நாடுகள் இப்போது போர் பதற்றத்தில் உள்ளன. கிட்டதட்ட மூன்றாம் உலகப்போர் உருவாகும் நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. போர்களை பற்றி கதைகளும் சரி, படங்களும் சரி எப்போதுமே சுவாரஸ்யமானதாக இருக்கும். போர்களின் வரலாறு என்று வரும்போது உலகில் பல வகையான போர்கள் நடந்துள்ளது.
சில நாட்களில் தொடக்கி முதல் பல வருடங்கள் வரை நீடித்த பல போர்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் அல்லது படித்திருப்போம், ஆனால் சில நிமிடங்கள் மட்டுமே நடந்த உலகின் மிகவும் குறுகிய போரை பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உண்மைதான் ஒரு போர் சில நிமிடங்களிலேயே முடிந்த வரலாறு உள்ளது. அந்த போரைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வரலாற்றின் மிகவும் குறுகிய போர்
மனித வரலாற்றின் மிகவும் குறுகிய கால போர் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக நடந்தது. அந்த போர் 1896 ஆகஸ்ட் 27 அன்று நடந்த ஆங்கிலோ-சான்சிபார் போர், இது சுமார் 38 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது, இது இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகவும் குறுகிய கால போராக அமைந்தது.
போருக்கான காரணம் என்ன?
முந்தைய சுல்தானின் மரணத்தைத் தொடர்ந்து, சான்சிபார் சுல்தான் காலித் பின் பர்காஷ் அரியணையில் இருந்து விலக மறுத்ததைத் தொடர்ந்து போர் தொடங்கியது. அந்த பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க அதிகாரத்தையும், செல்வாக்கையும் கொண்டிருந்த ஆங்கிலேயர்கள், அரண்மனையை விட்டு வெளியேற அவருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
போரின் தொடக்கமும்-முடிவும்
ஆங்கிலேயர்களின் எச்சரிக்கையை காலித் புறக்கணித்தபோது, பிரிட்டிஷ் படைகள் உடனடியாக போரைத் தொடங்கின. ராயல் கடற்படையின் போர்க்கப்பல்கள் சுல்தானின் அரண்மனையின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கின. சில நிமிடங்களில், கடுமையான தாக்குதல்கள் கட்டிடத்தின் பெரும்பகுதியை அழித்தன. ஒரு மணி நேரத்திற்கும் குறைவான குண்டுவீச்சுக்குப் பிறகு, காலித்தின் படைகள் அரண்மனையை விட்டு வெளியேறி ஓடிவிட்டன.
அதனுடன், போர் முடிந்தது. ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிக்கு சாதகமான ஒரு புதிய சுல்தானை விரைவாக நிறுவினர், மேலும் சான்சிபார் மீண்டும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலோ-சான்சிபார் போர் அதன் அளவு அல்லது அது ஏற்படுத்திய அழிவுக்காக நினைவுக்கூரபடவில்லை, மாறாக அது நடைபெற்ற நேரத்திற்காக நினைவுகூரப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்குள், அது தொடங்கி முடிந்தது, வரலாற்றில் இதுவரை நடந்த மிகக் குறுகிய போராக அது வரலாற்றில் இடம் பிடித்தது.
ஆங்கிலோ-சான்சிபார் போரின் பின்னணி
சான்சிபார் என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்போதைய தான்சானியாவின் கடற்கரையில் உள்ள தீவுகளின் குழுவாகும். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இது இந்தியப் பெருங்கடலில் முக்கியமான வர்த்தக மையமாக இருந்தது. இந்த தீவுகள் பல்வேறு வளங்கள் நிறைந்தவையாக இருந்தன, மேலும் பல வர்த்தக வழிகளை கடக்கும் ஒரு முக்கிய இடமாக இருந்தன.
1890-ல், சான்சிபார் பிரிட்டிஷால் பாதுகாக்கப்படும் இடமாக மாறியது. அதாவது சுல்தான் இன்னும் தனது பட்டத்தை வைத்திருந்தார், ஆனால் அரசியல் மற்றும் இராணுவம் இரண்டிலும் உண்மையான அதிகாரம் ஆங்கிலேயர்களின் கைகளில் இருந்தது.
ஆங்கிலேயர்கள் ஏன் சான்சிபாரை பாதுகாத்தனர்?
வர்த்தகம் காரணமாக பிரிட்டன் சான்சிபார் மீது மிகவும் ஆர்வமாக இருந்தது. பிரிட்டிஷ் இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் கப்பல் பாதைகளைக் கட்டுப்படுத்த இந்த தீவுகள் மிக முக்கியமானவையாக இருந்தது. அதுமட்டுமின்றி, பிரிட்டன் மற்ற ஐரோப்பிய சக்திகளுடன், குறிப்பாக ஜெர்மனியுடன் கடுமையான போட்டியில் இருந்தது, ஏனெனில் ஐரோப்பிய நாடுகள் "ஆப்பிரிக்காவுக்கான போராட்டம்" என்று அழைக்கப்படும் சகாப்தத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள பிரதேசங்களை உரிமை கோர பந்தயத்தில் ஈடுபட்டனர்.
சான்சிபார் அமைந்திருந்த இடம், அதன் வர்த்தக மதிப்பு மற்றும் ஐரோப்பிய பேரரசுகளுக்கு இடையிலான போட்டி ஆகியவை 1896 ஆம் ஆண்டு ஆங்கிலோ-சான்சிபார் போருக்கு பின்னணியாக அமைந்தன.



Click it and Unblock the Notifications
