Latest Updates
-
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...!
உலக வரலாற்றில் 8 லட்சம் கோடிக்கு மேல் தானம் செய்துள்ள இவர் ஒரு இந்தியராம்... யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க!
இந்தியாவில் ஏழைகள் எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறார்களோ அதேயளவிற்கு உலக பணக்காரர்களும் இந்தியாவில் அதிகமாக உள்ளனர். இந்திய பணக்காரர்களான முகேஷ் அம்பானி, நாராயண மூர்த்தி மற்றும் கௌதம் அதானி போன்றோர் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்தில் மறைந்த தொழிலதிபரான ரத்தன் டாடா அனைத்து தொழிலதிபர்களுக்கும் மேலாக அதிகளவு நன்கொடை அளித்துள்ளார்.
முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, அசிம் பிரேம்ஜி மற்றும் ஷிவ் நாடார் போன்ற முக்கிய தொழிலதிபர்கள் அனைவரையும் விட ஒரு இந்திய தொழிலதிபர் அதிகளவு செல்வத்தை கிட்டதட்ட ரூ.8,29,734 கோடி ரூபாயை நன்கொடையாக கொடுத்துள்ளார் என்று எடெல்கிவ் அறக்கட்டளை மற்றும் ஹுருன் அறிக்கை தெரிவித்துள்ளது. உலக வரலாற்றில் கடந்த காலத்தில் உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில் கேட்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

யார் இந்த தொழிலதிபர்?
அந்த மாபெரும் தொழிலதிபரின் பெயர் ஜாம்செட்ஜி டாடா. அவர் 1892 ஆம் ஆண்டு இந்திய மக்களின் கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தும் பணியைத் தொடங்கினார். 1904 ஆம் ஆண்டு ஜாம்செட்ஜி இறந்த பிறகு, ரத்தன் டாடா அவரது பரோபகாரப் பாரம்பரியத்தை தொடர்ந்து செய்யத் தொடங்கினார்.
இந்தியாவின் முக்கிய இந்திய கொடையாளரான ஜாம்செட்ஜி டாடா, குஜராத்தில் உள்ள ஒரு ஜோராஸ்ட்ரிய பார்சி குடும்பத்தைச் சேர்ந்தவர், பல கடினமான சவால்களுக்கு மத்தியிலும் தனது வணிக சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினார்.
ஜாம்செட்ஜி டாடா
ஜாம்செட்ஜி டாடா ஒரு விதிவிலக்கான இந்திய தொழிலதிபர் மற்றும் தேசியவாதி. அவரது தொழில்முனைவோர் மனப்பான்மையும், வணிக புத்திசாலித்தனமும் காலனித்துவ இந்தியாவில் இணையற்றதாக இருந்தது. அவரது வணிக வெற்றி தனது நாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பினார். அவரது மனிதாபிமானம் மற்றும் இரக்கம் காலனித்துவ ஆட்சியின் கீழ் ஏழை மக்கள் மீது அவருக்கு தாராள மனப்பான்மை மற்றும் அக்கறை கொள்ள வழிவகுத்தது.
ஜாம்செட்ஜி டாடாவுக்கு ஒரு சிறப்பு குணம் இருந்தது, அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர், தனது தொழிலாளர்கள் மீது சிறப்பு அக்கறை கொண்டிருந்தார், புதிய யோசனைகள் அல்லது வழிமுறைகளை ஏற்றுக்கொள்ள அவர் ஒருபோதும் தயங்கவில்லை. அவர் கடைபிடித்த தொழிலாளர் கொள்கைகள் அந்த காலகட்டத்தில் மிகவும் தொலைநோக்கு பார்வையுடையதாக கருதப்பட்டன. ஃபெரோஸ்ஷா மேத்தா மற்றும் தாதாபாய் நௌரோஜி போன்ற தேசியவாத மற்றும் புரட்சிகரத் தலைவர்களுடனும் அவருக்கு தொடர்புகள் இருந்தன. அரசியல் சுதந்திரத்தின் அடிப்படையாக பொருளாதார சுதந்திரத்தை அவர் கருதினார்.
உலகின் தலைசிறந்த நன்கொடையாளர்கள்
டாடா குழும நிறுவனர் ஜாம்செட்ஜி டாடா, அவர் ரூ.8,29,734 கோடியை மிகப்பெரிய அளவில் நன்கொடையாக வழங்கியுள்ளார். இரண்டாவது இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது தற்போது முன்னால் மனைவி மெலிண்டா ஆகியோர் உள்ளனர், அவர்கள் 74.6 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட் முறையே 37.4 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும், ஜார்ஜ் சோரோஸ் (34.8 பில்லியன் டாலர்) மற்றும் ஜான் டி ராக்பெல்லர் (26.8 பில்லியன் டாலர்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.



Click it and Unblock the Notifications












