Latest Updates
-
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உலகின் மிகவும் விலையுயர்ந்த புடவை தமிழ்நாட்டில் எங்கு தயாரிக்கப்பட்டது? அந்த புடவையின் விலை என்ன தெரியுமா?
உலகின் மிகவும் விலையுயர்ந்த பொருள் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது கார், கடிகாரம் மற்றும் வைரங்கள் போண்றவைதான். இவற்றின் விலை பொதுவாக லட்சங்களில் தொடங்கி கோடிகள் வரை செல்லும். ஆனால் ஒரு புடவை இந்த ஆடம்பர பொருட்களில் ஒன்றாக இருக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
உண்மைதான் இந்த புடவையின் பல விலை பல லட்சங்களாகும். இது விவாஹா பட்டு சேலை என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இந்த சேலை மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் நூற்றுக்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் இணைந்து பல மாதங்கள் கடினமாக உழைத்து இந்த சாதனையை செய்துள்ளார்கள். இது தூய தங்கம் மற்றும் வெள்ளி கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது , இதன் விலை சுமார் 40 லட்சமாகும். கின்னஸ் உலக சாதனைகளின்படி, இந்த சேலை 2018 இல் சாதனை படைத்தது.

இது எங்கு தயாரிக்கப்பட்டது?
இந்த திருமண பட்டு சேலை தூய பட்டினால் தயாரிக்கப்பட்டது மற்றும் சென்னையின் காஞ்சிபுரத்தில் உருவாக்கப்பட்டது. காஞ்சிபுர புடவைகள் உலகம் முழுக்க பிரபலமானவை என்று நாம் நன்கு அறிவோம். 2018 ஆம் ஆண்டில், இந்த தனித்துவமான புடவை ரூ. 39,31,627 க்கு விற்கப்பட்டது, மேலும் இந்த சேலை தங்கம் மற்றும் வெள்ளியால் தயாரிக்கப்பட்டது என்றாலும், இந்த புடவையை உண்மையிலேயே தனித்துவமானதாக மாற்றும் மற்றொரு விஷயம் உள்ளது, அது என்னவென்று மேற்கொண்டு பார்க்கலாம்.
விவாஹா பட்டு சேலையை சிறப்பானதாக மாற்றுவது எது?
இந்த புடவை பிரபல இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மாவின் கலைப்படைப்புகளைக் கொண்டுள்ளது. இதிலுள்ள படங்கள் முதலில் இயந்திர அச்சிட்டுகளைப் போலத் தோன்றினாலும், அவை உண்மையில் திறமையான கலைஞர்களால் கையால் நெய்யப்பட்டவை. சேலையின் பல்லு (தோள்பட்டை மீது படர்ந்திருக்கும் இறுதிப் பகுதி) 1889 ஆம் ஆண்டு வர்மாவின் ஓவியமான "இசைக்கலைஞர்களின் கேலக்ஸி"யின் ஒரு காட்சியைக் காட்டுகிறது, இதில் 11 பெண்கள் அமர்ந்து இசைக்கருவிகளை வாசிப்பது இடம்பெற்றுள்ளது. கலை, பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றின் கலவையே விவாஹா பட்டு சேலையை உலகின் மிக விலையுயர்ந்த சேலையாக மாற்றுகிறது.
இந்த சேலையை செய்ய 36 திறமையான நெசவாளர்கள் மொத்தம் 4,760 மணிநேரம் உழைத்தனர். இவ்வளவு முயற்சி எடுத்தும் கூட, இதனை முழுமையாக முடிக்க 1.5 ஆண்டுகளுக்கும் மேலாகியது. இந்த சேலை 16 வண்ணங்கள் மற்றும் 64 வெவ்வேறு ஷேட் நூல்களைப் பயன்படுத்தி நெய்யப்பட்டது.
விவாஹா பட்டு புடவையை தனித்துவமாக்குவது எது?
இந்த புடவை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்கள் காரணமாக சுமார் 8 கிலோகிராம் எடை கொண்டது. இந்த புடவையில் பயன்படுத்தப்பட்ட -பொருட்களின் பட்டியல்,
- 59.7 கிராம் தங்கம்
- 3.913 காரட் வைரங்கள்
- 120 மில்லிகிராம் பிளாட்டினம்
- 5 கிராம் வெள்ளி
- 2.985 காரட் மாணிக்கங்கள்
- 55 சென்ட் மரகதம்
- புஷ்பராகம் மற்றும் பிற ரத்தினங்கள்
இது புடவை கனமானதாக இருந்தாலும், மற்ற புடவையைப் போலவே இதை எளிதாக அணியலாம்.
இந்த புடவையை வாங்கியது யார்?
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஒருவர் தனது 10-வது ஆண்டு திருமண நாளுக்கு மனைவிக்கு பரிசளிக்க இந்த புடவையை வாங்கினார். 2009 ஆம் ஆண்டில், குவைத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரும் இதேபோன்ற ஒரு புடவையை வாங்கினார்.



Click it and Unblock the Notifications