Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்..
முகலாயர்கள் இந்தியாவையே ஆண்டாலும் அவர்களால் ஏன் நேபாளத்திற்குள் நுழைய முடியவில்லை தெரியுமா?
நேபாளத்தில் நடந்து வரும் உள்நாட்டு கலவரங்களும், வன்முறைகளும் இப்போது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. வரலாறு காணாத வன்முறைகளையும், போராட்டங்களையும் நேபாளம் இப்போது சந்தித்து வருகிறது. 21-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்ட நிலையில், நேபாளத்தின் Zen Z தலைமையிலான அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் நேபாளத்தில் KP Oli அரசாங்கத்தை கவிழ்த்துள்ளன. போராட்டக்காரர்களுக்கு பயந்து பல அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
வேலையின்மை, ஊழல் மற்றும் ஜனநாயகம் மற்றும் முடியாட்சி பற்றிய விவாதத்திற்கு மத்தியில் மற்றொரு வரலாற்று கேள்வியும் எழுகிறது. இந்தியாவின் பெரும்பகுதியை கிட்டதட்ட 300 ஆண்டுகள் முகலாயர்கள் ஆட்சி செய்தார்கள். மிகப்பெரிய இராணுவ வலிமையைக் கொண்டிருந்த முகாலய பேரரசு வட இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தது.

வட இந்தியா முழுவதையும் ஆதிக்கம் செலுத்தியபோதும், ஏன் சிறிய நாடான நேபாளத்தை முகலாயர்களால் கைப்பற்ற முடியவில்லை? இதற்குப் பின்னால் பல புவியியல், அரசியல் மற்றும் கலாச்சார காரணங்கள் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். முகலாயர்களால் நேபாளப் பகுதியை ஏன் கைப்பற்ற முடியவில்லை என்பதற்கான காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இயற்கைக் காரணங்கள்
இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளம் உயரமான மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் குறுகிய பாதைகள் போன்ற இயற்கை அரண்களை கொண்டுள்ளது, இந்த இயற்கை கோட்டையை உடைப்பது எந்த நாட்டு இராணுவத்திற்கும் கடினமாக இருந்தது. முகலாய இராணுவத்தின் மிகப்பெரிய பலமாக இருந்தது அதன் குதிரைப்படை மற்றும் கனரக பீரங்கிகள் ஆகும், ஆனால் அவை மலைப்பகுதிகளை கடந்து செல்வது மிகவும் கடினமாகும், எனவே நேபாளப் போரில் அவை பயனற்றதாக இருந்திருக்கும். அதேசமயம், நேபாள கூர்க்கா வீரர்கள் கொரில்லா போரில் நிபுணர்களாக இருந்தனர், இதன் மூலம், அவர்கள் நேபாளத்திற்கு பாதுகாப்பு அரணாக இருந்தனர்.
சிக்கலான நிலப்பரப்பு
முகலாயர்கள் முக்கியமாக வளமான சமவெளிகள் மற்றும் வர்த்தக நன்மைகள் கொண்ட பகுதிகள் மீது படையெடுப்பதில் ஆர்வமாக இருந்தனர். கங்கா-யமுனா தோவாப், வங்காளம், குஜராத் மற்றும் தக்காணம் போன்ற பகுதிகள் அவர்களுக்கு மிகவும் முக்கியமானவையாக இருந்தது. நேபாளம் கடினமான புவியியல் அமைப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்ட ஒரு பகுதியாக இருந்தது, எனவே அவர்கள் நேபாளத்தை அவர்களுக்கு லாபம் தரும் ஒரு இடமாகக் கருதவில்லை.
அரசியல் காரணங்கள்
முகலாயர்கள் ஆட்சி செய்த காலத்தில் நேபாளம் பல சிறு சிறு நாடுகளாக பிரிந்திருந்தது, ஆனால் வெளிப்புறத் தாக்குதல் நடக்கும் போது, அந்த சிற்றரசுகள் ஒன்றாக இணைந்து அவர்களை எதிர்க்கும். திபெத்-இந்தியா வர்த்தகத்திற்கு நேபாளம் ஒரு முக்கியமான பாதையாக இருந்தது, எனவே முகலாயப் பேரரசு உறவுகளைக் கெடுப்பதற்குப் பதிலாக வர்த்தகத்திற்கு முன்னுரிமை அளித்தது.
மத மற்றும் கலாச்சார அடையாளம்
மத மற்றும் கலாச்சார அடையாளமும் நேபாளத்தை தனித்துவமான நிலப்பரப்பாக வைத்திருந்தது. நேபாள மக்கள் இந்து மற்றும் பௌத்த மரபுகளுடன் ஆழமாகப் பற்று கொண்டிருந்தனர், எனவே அவர்கள் வெளிப்புற முஸ்லிம் ஆட்சியை ஒரு கலாச்சார அச்சுறுத்தலாகக் கருதினர். அதே நேரத்தில், முகலாயர்கள் ஆப்கானியர்கள், ஈரானியர்கள் மற்றும் மராத்தியர்கள் போன்ற பிற அரசுகளுடன் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. அத்தகைய சூழ்நிலையில், நேபாளம் போன்ற கடினமான மற்றும் குறைந்த லாபகரமான பகுதிக்கு அவர்கள் முன்னுரிமை கொடுக்க விரும்பவில்லை.



Click it and Unblock the Notifications
